மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

தாம்பத்யசுகமா...ஐயோ வேண்டாம்...Marital displeasures

தாம்பத்யசுகமா...ஐயோ வேண்டாம்...

                            ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திர பொருத்தத்தை விட ஜாதக பொருத்தமே மிக முக்கியமானது என்று ஜோதிடர்கள் கூறினாலும், நட்சத்திரத்தை கொண்டே பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுகிறது. ரஜ்ஜு பொருத்தத்திற்கு அடுத்தபடி மிக முக்கியமான பொருத்தமாக யோனி பொருத்தம் கருதபடுகிறது. இந்த பொருத்தம் இல்லவிட்டாலும் பரவாயில்லை ஆனால் பகை யோனியுடன் திருமணம் நடந்துவிட்டால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்கு தாம்பத்யசுகம் என்றாலே ஒருவித பயம் ஏற்பட்டு, ஐயோ சாமி எனக்கு எந்த சுகமும் வேண்டாம் என்று அலறுவார்கள். மலரினும் மெல்லியது காதல், அதனினும் மெல்லியதாக காமம் இருந்தால்தான் இன்பம்.
இது போன்று அலறும் நட்சத்திரகாரர்களை இப்பொழுது பார்ப்போம்.
                              திருவாதிரை, மூலம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், உத்திராடம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரகாரர்கள் சித்திரை மற்றும் விசாகம் நட்சத்திரகாரர்களை கண்டாலே பயப்படுவார்கள். அவர்களிடம் தனியாக எப்பொழுதும் இருக்க மாட்டார்கள். இந்த இரு நட்சத்திரங்கள் புலி யோனியாக வருவதால் இந்த பயம் ஏற்படுகிறது. இந்த இரு நட்சத்திரகாரர்களை மேற்கூறிய நட்சத்திரகாரர்கள் திருமணம் செய்துகொண்டால் சாந்தி முகூர்த்தம் முதல் கொண்டே தாம்பத்யசுகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு மேற்கூறிய நட்சத்திரகாரர்கள் பிரிந்து சென்றுவிடவும் வாய்ப்பு உள்ளது.
                      இதே போன்று மகம் பூரம் நட்சத்திரகாரர்கள் யோனி எலியாக வருவதால், பாம்பு யோனியான ரோகினி, மிருகசிரிஷம் மற்றும் பூனை யோனியான பூனர்பூசம் ஆயில்யம் நட்சத்திரகாரர்களை பார்த்தாலே ஓடி ஒளிந்து கொண்டுவிடுவார்கள். இவர்கள் தாம்பத்ய சுகத்தை எங்ஙனம் அனுபவிப்பது. இதேபோலே பூனையோனி & பாம்புயோனி உள்ளவர்கள் இதுபோன்ற எலியோனி உடையவர்களை திருமணம் செய்துகொண்டால் இவர்களுக்கு இந்த ஒரு எலி பத்தாமல் வெளியில் சென்று வரவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதே போன்று பூராடம், திருவோணம் நட்சத்திரகாரர்கள் கிருத்திகை, பூசம் இடம் பயந்துவிடுவார்கள். அஸ்வினி சதயம் யோனியாக குதிரை வருகிறது, இதற்கு பகையாக மாடு யோனியாக அஸ்தம், சுவாதி, உத்திராடம் & உத்திரட்டாதி வருகிறது.
                    பகையாக வரும் நட்சத்திரகாரர்களை பார்த்து பயப்படுவதும், அவர்களுக்கு இவர்கள் போதிய திருப்தியை தரமுடியவில்லை என்பதால் அவர்கள் தாம்பத்யசுகத்தில் தடம்மாறி செல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
                       சிலருக்கு இது போன்ற பாதிப்புகள் வாரது, காரணம் அவர்கள் ஜென்ம சந்திரனை குரு பார்ப்பதும், அவர்களின் களத்திர ஸ்தானத்திற்கு சுபர்கள் பார்வை ஏற்படுவதுதே.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
 
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================

திங்கள், 29 ஏப்ரல், 2013

தடையில்லா தாம்பத்யம்.Marital Pleasures


தடையில்லா தாம்பத்யம்.





                   அஸ்வினி நட்சத்ர ஆண் சதய நட்சத்திரம் கொண்ட பெண்ணை மணந்தால் பரஸ்பர யோனி பொருத்தத்தால் தாம்பத்ய சுகம் வாழ்வில் கூடும். கணவன் மனைவி சண்டை இருக்க வாய்ப்பு இல்லை.
இதே போன்று பரணி நட்சத்திரம் கொண்ட ஆண் ரேவதி நட்சத்திரம் கொண்ட பெண்ணை மணந்தால் இதே அளவு சந்தோசம் பெறுவார்கள்.
                    ரோகினி நட்சத்திரம் கொண்ட ஆண் மிருகசிரிஷம் நட்சத்திரம் கொண்ட பெண்ணை திருமணம் செய்வதும், திருவாதிரை நட்சத்திரம் கொண்ட ஆண் மூலம் நட்சத்திரம் கொண்ட பெண்ணையும், பூசம் நட்சத்திரம் கொண்ட ஆண் கிருத்திகை நட்சத்திரம் கொண்ட பெண்ணையும், ஆயில்யம் நட்சத்திரம் கொண்ட ஆண் பூனர்பூசம் நட்சத்திரம் கொண்ட பெண்ணுடனும், மகம் நட்சத்ரம் கொண்ட ஆண் பூரம் நட்சத்திரம் கொண்ட பெண்ணையும், சித்திரை ஆணுடன் விசாகம் பெண் சேர்வதும், கேட்டை ஆணுடன் அனுஷம் பெண் இணைவதும், பூராடம் நட்சத்திரம் கொண்ட ஆண் திருவோணம் நட்சத்ரம் கொண்ட பெண்ணை திருமணம் செய்வதும், பூரட்டாதி நட்சத்திரம் கொண்ட ஆண் அவிட்டம் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தம்பத்யசுகம் தொடர்ந்து 100 % இருக்கும். இவர்கள் இடையில் மனகசப்பு இருக்காது. ஒருவர் சொல்வதை மற்றொருவர் இமை கொட்டாமல் கேட்ப்பார்கள்.
              மேற்கூறிய ஆண் பெண் நட்சத்திரங்கள் மாறி இருந்தால் 75 % இன்பத்திற்கு குறைவில்லை.ஜென்ம ஜாதகத்தில் அயன சயன போக பாக்கிய இடம் சற்று சறுக்கினாலும் இது போன்ற கூட்டு இன்பத்தை பன்மடங்கு பெருக்கி விடும்.

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
  Vellore-632002.


====================================================================================================



சனி, 27 ஏப்ரல், 2013

வரவு எட்டணா... செலவு பத்தணா.. expenses

வரவு எட்டணா...    செலவு பத்தணா..  


 

             ஜாதகம் பார்க்க வருபவர்களில் பெரும்பாலோர் எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை, கையில் பணம் எப்பொழுதும் இருப்பதே இல்லை என்று புலம்புவதை கேட்டிருக்கிறோம். இதற்கு காரணம் தான் என்ன? அவர்களிடம் கேட்கும் போது நிறைய சம்பாதிக்கிறோம், பல வழிகளில் பணமும் வருகிறது, இருந்தாலும் போதவில்லை என்று சொல்கிறார்கள்.
                  இவர்கள் ஜாதகத்தை ஆராயும் போது அனைவருக்கும் புலப்படுவது விரையஸ்தனத்தில் பல பாவிகள் கூட்டு சேர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு பலவழிகளில் பணம் செலவாகும். முக்கியமாக தீய மற்றும் கேளிக்கை போன்ற நிகழ்வுகளினால் விரையம் ஆகும். உதரணமாக, கேது இருப்பின் தானமாக செய்வார்கள், அதை பெறுபவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வீண் பண்ணுவார்கள். இதனால் இவரது தானம் வீண் செலவாக முடியும். 12-இல் ராகு இருப்பவர்கள், தனது சுயதேவைக்கு தேவையில்லாத காரியங்களில் செலவு செய்து அற்ப இன்பத்தை பெறுவார்கள். உதரணமாக,  இப்படிபட்டவர்கள் மது, மங்கை போன்ற வகைகளில் இருப்பதை செலவு செய்துவிட்டு, பிறகு அதிக பணத்தை தண்டமாக செலவு செய்து விட்டேனே என்று வருந்துவார்கள்.  பன்னிரண்டில் சனி இருப்பவர்கள், நிலம் வாங்கி நஷ்டம் அடைந்து, பிறகு அதை விற்று மறுபடியும் வேறு ஒரு இடத்திற்கு முன்பணம் தருவார்கள், பிற்காலத்தில் அதையும் விற்கதான் செய்வார்கள்.
                     சுபகிரகமான சுக்ரன் இருப்பின், நகை & விதவிதமன ஆடைகள் வாங்கி அதிகம் போடாமல் வீண்விரையம் செய்து விடுவார்கள். இருந்தாலும் செலவு செய்தபிறகு வறுத்த படமாட்டார்கள். குரு இருப்பின் மற்றவர்களுக்கு உணவு அளிப்பது மற்றும் பூஜை புனஸ்காரங்களுக்கு மகிழ்ச்சியுடன் செலவு செய்வார்கள்.
                 இதே போன்று பன்னிரண்டாம் அதிபதி குடும்பஸ்தானத்தில் இருந்து விட்டால் குடும்பத்திற்காக எல்லாம் செலவு செய்த பிறகும் பற்றாகுறை பட்ஜெட். சொல்ல போனால் இவர்கள் வாழ்வில் வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற நிலை இறுதி வரை இருக்கும். இந்த அதிபதி ஐந்தில் அமர்ந்தால் குழந்தைகளுக்காக பணத்தை செலவு செய்வார்கள். விரையாதிபதி என்கின்ற இந்த பன்னிரண்டாம் அதிபதி லக்னத்திலேயே இருந்துவிட்டால் எல்லாம் தன் தேவைக்காகவே செலவு செய்வார்கள். இவர்களை எப்பொழுதும் தீய நண்பர்கள் சூழ்ந்து இருப்பார்கள். இவர்களை ஜாதகரே ஒதுக்கினாலும் இது போன்ற நண்பர்கள் இவரை விடமாட்டார்கள்.  சிலர் சதாகாலமும் போதையினால் தன்நிலை மறந்து உலகத்தையும் மறப்பார்கள்.


                
              லக்னத்திற்கு அதிபதியே பன்னிரண்டாம் விட்டில் இருந்து விட்டால், சிலர் தனது, உடல், பொருள், ஆவி போன்ற அனைத்தையும் மதுவிற்கோ அல்லது மங்கைக்கோ அர்ப்பணித்து விடுவார்கள். இவர்கள் மதுக்கடை அல்லது விபச்சாரிகளின் வீடுகளே கதி என்று இருப்பார்கள். இவர்களுடைய உயிர் மேற்கூறிய இடங்கள் அல்லது சாலை ஓரங்களில் தான் பிரியும். ஜோதிட சாஸ்திரத்தில், இதற்கெல்லாம் விடுவு உண்டா என்று சிலர் கேட்பது எனக்கு தெரிகிறது, இது போன்ற ஜாதகம் உள்ளவர்கள் சிலருக்கு கண்டிப்பாக விமோச்சனம் உண்டு, அவைகளை மற்ற கிரகங்களை கொண்டு தான் முடிவு செய்ய முடியும்.
 

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
 
 
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002  cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================


 
 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பஞ்சங்காத்தில் திருகணிதமா வாக்கியமா..Panchangam


    பஞ்சாங்கத்தில் சரியானது     

    திருகனிதமா..?. வாக்கியமா...?..    


 










                     
                ஜோதிடம் பார்க்க திருகனித அடிப்படையில் உள்ள பஞ்சங்க கணிதமே மிக துல்லியமாக கணிக்கபடுவதாக சொல்லபடுகிறது. மேலும், ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் திருகனித முறையில் மத்திய சர்க்காரால் ஏற்றுகொள்ள பட்ட ஒன்று. எனவே உங்கள் ஜென்ம ஜாதக கிரக நிலையை துல்லியமாக அறிய திருகனித முறையை பின்பற்றலாம்.  அவரவர் தோஷங்கள் மற்றும் யோகங்களை அறிய திருகனித முறையில் கணித்த ஜோதிட கணிதமே நடைமுறையில் சரியாக அமைகிறது.
                கோவில் விசேஷங்கள், திதி தர்பனங்கள் விரத தினங்கள், கிரக பெயர்ச்சி பரிகாரங்கள் முதலிய காரியங்களை நம்ம ஊர் ப்ரோகிதர்கள் சொல்லும் வாக்கிய முறையை அனுஸ்டிக்கலாம். ப்ரோகிதர்கள் இல்லாமல் சில காரியங்களை நாமே மேற்கொள்ளும் போது திருகனித முறையை பின்பற்றுவதில் எதுவும் தவறு இல்லை.
                 வாக்கிய திருகனித முறையில் எந்த முறை சிறந்தது என்ற விவாதம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. ஆற்காடு பஞ்சாங்கம், புதுகோட்டை பாம்பு பஞ்சாங்கம், திருக்கோவில் ப்ரோகிதர்கள் பஞ்சாங்கம் போன்றவை வாக்கிய முறையை பின்பற்றி உள்ளது. வாசன் பஞ்சாங்கம், ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் போன்றவைகள் திருகனித முறையை பின்பற்றுகிறது.
           இன்றைய நவீன காலத்தில் இரண்டு முறைக்கும் கம்ப்யூட்டர் மென்பொருள் எளிதில் கிடைகிறது. உலக வலைதளங்களில் பெரும்பான்மையோர் திருகனித முறையில் அமைந்த கணிதங்களை நம்புகின்றனர்.


=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 


 


 

 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.



====================================================================================================


 

 

 

சனி, 20 ஏப்ரல், 2013

நீங்களும் ஜோதிடராகலாம் Want tobe an Astrologer


நீங்களும் ஜோதிடராகலாம்

                ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று மக்களிடையே பரவி வருகிறது. BE ME என்று ஒரு பக்கம் சிலர் படித்தாலும், பலர் இந்த கலையின் மீது ஒரு கண் வைத்திருப்பது நிச்சயம். எத்தனையோ பொறியாளர்கள் ஜோதிடர் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைந்ததை பார்த்திருக்கிறேன். ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி. இது வேதசாஸ்திரங்களின் சாரம்.

                  விஜய நகர பேரரசர் தம்முடைய அரண்மனை மற்றும் அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய அவரவர் ஜாதகங்களை பார்த்து நம்பிக்கை உள்ளவரா, என்று ஆலோசித்தே அரசுப்பணியில் சேர்த்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.  இன்று கூட சில அரசியல் வட்டாரங்களில் நெருங்கியவர்களின் ஜாதகத்தை அலசின பிறகே அவர்களிடம் நெருங்கி பழகுகின்றனர். வியாபாரமுதலீட்டில் கூட்டாளிகளை சேர்க்க பெரியபெரிய கார்போரேட் கம்பனிகள் கூட ஜோதிடம்படி செயல்படுகின்றனர் எனபது வெட்டவெளிச்சம்.

            ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி. பாமரன் முதல் கொண்டு பண்டிதன் வரை அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய கலை பொக்கிஷம். இன்றைய காலகட்டத்தில் சாப்ட்வேர் என்ஜினியரை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்று சவால் விடக்கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. எனவே ஜோதிடம் அவரவர் ஜென்ம ஜாதகத்தில் கிழ்கண்ட கிரக அமைப்பு இருப்பின் நிச்சயம் ஜோதிடகலையில் முழ்கலாம்.


1. லக்னாதிபதி & புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜோதிடம் படிக்க முடியும்.

2. புதன் நீச்சம், பகை அடையமால் 2,5,10,11 இடங்களில் இருந்தால் ஜோதிடம் பார்த்தும் பணம் சம்பாதிக்க முடியும்.

3.புதன் 10 & 11-ம் அதிபதிகள் சம்பந்தம் ஏற்பட்டால் ஜோதிடத்தை தொழிலாக செய்து பெரிய லாபத்தை பெறுவார்.

4. புதனுடன் கேது அல்லது செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவர் ஜோதிடம் கலந்த மாந்திரிக கலையை கற்பதில் ஆர்வம் காட்டுவார்.

5.ராகு என்ற கிரகம் மிதுனம் அல்லது கண்ணியில் இருந்து விட்டாலே ஜோதிடம் தானாக வந்து சேர்ந்துவிடும்.

6. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பலம் ஏற்பட்டு இரண்டாம் இடம் சுத்தமாக இருந்து விட்டால் அவர் சொல்வது அனைத்தும் வேதவாக்கே.

7. சூரியன் 4-இல் இருந்த்விட்டலும் ஜோதிடம் படிக்க நேரிடும்.

8. சனி தனித்து தசம கேந்திரத்தில் நின்று விட்டால் ஜோதிடம் எப்படியும் படிப்பார். இதே சனியை குரு பார்த்துவிட்டாலோ பெரிய ஞானி.

9. புதன், சுக்ரன், குரு இவர்கள் இரண்டில்ராகு கேதுவுடன் சேராமல் இருந்து விட்டால் நல்வாக்கு ஜோதிடர் இவரே.

10. இரண்டாம் இடத்தில் கேது நின்று, சனி அல்லது செவ்வாய் பார்த்து விட்டால் விஷநாக்கு ஜோதிடர் இவரே.

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.








சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

  Vellore-632002.





====================================================================================================

வியாழன், 18 ஏப்ரல், 2013

ரஜ்ஜு பொருத்தத்தின் ரகசியம். Rajju Poruththam

 ரஜ்ஜு பொருத்தத்தின் ரகசியம். 


அன்புள்ள் ஜோதிடர் அவர்களுக்கு,
வணக்கம். எனக்கு ஒரு சிறிய சந்தேகம். நான்  ஒருவரை காதலிக்கிறேன். அவரும் என்னை விரும்புகிறார். அவர் ஒரு ஜாதி, நான் வேறு ஜாதி. 
இன்னும் எங்களுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால என் ஜாதகத்திற்கும் அவர் ஜாதகத்திற்கும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று எனது தோழி கூறினாள். இந்த பொருத்தம் இல்லாதவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள் என்றும் அல்லது விவாகரத்து செய்து விடுவார்கள் என்றும் கூறினாள். நான் இந்த பையனை திருமணம் செய்யலாமா? வேண்டாமா?
 என்னுடைய பிறந்த தேதி 20-10-1981, நேரம் காலை 6.55 am. பிறந்த இடம் சேலம்.
பையனுடைய பிறந்த தேதி 16-9-1978, நேரம் காலை 11.18 am  பிறந்த இடம் ஈரோடு
.இப்படிக்கு 
-----------------------, 
சேலம்.


அன்புடையீர்,
வணக்கம்.
உங்கள் இருவருக்கும் உதர ரஜ்ஜு, அதாவது வயிற்று ரஜ்ஜு. நட்சத்ரங்களை ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்.
சிரசு ரஜ்ஜு,
கண்ட (கழுத்து) ரஜ்ஜு,
உதர (வயிறு) ரஜ்ஜு,
தொடை (மர்மஸ்தான) ரஜ்ஜு,
பாத (கால் பாதங்கள்) ரஜ்ஜு.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு ரஜ்ஜுவாக இருந்தால் பொருத்தம் உள்ளது என்றும், ஒரே ரஜ்ஜுவாக இருந்தால் பொருத்தம் இல்லை என்றும் ஜோதிடம் கூறுகிறது. இதற்க்கு பல காரணங்கள் உள்ளது. நிறைய இடங்களில் இதன படியே ஜோதிட பலன்கள் நடக்கின்றது. ஜென்ம ஜாதகத்தில் தோஷங்களுக்கு எவ்வளவு முக்கியதுவம் தருகிறோமோ அந்த அளவிற்கு இதற்கு நட்சத்ரபொருத்தமான பத்து பொருத்தங்களில் மிக மிக முக்கிய பொருத்தமாக ரஜ்ஜுபொருத்தம் கருதபடுகிறது.
சிரசு ரஜ்ஜு இருவருக்கும் இருந்தால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டையில் ஆயுதங்கள் உபயோக படுத்தபடும்.
கண்டரஜ்ஜு இருவருக்கும் இருப்பின் ஒருவருக்கொருவர் தெரியாமல் மற்றொருவரை ஏமாற்றுவார்கள், சில நேரங்களில் ஒருவரை ஒருவர் மறைந்திருந்து தாக்கவும் முயற்சிப்பர்.
உதரரஜ்ஜு உள்ளவர்கள் இடையில் திருமணம் நடந்தால் குழந்தை பேரு பாக்கியம் இல்லாமல் வாழ்க்கையில் வெறுப்புற்று ஒருவரை ஒருவர் மறைமுகமாக சாடிக்கொல்வர்கள்.
தொடைரஜ்ஜு அல்லது ஊரு ரஜ்ஜு உள்ளவர்களுக்கிடையில் திருமணம் நடைபெற்றால் அற்பசுகங்களுக்காக வீடு, வாசல் முதலிய எல்லா சொத்துக்களையும் பராதீனம் செய்துவிடுவார்கள்.
பாத ரஜ்ஜு உள்ளவர்களுக்கிடையில் திருமணம் நடைபெற்றால் இருவரும் சிவன் போக்கு சித்தம் போக்கு என்று எதிலும் ஒரு பிடித்தம் இல்லாமல் வாழ்நாளை கால்போன போக்கில் மனதை போகவிட்டு வாழ்க்கையில் பற்றற்று பரதேசி என்று பிறர் கூறும் அளவிற்கு குடும்பத்தை விட்டு இருப்பார்கள்.
இவை அனைத்தும் வெறும் நட்சத்ர பலன்களே தவிர, ஜென்ம ஜாதகங்களே பலன்களை தீர்மானிக்கின்றது. எனவே மேற்கூறிய பலன்கள் அப்படியே நடக்கும் என்று நினைக்கமால் இது குறித்த ஓரிரு சம்பவங்கள் வாழ்நாளில் நடந்தேதீரும் என்பதை முன் கூட்டியே அறிவதே இது.
 உங்களுடைய அன்பு மிகவும் ஆழமாக இருப்பின் ஜோதிடம் பார்க்காமல் திருமணம் செய்யலாம். காரணம், ஜோதிடசஸ்திரமே காந்தர்வ திருமணம், குரு நிச்சித்த திருமணம், சகுன நிச்சித்த திருமணம், கர்ப்பம் நிச்சித்த திருமணம் இவைகளுக்கு ஜோதிடம் பார்க்க கூடாது என்றும், இவைகள் இறைவனால் நிச்சயிக்க பட்ட செயல் என்றும் கூறுகிறது. எனவே உங்கள் காதல் பூரண அன்பு கொண்டது என்றால் ஓகே, அல்லது காமம் கலந்தது என்றால் நீங்கள் யோசித்து முடிவு எடுப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.




சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.


====================================================================================================