மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 3 டிசம்பர், 2012

Ragu-Kethu Peyarchchi Maha Yagam ராகு - கேது பெயர்ச்சி மஹா யாகம்

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்
 சார்பாக வேலூர், கொசபெட்டை, ஸ்ரீ அமிர்தலிங்க சுவாமி மடத்தில்
  2-12-2012 அன்று
 ராகு - கேது பெயர்ச்சி மஹா யாகம்
 நடைபெற்றது.
                    நிகழ்ச்சிக்கு நமது சங்க நிறுவனர் M. பாலசுப்ரமணியன், தலைவர் Prof.K.சண்முகம், துணைத்தலைவர் ஜெயரதே, சிறப்பு செயலர் D.ரவிக்குமார், செயலாளர் S.வெங்கடேசன், துனைசெயளர்கள் S.ஆறுமுகம், சுரேஷ் பாபு, ரவிராஜன், பொருளாளர் சாமு, கொ.ப.செ.சிவலிங்கம், மற்றும் நமது சங்க உறுபினர்களுடன், காவேரிபாக்கம் ஜோதிடர் பரசுராமன், கிளிதன்பட்டரை ஜோதிடர் வேலன், பாலம்பாக்கம் ஜோதிடர் சுப்ரமணியன், கண்ணமங்கலம் ராஜ்குமார் மற்றும் ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
                  யாகசாலை செலவுகள் அனைத்தையும் நமது துணை செயலாளர் ஜோதிடசிகரம் S.ஆறுமுகம் அவர்கள் எற்றுகொண்டதுடன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டார்.
                  யாகசாலை பூஜைகளை நமது ஜோதிடமானவர் ஜோதிடஸ்ரீ ராமன் அவர்கள் சிறப்பாக செய்தார்.
                   நிகழ்ச்சியின் முடிவில் நமது சங்க நிறுவனர் எம். பாலசுப்ரமணியன் அவர்கள் "கெடுப்பதில் கெட்டிக்காரன் கேதுவா ? ராகுவா? என்ற தலைப்பில் உரையாற்றி, 12 ராசிகரர்களுக்கும் ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மை தீமைகளை எடுத்துரைத்து அன்பர்களின் ஜோதிட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
                 விழாவில் பிரசாதம் பொறுப்பினை நமது சங்க துணைத்தலைவர் ஜோதிடவித்தகர் ஜெயரதே, மற்றும் நமது சங்க செயற்குழு உறுபினர்கள் ஜோதிடஸ்ரீ சரளா & ஜோதிடஸ்ரீ C.கெஜவல்லி அவர்கள் தாங்களாகவே முன்வந்து  ஏற்றுகொண்டனர்.
                   நவகிரகங்களில் அதிபயங்கர சக்தி வாய்ந்த ராகு & கேது கிரகங்கள் யாகத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அருள் பாலித்தர்கள். விழா இனிதே முடிவுற்றது.
 
நிகழ்ச்சியின் பொது எடுக்க பட்ட போட்டோ படங்கள்.
 

















 









 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக