மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

புதன், 11 டிசம்பர், 2013

ஷேர் வியாபாரம் மூலம் பணக்காரனாவது எப்படி? Share Gainer


ஷேர் வியாபாரம் மூலம் பணக்காரனாவது எப்படி?
 

பத்துக்குடைய அதிபதி நான்கில் இருந்து, அந்த வீட்டின் அதிபதி தன ஸ்தானத்தில் அல்லது திரிகோணங்களில் நின்றால் புதையல் போன்ற யோகங்கள் அதாவது எதிர்பாராத ஒருபெரிய தனம் உழைக்காமல்  கிடைக்கும் என்று ஜோதிட சித்தர் புலிபாணி விளம்புகிறார்.  புலிபாணி சொல்லியதை நாம் அப்படியே எடுத்து கொண்டு பலனை பார்க்க முற்பட்டால் முழு பணக்காரனாக முடியுமா? இத்துடன் அவரவர் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, முக்கியமாக ராகுவின் ரகசியங்களை ஆராய்ந்து பார்த்தால் . . . ஷேர் மார்கட்டின் மன்னர் நீங்களே. . . .

 

கூறப்ப கருமதிநாளில் தோன்ற ,கொற்றவனே குடினாதன் கோணம் ரெண்டில் ,
சீரப்பா சென்மனுக்கு புதையல் கிட்டும் ,செகத்தில் நல்ல பேர்விளங்கும் செய்யுல்வல்லோன் ,
ஆரப்பா அச்வங்கள் காடியுண்டு அப்பனே அன்னசத்திரமுன்கட்டி ,
வீரப்ப வேகுபெர்க்கு அமுதளிப்பான் விதமான புலி பாணி விளம்பினேனே
>>>>புலிபாணி 300
 
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 
 
 

வெள்ளி, 6 டிசம்பர், 2013

செய்திமலர் டிசம்பர் 2013 Seithimalar Dec-2013

ஜோதிட   செய்திமலர்  டிசம்பர் 2013
Seithimalar December 2013
 
 



 
 
 
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

சனி, 23 நவம்பர், 2013

பிரிந்த சகோதரர்களை இணைக்கும் செவ்வாய் -brothers dispute

பிரிந்த சகோதரர்களை இணைக்கும் செவ்வாய்



           செவ்வாய் கேது தசா புக்திகளில் பிரிந்த சகோதரர்கள் ஜென்ம செவ்வாயை கோச்சார குரு பார்க்கும் போதோ அல்லது லக்னாதிபதி மூன்றாமாதி தசா புக்திகளில் ஓன்று சேர வாய்ப்பு.  மூன்றில் செவ்வாய் இருந்தாலும் அல்லது ஒரு பாவ கிரகம் இருந்து அதை வேறு ஒரு சர்பகிரகம் பார்த்தாலும் பிரிந்தவர்கள் சேர்வது இறைவன் கையில். மூன்றாம் இடத்தில் லக்னாதிபதி அமர்ந்துவிட்டால் சகோதரர் திட்டினாலும் கவலை படமாட்டார். உறவு பலப்படும். இதே அமைப்பு லக்னாதிபதியை மூன்றாம் அதிபதி பார்த்தாலும் நடக்கலாம். லக்னாதிபதி பலம் குறைந்து, மூன்றாமாதி பாவியாகி பலம் பெற்று லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ பார்த்தால் உடன்பிறந்தே கொள்ளும் சகோதரம் என அமையவும் வாய்ப்பு.  மூன்றாம் அதிபதி நட்பாகி லாபத்தில் இருந்தால் சகோதரம் மூலம் லாபம் கிடைக்கும். நான்கில் இருந்தால் அவரும் நன்றாக இருப்பார் நமக்கும் அவரால் சுகம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
           நவகிரகத்தில் செவ்வாயை சகோதரகாரர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.

வியாழன், 21 நவம்பர், 2013

திருமண பொருத்தம் கையேடு Matching Guide


திருமண பொருத்தம்
கையேடு
சைவசித்தாந்தரத்னா பஞ்சாங்ககணிதர் ஜோதிடமாமணி

M. பாலசுப்ரமணியன் M.A.
ஆசிரியர்







சனி, 12 அக்டோபர், 2013

நவராத்திரி என்றால் என்ன.? Navaraththiri

நவராத்திரி என்றால் என்ன..؟
 
 
           நவராத்திரி - ஒன்பது ராத்திரி - இந்த ஒன்பது ராத்திரியும் நமது பாராசக்தியை வெவேறு தேவதையாக பாவித்து வணங்குவது. ஒவொவொரு சக்தி தேவியாக வழிபாட்டு இறுதியில் இந்த அனைத்து சக்தியையும் சேர்த்து தசமி திதியில் அதி பயங்கர சக்திவாய்ந்த அன்னை பாராசக்தியாக வழிபடுகிறோம். ஒன்பது நாள் இரவு சக்திபுஜை விரதம் இருந்து செய்து வந்தால் பத்தாவது நாள் நாம் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதை நிச்சயம் அடைவோம், அதனால் தான் " விஜயதசமி " என்கின்றோம்.
 
        நவராத்திரி விரதம்: புரட்டாசி அமாவாசையின் மறுநாள் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் கொலு பூஜை செய்து கன்னிப்பெண்கள் & சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்கும பிரசாதங்கள் தந்தால் துன்பங்கள் நீங்கி வீட்டில் செல்வம் நிலைக்கும்.
      நவராத்திரிவிரதம் இருப்பதால் நாம் சரஸ்வதி, லக்ஷ்மி, ஈஸ்வரி என்கின்ற முப்பெரும் தேவியர்களின் அருளை ஒரே நேரத்தில் பெறுகின்றோம்.
        ஸ்ரீராமன் இந்த நவராத்திரியில் ராவணனுடன் போர்புரிந்து தசமி திதியில் துர்காவை வழிபட்டதால் வெற்றி கிடைத்ததாக சிலர் கூறுகின்றனர்.
     துர்க்கை பத்து நாட்கள் போர் புரிந்து மகிஷாசுரனை வென்ற தசமி திதியில் தசரா விழா கொண்டாடப்படுகின்றது.
     ஜென்ம ஜாதகத்தில் ராகு கேதுவால் உள்மனதிற்குள் ஏற்படும் பயத்தை போக்க இந்த நவராத்திரி விரதம் மிகசிறந்த உபாயமாகும்.
       தசமி வெற்றியின் திதி என்பதால் இன்றைய நாளில் வணிகர்கள் புதுகணக்கை துவக்கி லாபத்தை அடைகின்றனர். குழந்தைகளுக்கு அட்சர ஆரம்பம் இன்றைய நாளில் செய்கின்றனர்.
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 
 
 
 
 

சனி, 5 அக்டோபர், 2013

பணவீக்கம் ஏன்..? - ஜோதிட காரணம் Inflation


இந்தியாவில் பணவீக்கம் ஏன்..? -  ஜோதிட காரணம்.

 
                   கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இந்தியாவின் முக்கிய செய்தியாக பணவீக்கம் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மிக மிக குறைந்து உள்ளது. சொல்லபோனால் 150% மேலாக அமெரிக்க டாலரின் மதிப்பு கூடியுள்ளது. தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. இது போன்ற மாற்றங்களுக்கு காரணம் தான் என்ன?
                  கோட்சார சனிபகவான் கடைதெரு ராசியான துலாத்தில் தங்கியது. இப்படி பார்த்தால் சனி பகவான் துலாராசி பிரவேசம் நடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டதே. இல்லாததை இருப்பது போல் காட்டக்கூடிய கிரகம் உங்களுக்கே தெரியும் ராகு என்று. இப்படிப்பட்ட ராகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக கடைத்தெரு ராசியான துலாத்தில் சனியுடன் கூடியது. அப்பொழுதும் மார்கட் நிலவரம் ஓரளவு சமாளிக்க கூடியதாகவே இருந்தது. ராகுவோ சனியோ ஒரு கெடுதல் செய்ய வேண்டுமென்றால், அதை தூண்டி விடகூடியவர் ஒருவர் இருந்தாக வேண்டும். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ரிஷப ராசியில் பகை ஸ்தானத்தில் அல்லல்லுற்ற குரு பகவான் மறுபடியும் பகை வீடான மிதுனத்திற்குள் புகுந்தார். புகுந்தவுடன் மிருகசிரிஷ நட்சத்திரத்தில் இருந்த வரை அமைதியாகவே தென்பட்டார். திருவதிரைக்குள் நுழைந்தவுடன் துள்ளிகுதித்தார், ஜோதிடத்தில் கிரியாவூக்கி கிரகம் குரு என்று ஜோதிடர்களுக்கு நன்கு தெரியும். மேலும் ஏற்கனவே என்ன காரணம் வரும் என்று எதிர்பார்த்த சனியுடன் கூடிய ராகு, இந்த துள்ளி குதிக்கும் குருவின் பார்வை பெற்றவுடன், இதுவே கிரியாஊக்கியாக அமைந்து வர்த்தகத்தில் தலைகிழ் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார். இது இந்தியாவை எப்படி பாதித்தது என்றால், இந்தியாவின் நட்சத்திரம் பூசம், ராசி கடகம். ஆக, ஜென்மராசியின் ஜீவன வர்த்தக ஸ்தானமான மேஷராசியில் உள்ள கேதுவை குருபார்வை பெற்ற சனியும் ராகுவும் பார்த்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு படுபாதாளத்திற்கு சென்று விட்டது. அமெரிக்க டாலர் மதிப்பு கொடிகட்டி பறக்கின்றது. தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறுகிறது. நாடு முழுவதும் பணவீக்கம் என்ற செய்தி காற்றாய் பறக்கின்றது. இந்தியாவின் ஜென்ம ராசியான கடகத்திற்கு பாக்கிய ஸ்தானமான மீன ராசியின் அதிபதி பன்னிரண்டாம் இடத்தில் மறைவாதால் தங்கத்தினை அனுபவத்திற்கு என்று வாங்காமால், அதையே முதலீட்டாக நினைத்து வாங்க காரணம், இதே ஜென்ம ராசியான கடகத்திற்கு ஆறாமதிபதியான குரு, பன்னிரண்டாம் வீட்டில் மறைந்து வீபரீத ராஜயோகம் ஏற்படுவதால் தான் முதலீட்டு மாற்றம்.
               சரி, இந்தியாவில், ரிசர்வ் பேங்க் மற்றும் வெளிநாடு வர்த்தக கொள்கையில் மாற்றங்கள் வந்துவிட்டது. இதற்க்கு காரணம் குரு பகவான் தனது சுயச்சாராமான புனர்பூசம் சென்ற காரணத்தால் தான். இவை முழுமை அடைந்து ஒரு சீரான மாற்றம் கூடியவிரைவில்  எதிர்பார்க்கின்றது. இருந்தாலும் குரு வக்கிரம் பெற்று மறுபடியும் திருவதிரைக்குள் வரபோகின்றார். உஷாராக வியாபாரிகள் இருக்கவேண்டும், தங்கத்தின்விலை மாற்றம் மறுபடியும் மாறலாம். 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மகாளயம் பட்சம் – Mahalya Patcham.

 
மகாளயம் பட்சம் ஓர் ஜோதிட ஆய்வு.

            இந்துவாக பிறந்தவன் சில கர்மாக்களை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்று வேதசாஸ்திரங்கள் சொல்கின்றது. மனிதர்களுக்கு அனுகிரகம் செய்பவர்கள் தேவர்கள் மற்றும் பித்ருக்கள். தேவர்களை பண்டிகை காலங்களில் வழிபட்டு ஆசிகளை பெறுகிறோம். இதே போல் பித்ருக்களாகிய நம் முன்னோர்களின் ஆசிகளை பெற தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற கர்மாக்களை அமாவாசை, மாத பிறப்பு, சிரார்த்த தினம் மற்றும் மகாளயம் பட்சம் நாட்களில் செய்கிறோம்.
                  மகாளயம் என்பது ஆத்மகாரகன் சூரியன், புதன் வீடாகிய கன்னிராசியில் இருக்கும் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச காலமாகும். இந்த 15 நாட்களில் இறந்தவர்கள் அவரவர் சந்ததிகளை பார்க்க பூலோகம் வந்து நமது வீடுகளில் தங்குவதாக ஐதீகம். இந்த மகாளயபட்ச காலங்களில் அவரவர் முன்னோர்கள், தாய், தந்தை இறந்த திதியிலோ அல்லது பரணி நட்சத்திரத்திலோ அல்லது அஷ்டமி திதியிலோ முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவரவர் குடும்பம் மிகவும் சௌகரியமாக இருக்கும். இது போல் செய்பவர்களுக்கு, பித்ருதோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் பிள்ளை பிறப்பது, குழந்தைகளுக்கு களத்திர தோஷங்கள் இருந்தாலும் நீங்கி நேரத்தில் திருமணம் முடிவது போன்ற உன்னதமான நல்ல பலன்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
                      ஜாதகத்தில் ஐந்தாம் இடம் பாதிப்பு அடைந்தால் இதற்கு காரணமாக பித்ரு தோஷம், பித்ருசாபம் என நமது தர்மசாஸ்திரங்களும், ஜோதிட நூல்களும் கூறுகின்றது. ஜென்ம ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு கேது போன்ற சர்ப்பகிரகங்கள் நின்றால் இது போன்ற தோஷங்கள் மிக கடுமையாகின்றது. இதனால் என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், காலாகாலத்தில் அதாவது அந்தந்த வயதுகளில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளான படிப்பு, திருமணம், குழந்தை பிறப்பு, வீடு வாசல் அமைவது போன்ற நிகழ்வுகள் காலம் தாழ்த்தி நடக்கும், சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். மாறாக குடும்பத்தில் துர்மரணம், வறுமை, அரசதண்டனை, பெண்கள் சோரம் போகுதல் போன்ற வேதனைதரும் நிகழ்வுகள் சில குடும்பங்களில் நடந்து விடுகின்றது. இப்படிப்பட்ட ஜாதகர்கள் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச காலங்களில் சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற கர்மாக்களை அனுஷ்டித்தால் திருப்தியான வாழ்க்கைக்கு வேண்டிய ஆசிர்வாதங்களை நமது முன்னோர்கள் நமக்கு அளிப்பார்கள்.
 
 
 
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================