மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 29 மார்ச், 2013

திருமணத்திற்கு முன்பே சுகத்தின் ருசி. . . .! happiness before marriage..

 
திருமணத்திற்கு முன்பே சுகத்தின் ருசி. . . .!
 


 

                            இன்றைய இந்தியா குறிப்பாக நமது தமிழகம் வெளிநாட்டு மோகத்தில் வேகமாக மூழ்கி வருகிறது. இளைஞ்ர் கண்டதும் காதல் என்ற தத்துவத்தில் உள்ளனர். பள்ளியில் ஒரு பையன் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால் அதை பற்றி கவலை படாமல் உடனடியாக அந்த பையன் நம்மை போல் தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியலை பார்த்து, பட்டியல் நீண்டு இருந்தால் அதிக சந்தோசம் பெறுகிறான். இது போன்ற பிள்ளைகள் மற்ற அனைத்து பிள்ளைகளையும் கெடுத்து விடுகின்றனர்.

                    இதே நிலை காதல் விவகாரத்திலும் நடக்கிறது. ஒவ்வொரு பிள்ளையும் படிக்கும் போதே ஒவ்வொரு துணையை பெற்றிருப்பது பெருமை கொள்ளும் விஷயமாக நினைக்கிறார்கள். இது இன்றைய இளைஞர்களின் அறிவின்மையை காட்டுகிறது. இதற்கு சமுதாயம் முக்கிய காரணமாக அமைந்தாலும், நண்பர்களின் பழக்க வழக்கங்களுமே மிக பெரிய காரணமாக அமைகிறது.

                ஒரு குழந்தை கெடுவதற்கு காரணம் அவர்களது உணர்ச்சிகளின் அழுத்தமே. உணர்வழுத்தம் தரும் இடங்களாக ஜோதிடத்தில் ஐந்தாம் இடம், 5-அதிபதி, சந்திரன் என ஜோதிட வல்லுனர்கள் கூறுகிறார்கள். இவைகள் 1,5,7 இடங்களுடன் சம்பந்தம் பெறும்போது உணர்வுகள் மேலெழுகிறது.

                        எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இவைகளுக்கு மூன்றாமிட பலமும் செவ்வாயும் துணை  நிற்கின்றது. இந்த கிரக அமைப்பில், செவ்வாய்க்கோ அல்லது லக்னத்திற்க்கோ, சுக்ரன் கேந்திரத்தில் அமர்ந்து விட்டால் சிற்றின்பத்தை சுவைக்காமல் விடமாட்டார்கள்.

                      இந்த கூட்டுகளுடன் ராகுவிற்கு சம்பந்தம் ஏற்பட்டு விட்டால் "எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி இது எத்தனையோ தாவுமடி....." என்ற பாடல் படி நடந்துவிடும்.

                  மேலும் பலன்களை அப்படியே சொல்லாமல், குழந்தைகளின் ஜாதகத்தில் குரு மற்றும் லக்னாதிபதியின் அமைப்பை பொறுத்து பலன்கள் கூறவேண்டும். ஜோதிட அடிப்படையில் பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளின் ஜாதகங்களை நன்கு ஆராய்ந்து அதற்கேற்றார் போல் அவர்களை சிறு வயதில் இருந்தே அவர்களை அவர்களுக்கே தெரியாமல்
கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்களிடம் அவர்கள் நண்பர்கள் எப்படி பேசுகிறார்களோ அந்தளவிற்கு முடிந்த வரை பேசவேண்டும். தினமும் அன்றைய பொழுதில் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை ஆவலுடன் கேட்பது போல் கேட்க வேண்டும். அந்த நிகழ்வுகளில் எதாவது சிறு பிழைகள் தென்பட்டால் அவர்களுக்கே தெரியாமல் அவைகளை திருத்த நாம் முயலவேண்டும். மேலும் அன்றைய நிகழ்வுகளை குழந்தைகளிடம் நாமும் சொல்ல வேண்டும். மேலும், நாமும் நல்வழியில் தான் செல்கிறோம் என்பதை அவ்வபொழுது அவர்களுக்கு நினைவூட்டுதல் மிக மிக அவசியம்.

                           இவைகளுக்கும் மேலே நாம் நம்மை சார்ந்த உறவினர்கள், குறிப்பாக பெரியவர்களிடமும் நமது முதியவர்களான நமது அப்பா, அம்மா, பாட்டி, இவர்களிடம் அதிக மரியாதையை நாம் செலுத்த வேண்டும். தொடர்ந்து வீட்டில் நித்ய பூஜையை செய்து கொண்டும் வந்தால் நமது சந்ததியர்களை எந்த ஒரு சக்தியாலும் கெடுக்கவே முடியாது. சந்தோஷம் எங்கும் பரவி நமது வாழ்நாள் முடிவில் குழந்தைகள் கவலையின்றி பேரின்பத்தில் திளைக்க இயலும்.


=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 



 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.



====================================================================================================

 

செவ்வாய், 26 மார்ச், 2013

பிரம்மஹத்தி தோஷம் Brahmahathi Dosham

பிரம்மஹத்தி தோஷம்
 
 
ஐயா வணக்கம்,
         
               ஒருவரது ஜாதகத்தில் ராசிச்சக்கரத்தில் (லக்ன பாகை அடிப்படையில் பாவக சக்கரப்படியும்)  குருவிற்கும் சனிக்கும் தொடர்பு ஏற்பட்டால் அதாவது பரஸ்பர பார்வை, ஒரே பாவகத்தில் இருத்தல்,ஒரே சாரத்தில், பரிவர்தனை இப்படி  ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டால் அது பிரம்மஹத்தி தோஷம் என ஏதோ  ஒரு புத்தகத்தில் படித்தேன்.  இது சரியாசரி எனில் இதனால் ஜாதகர் அடையும் தீமைகள் என்ன
இதில் ஏதேனும் விதிவிலக்குகள் உண்டா?   அதாவது சனி நீசமாகி பார்ப்பது அல்லது சனி மறைந்து பார்ப்பது சனியோடு   சாயாகிரக அமர்வு இப்படி ஏதேனும் காரணத்தால் இந்த தோஷம் இல்லாமல் போகுமா
?
மேலும் சனி நல்ல ஆதிபத்யம் பெற்றிருந்தாலும் இந்த தோஷம் உண்டா?
 

 

அய்யா வணக்கம்,

             பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் எனபது பிரமத்தை அறிந்த ஒருவரை பழிபதுவோ அல்லது அவரை இம்சிப்பதோ ஆகும். சில நேரங்களில் இப்படி பிரமத்தை அறிந்த ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ கொலை செய்துவிட்டால் அதனால் பீடிக்கபடும் தோஷமே இதுவாகும். பிரமத்தை அரிந்தவர் என்று நாம் யாரை கூறலாம், ப்ரஹ்மின் (Brahmin) என்று சொல்லபடுகிற குலத்தையா? இல்லவே இல்லை. பிரமத்தை அறிந்தவன் லௌகிகவாழ்வில் இல்லாதவன். அப்படி என்றால் யார்?
ஆக நமது ஜோதிட சாஸ்திரத்தில் குலத்தின் அடிப்படையில் பிரகஸ்பதி என்கின்ற குருவை தான் அந்தணன் என்கின்றோம். அந்தணன் என்றால் என்ன? ஆதியும் இல்லாதவன், இனி இவனுக்கு பிறகு அந்தமும் இல்லாதவன்.
ஆக இப்படிப்பட்ட குருவை சனி என்கின்ற நேர்மையான கிரகம் நோக்கும் போது இந்த தோஷம் ஏற்படுகிறது. இதன் பலன் என்ன வென்றால் ஒருவன் கொலை செய்துவிட்டால் அவன் மனது என்ன வேதனை படுமோ அந்த அளவிற்கு வேதனை ஜாதகனின் வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் தெரியும். எதுவும் மனதிற்கு திருப்தி இருக்காது. மேலும் இவனுக்கு பிள்ளை பிறப்பது அரிதாகும், அல்லது காலம் தாழ்த்தி பிறக்கும், எப்படி இருந்தாலும், உயிர் போகும் போது ஜாதகனுக்கு பிள்ளை சுகம் இருக்காது, இதற்க்கு பதில் இவருக்கு சோகம் வர வாய்ப்பு உள்ளது.
குருவை சனி கிரகம் எங்கிருந்து பார்த்தாலும் இந்த தோஷம் உண்டு என்று நூல்கள் பல கூறுகிறது, இருந்தாலும் சமசப்தம பார்வையினால் குரு சனியை பார்பதால் இந்த தோஷம் அவ்வளவாக பாதிக்க வாய்ப்பு குறைவு. மற்ற பார்வைக்கு பலம் உண்டு. சனி நீச்சமாகி அல்லது அஸ்தமனமாகி, அல்லது மறைந்து இருந்து எப்படி பார்த்தாலும் இந்த தோஷம் தொடரும்.
இந்த தோஷம் பீடிக்க பட்டவர்கள் அவரவர்களுக்கு ஏற்ற குருநாதரை துணைகொண்டால் தப்பிக்க வழி வரும்.

by

M.Balasubramanian,M.A.,

எம். பாலசுப்ரமணியன்,எம். .,

Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,

Vellore Astrology Researchers Association,

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 


 


 

 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.



====================================================================================================

 

வெள்ளி, 22 மார்ச், 2013

புத்திர தோஷ பாரிகர ஸ்தலம் விரிஞ்சிபுரம் - Virinjeepuram


(புத்திர தோஷ பாரிகர ஸ்தலம் விரிஞ்சிபுரம்)

 மார்க்கத்தை காட்டும் மார்கபந்தீஸ்வரர்.



வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், விரிஞ்சிபுரம் அருள்மிகு மரகதாம்பிகை சமேத மார்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் தற்போது பங்குனி (உத்திர) திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாக நடந்து கொண்டு உள்ளது. நேற்று 21-3-2013 இரவு சுவாமி திருகல்யாண          விழாவினை சைவ கருணீகர் குலத்தினர் ஏற்று நடத்தினார்கள். ஸ்வாமியுனுடைய திருகல்யாண போட்டோஸ்.
ஸ்வாமியின் பெயரே மார்கபந்தீஸ்வரர் என்பதால் திக்கற்றவர்களுக்கு தெய்வமே  துணை என நாம் கூறுவதால், வாழ்க்கையில் திக்கு (திசை/போகும் வழி) தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழி காட்டும் ஸ்தலம் இதுவே ஆகும்.
இந்த கோயில் பிரம்மனே சிறு வயதில் சிவஷர்மாவாக வந்து பூஜை செய்தார் என்றும், அபிஷேகம்  செய்யும் பொது உயரமான லிங்கம் சிறு பையனுக்காக வளைந்து கொடுத்த காட்சியை இன்றும் நாம் இங்கு பார்க்கலாம்.
லக்னத்தில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம் புத்திர தோஷத்தால் பாதிக்கப்ப ட்டவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் சிவனே பிள்ளையாக பிறக்கும் எனபது கண்கூடு.
இந்த ஸ்தலம் குழந்தை பேறு இல்லாதவர்க்கு கை கண்ட இடம், பிராமகஹத்தி தோஷத்தினால் பேய், பிசாசு, பில்லி சூனியத்தால் பாதிக்க பட்டு குழந்தை வரம் வாரதவர்கள் இங்குள்ள சிம்ம குளத்தில் நீராடி இறைவனை ஈரத்துணியுடன் சாஷ்டங்கமாக படுத்து தியானித்தால் அடுத்த வருடத்திற்குள் குழந்தை பெறும் தம்பதிகள் எண்ணிக்கை எண்ணில்லடங்கா.
மேலும் இந்த கோயிலில் இயற்கையின் மூலம் துல்லியமான நேரம் காட்டும் கல்தூண்  ஒன்று உள்ளது. இது ஒரு அதிசயமாகும்.














 

வியாழன், 21 மார்ச், 2013

ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடலாமா? Share Market

ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடலாமா? Share Market

 

டியர் சார்,

            நான் ஷேர் மார்க்கெட்டில் சேர்ந்து அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என நீனைக்கிறேன். என்னுடைய ஜாதகம் படி ஷேர் மார்க்கெட் பிசினஸ் சரிப்படுமா? இல்லை வேறு தொழிலில் ஈடுபடலாமா? இத்துடன் எனது பிறந்த தேதி மற்றும் நேரத்தையும் பிறந்த ஊரினையும் தந்துள்ளேன். தயவு செய்து பார்த்து சொல்லவும்.

இப்படிக்கு 
- - - - - - - - - - - - - - - - -
 
பிறந்த தேதி:  27-3-1975

நேரம்: விடியல் காலை 3.55  am - - -
BITH PLACE:        தஞ்சாவூர் மாவட்டம். மன்னார்குடி அருகில்.
 

 

டியர்   --------------,

உங்கள் ஜாதகம் படி நீங்கள் ஷேர் மார்க்கட்டில் இடுபடலாம் ஷேர் மார்க்கெட்டுக்கு காரணமான கிரகமாக சிலர் சுக்ரனை சொல்கிறார்கள், இருந்தாலும், ஷேர் பிசினஸ் ஒரு தீடிர் வரவு அல்லது நஷ்டம் என்பதால் இதற்கு சரியான காரக கிக்ரகம் ராகுவே. எனவே உங்கள் ஜாதகத்தில் ராகு உச்சம் பெற்று குரு பார்வையில் இருப்பதால் நீங்கள் அதிக லாபமும் பெறலாம்.
சிலர் ஜாதகத்தில் ராகுவுடன் பகை கிரகங்கள் சேர்ந்து நின்று சிறிது லாபத்தை தரும், ஆனால் முடிவில் பெரும் நஷ்டத்தை தந்துவிடும்
  இங்கு உங்கள் ஜாதகம் படி  
புதனின் கிரக நிலையை நோக்கும் போது கடன்கள் அதிகம் வர வாய்ப்பு இருப்பதால், நீங்கள் கடன் வாங்கி ஷேர் மார்க்கட்டில் ஈடுபடுவது உங்கள் சுகத்தை கெடுத்துவிடும். மற்றபடி ஓகே
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================
.
 
 
 
 

செவ்வாய், 19 மார்ச், 2013

வீபரித கண்டங்கள் - Dangerous Accidents

 வீபரித . . . கண்டங்கள். . ? . . ! 

                         லக்னத்தில் சூரியனும் எட்டில்  செவ்வாயும் இருந்து தேய்பிறை சந்திரனுடன் ராகு எங்கு இருந்தாலும் ஜாதகரின் உடலில் வெட்டு காயங்கள் பல இருக்கும். சில நேரங்களில் அவரது இறப்புக்கு இதுவே காரணமாக கூட அமைந்து விடும். அஷ்டமத்தில் செவ்வாய் கடுமையான ஆயுள் தோஷசத்தையும் சந்திரனுடன் சேர்ந்த ராகு ஜாதகரின் உடலை கெடுத்து விடுவதுமே இதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும் இது போன்ற ஜாதக அமைப்புகளை  ஆறாம் அதிபதியின் நிலை மற்றும் லக்ன எதிரிகளின் நிலை அறிந்து சொல்வது நல்லது. இது போன்ற பலன்களை அனுபவிக்க வேறு சில ஜாதக அமைபுகலாவது சனி, சந்திரன், ராகு இவர்கள் லக்னத்தில் இருந்து, கேதுவுடன் சூரியன் எங்கு கூடி இருந்தாலும் ஜாதகர் இறப்பு வெட்டு காயத்தால் அமைய அதிக வாய்ப்பு.
 
                  பொதுவாக லக்னாதிபதி அஷ்டமாதி பதியுடன் சேரக்கூடாது, அப்படி சேர்ந்தாலும், கேந்திரங்களில் இருக்க கூடாது, அப்படி கேந்திரங்களில் இருந்தாலும் அஷ்டமாதி வலு பெற கூடாது. இப்படி பட்ட கிரக நிலை இருந்தால் கெட்ட பலன்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புகளுடன் அஷ்டம ஸ்தானத்தில் பாவிகள் உட்கார்ந்து விட்டால் அந்த ஜாதக குழந்தை பன்னிரண்டு வயது வரை எந்த நேரத்திலும் கண்டங்களை சந்திக்க நேரும். இவைகளுக்கும் மேலாக குரு லக்னத்தையோ அல்லது லக்னாதிபதி யையோ பார்த்து விட்டால் கவலை இல்லை, இல்லை என்றால் தொடர்ந்து குல தெய்வ வழிபாடு வுடன் நித்ய பூஜை ஒன்றே வழி.
                   
                தேய்பிறை சந்திரன் எழிலும், ஆறுக்குரியவன் மறைந்தும் இருந்து இவர்கள் இருவருடன் பாவர்கள் சேர்ந்து சம்பந்தம் பெற்றால் ஜாதகருக்கு வீபத்தினால் உடல் உறுப்புகள் வெட்டு பட்டு தீடீர் ஊனம் ஏற்படவும் வாய்ப்பு.
லக்னாதி பதி அல்லது எட்டுக்குரியவன் குளிகன் எனபடுகின்ற மாந்தியுடன் கூடி 6-8-12 இடங்களில் சுபர் பார்வை இன்றி இருப்பவர்கள் தங்கள் விரோதிகளால் அல்லது கொடியவர்களால் துன்புறுத்த பட்ட பின்னே இறப்பார்கள்.
 
             சனியுடன் ராகு கூடி லக்னத்தில் நின்று அன்றைய தினம் அமாவாசை திதியாக   இருந்து விட்டால் ஜாதக கை கால்கள் இரண்டுமே இழக்க நேரிடும், இதே நிலை சனி ராகுவிற்கு பதில் சுக்ரனுடன் கேது அமைந்து விட்டாலும் 
அமையும், ஆனால்  இந்த செயலை செய்தவர் இவருக்கு இன்பத்தை தந்த வேறு பாலினமாகும். அதாவது ஆண்ணாக இருப்பின் மனைவி அல்லது மனைவி போன்று இருந்த பெண்ணாக இருக்கலாம்.
 
 
 
                   எப்படி பட்ட கிரக தோஷ அமைப்புகள்  இருந்தாலும் குரு பார்வைக்கு பலம் அதிகம் என்பதால் ஜாதகத்தில் தீய இடங்களை குரு பார்த்து விட்டால் எந்த கவலையும் பட தேவை இல்லை. அப்படி குரு பார்வை இல்லாமல் இருப்பவர்கள் தெய்வ அனுகிரகத்துடன் உள்ள மனித ரூபத்தில் உள்ள உங்களுக்கு நல்லவர் என்று தோன்றும் ஒருவரை உங்கள் குரு நாதராக ஏற்று கொண்டு செயல் பட்டால் சாத்சாத் பரப்ரம்ஹமன குரு வடிவான இறைவனே நம் பொருட்டு இப்பூவுலகில் இறங்கி வந்து நம்மை காப்பது திண்ணம்.



=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.



http://www.facebook.com/Balajothidar


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி


M . பாலசுப்ரமணியன், M .A ,


நிறுவனர்,


வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.


செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================
 

சனி, 16 மார்ச், 2013

உதயாதி நாழிகை என்பது மணி கணக்கா? (Nazhikai convertion)

உதயாதி நாழிகை என்பது மணி கணக்கா? (Nazhikai convertion)


           
              உலகில் ஜோதிட கலையில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது எனபது அனைவருக்கும் தெரியும், இதற்கு பிறகு தான் ஐரோப்பிய நாடான கிரேக் நாடு உள்ளது. ஜோதிடம் தெரிய வேண்டுமானால் அடிப்படை கணிதம் தேவை. சாதாரண கணக்கு போதும். ஒன்றே ஒன்று என்னவென்றால் கால நேரத்தை எவ்வளவுக்கு எவ்வளவு நுணுக்கமாக பார்க்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு கணித சுத்தத்தினால் ஜோதிட பலா பலன்கள் சரியாக அமையும் என்று நம் முன்னோர்கள் கருதியதின் காரணமாக ஆங்கிலகாரர்கள் உபயோக படுத்தும் மணி நிமிட விநாடி கணக்கை விட நம்முடைய நாழிகை, (தமிழ்)வினாடி தர்பரை கணக்கை ஏற்படுத்தினார்கள்.
 
                 நம்முடைய நாட்டில் இன்னும் சிலர் நேரம் கடந்து விட்டதை "நாழி ஆகிவிட்டது" கூறுகிறார்கள். நேரத்தை அளக்க பல வழிகள் இருநதாலும், கைசிட்டிகை கணக்கு இன்றும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.
நாழிகை எனபது 24  நிமிடங்கள் ஆகும். ஆக, ஒரு மணிக்கு இரண்டரை நாழிகை ஆகின்றது. இதே போல் ஒரு நிமிடத்திற்கு இரண்டரை (தமிழ்)வினாடி.
நம்முடைய கணக்கு படி கால நேரம் சூரிய உதயத்தில் இருந்து கணக்கு போடுகிறோம். உதயாதி எனபது சூரிய உதயத்தில் இருந்து என்பதாகும். உதயாதி நாழிகை என்பது அன்றைக்கு சூரிய உதயத்தில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரையில் உள்ள கால அளவாகும்.
 
உதாரணமாக, இன்று சூரியன் சென்னையில் காலை 6 மணி 10 நிமிடத்திற்கு உதயமாகிறது என்று வைத்துகொள்வோம். சென்னையில் காலை 10.00 am (Indian Standard Time) க்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால்  நாழிகை வினாடி கணக்கில் கூற வேண்டுமானால்:
 
சூரிய உதயம் : 6.10 IST hour.
அலுவலகம் செல்ல வேண்டிய நேரம் : 10.00 IST hour.
இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலம்: 3 hour 50 minutes.
இதற்கு முன் கிழ்கண்ட அட்டவனையை நன்கு பார்த்து கொள்ளவும்.

1 நாழிகை              : 24 நிமிடம்.
2.5 நாழிகை            : 1 மணி.
1 நிமிடம்                 : 2.5 தமிழ் வினாடி.
60 நாழிகை              : 24 மணி 
24 மணி                    : 1 நாள் 
60 தமிழ் வினாடி   : 1 நாழிகை.
60 நிமிடம்                : 1 மணி 
1 மணி                       : 2.5 நாழிகை
1 மணி                       : 60 நிமிடம் 



இங்கு நாம் 3 மணி 50 நிமிடத்திற்கு பார்க்க வேண்டும் என்பதால், முதலில் இதை அனைத்தையும் நிமிடங்களாக மாற்றி கொள்ளவும். அதாவது 3 மணிக்கு 180 நிமிடம் இத்துடன் 50 நிமிடத்தை கூட்டினால் 230 நிமிடங்கலகிறது.
அதாவது 3 மணி 50 நிமிடம் = 230 நிமிடம்.

1 நிமிடத்திற்கு 2.5 தமிழ் வினாடி , ஆக 230 நிமிடத்திற்கு = 575 தமிழ் வினாடி.
60 தமிழ் வினாடிக்கு 1 நாழிகை என்பதால்,
575 தமிழ் வினாடிக்கு : 9 நாழிகை, 35 தமிழ் வினாடி.
ஆக 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் நாம் உதயாதி நாழிகை 9 35 நாழிகை வினாடிக்கு செல்லவேண்டும் எனலாம்.

இதே போல் அன்றைக்கே ஒரு குழந்தை இரவு 8 மணி 45 நிமிடத்திற்கு சென்னையில் பிறப்பதாக கருதினால், அதனுடைய உதயாதி நாழிகை:

8.45  pm  =  20 hour 45 minutes (IST)
Sun rise : 6.10 hour
Gap between these two:
20.45 minus 6.10 = 14 hour 35 minutes.
or
(14x60)+35 =  875 minutes

1 minute = 2.5 tamil vinadi
therefore
875 minutes = 2187.5 tamil vinadi.

60 tamil vinadi = 1 nazhikai
therefore
2187.5 tamil vinadi = 36 nazhikai 27.5 vinadi.

so, we called as
UDHAYATHI NAZHIKAI : 36.27 1/2

அதாவது 36 நாழிகை இருபத்து ஏழரை வினாடி.