மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 29 ஜூன், 2013

மாத விலக்கு மாறுவது ஜோதிடத்தில் தெரியுமா..? - mensus problems

மாத விலக்கு மாறுவது ஜோதிடத்தில் தெரியுமா..?
 
 
                                                   ஜோதிடம் கலைகளில் கண்போன்றது. இதன் மூலம் நாம் எதையும் பார்க்கலாம். இது ஒரு ஞானக்கண் என்றால் மிகையாகாது. 
ஜோதிட சாஸ்திரப்படி, மாதவிலக்கினால் கஷ்டப்படும் பெண்கள் யார் யார், அவர்கள் எப்படிப்பட்ட உடல் வலியை வருத்ததுதுடன் அனுபவிக்கின்றனர் என்பதை அவரவர் ஜென்ம ஜாதகம் காட்டிவிடும். சில பெண்கள் மாதவிலக்கு வரும் தேதியை நினைத்த உடனே முகம்வாடிவிடுவார்கள். சிலர் ஏன் இந்த கொடுமையை பெண்களுக்கு மட்டும் கொடுத்தீர்கள் என்று இறைவனிடம் மானசீகமாக சண்டை போடுவார்கள். ஆனால் ஒரு குழந்தை அம்மா என்று கூப்பிடும்போது இந்த கஷ்டம் காணாமல் போய்விடும். தாய்மை பேறு என்கின்ற உயர்ந்த இடத்தில் பெண்களை இறைவன் வைத்துள்ளான் என்பதை பிறகு தெரிந்து கொள்வார்கள்.
                          ஜென்ம ஜாதகத்தில் ரத்தத்திற்கு காரகன் செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால் இந்த மாதந்திர கஷ்டத்தை அனுபவித்தே ஆகவேண்டும். ராகு கிரகம் லக்னத்தில் அமர்ந்து விட்டால் மாதத்தில் பத்து நாட்களுக்கும் மேல் உதிரபோக்கு தொடர்ந்து இருக்கும். லக்னத்தில் கேது என்கின்ற நாகபாம்பு இருந்துவிட்டால், மாதவிலக்கு என்பது மாறி மூன்று மாதத்திருக்கு ஒரு விலக்கு, அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு விலக்கு, ஒரு சிலருக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை என்று கூட ஒழுங்கற்ற நிலையை தந்துவிடும். இதன் கொடுமை என்னவென்றால், அதிக உதிரபோக்கு இருந்துவிட்டால் கூட பரவாயில்லை, இதை போன்ற வேதனை வேறு இல்லை என சொல்லும் அளவுக்கு எது எபொழுது நடக்கும் எனபது தெரியாமலும், ஒரே டென்ஷன், uneasiness, restlessness, போன்ற நிலைகளை ஏற்படுத்தி விடும். ஒரு சிலருக்கு மனநலம் கூட பாதிக்ககூடும்.
                    லக்னத்தில் செவ்வாய் சனி சேர்ந்து இருந்தால் வித்தியாசமான விலக்கு ஏற்பட்டு உடல்நலம் அதிகம் பாதிக்கும். மேலும் திரிகோணங்களில் ராகு அல்லது கேது  இருந்துவிட்டால் சுபநிகழ்வுக்கு செல்லும்போது இது நடந்து விடும். மேலும், சில பெண்களின் கணவர்கள் இவர்களிடம் காரணமே இல்லாமல் சண்டை போட்டு, மேலும் பெண்களை வேதனைக்கு ஆளாக்குவார்கள். இந்தியா போன்ற நம் நாடுகளில் பெண்களே பெண்களை வெறுப்பார்கள். இவைகளை ஜோதிடத்தில் முன்கூட்டியே ஓரளவு அறிந்து அதற்குரிய கிரகநிலைகள் உள்ளதா என தெரிந்துகொண்டு கிரகதேவதைகளை முறையாக வழிபடுவதால் கஷ்டங்களை குறைக்க இயலும்.
                                                                                 ......M.பாலசுப்ரமணியன்,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
 

வியாழன், 27 ஜூன், 2013

திருமண 10 பொருத்தங்கள் - 10 Poruththangal

திருமண   பத்து   பொருத்தங்கள் 



                                       திருமண பத்து பொருத்தங்களில் முதல் பொருத்தம் தின பொருத்தம். தினம் எனபது அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் பெயர்.

 

 

ஜோதிடத்தில் இரண்டாவதாக மிக முக்கிய பொருத்தமாக கருதபடுவது கனப்பொருத்தம். தேவகணம் உள்ளவர்கள் சத்துவ குணம் அதிகம் இருக்கும். ராட்சச குணம் உள்ளவர்கள் அரக்க குணம் மூர்கத்தனம் அதிகம் இருப்பவர்கள். மானுஷ குணம் உள்ளவர்களுக்கு தாமச குணமும் மூர்க்க குணமும் சிறிதளவு சத்துவ குணமும் கலந்து இருக்கும். பெண்கள் தேவ கனத்தில்இருந்தால் வீடு மிக அமைதியாக இருக்கும். ராட்சஸகனத்தில் இருந்தால் சத்தம் அதிகம் இருக்கும் ஆனால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

 

திருமண பொருத்தங்களில் மகேந்திர பொருத்தம் குழந்தை பிறப்பை நமக்கு சொல்லும். இந்த பொருத்தம் இல்லாவிட்டாலும் ஜாதக கட்டத்தில் மாப்பிள்ளையின் ஐந்தாம் இடம் வலுபெற்று இருந்தால் இந்த பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யாலாம்.
 

கல்யாண பொருத்தம் பார்ப்பதில் பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் உள்ளதா என்று இந்த பொருத்தத்தை பார்த்து தான் கூற இயலும். ஜாதகத்தில் ஒரு பெண் விதவை கோலம் போடுவாளா இல்லை என்றும் சுமங்கலியாக இருப்பாளா என்பதை அறிய பெண்ணின் குடும்ப ஸ்தானத்தை உற்று நோக்க வேண்டும். மேலும், மாப்பிள்ளையின் ஆயுள் பலத்தை ஷட் பல நிர்ணய வீதிகளின் படி ஆய்வு செய்து திருப்தி அடைந்த பின்னர் இந்த பொருத்தம் இல்லாவிட்டாலும் திருமணம் செய்யாலாம் என கூறலாம். இல்லாவிட்டால் இந்த பொருத்தம் அவசியமாகிறது.

திருமணம் செய்து கொள்வது எதற்காக..? இருவரும் சேர்ந்து இன்பமுடன் இணைந்து ஈடில்லா மகிழ்ச்சி அடைவதற்காக தானே. சிற்றின்பத்தை ஆசை தீர அனுபவிப்பார்களா இல்லையா என்பதை இந்த யோனி பொருத்தம் நமக்கு எளிதில் கூறிவிடும்.  இதை வெளிப்படையாக கூற இயலாது. இதில் சில மறைபொருள்கள் அடங்கியுள்ளது. ஜோதிடத்தில் ஆர்வமும் சமுகசேவை நோக்கமும் உள்ள ஜோதிடர்களுக்கு மட்டும் விளக்க வேண்டும். இன்றைக்கு விவாகரத்துக்கு தொண்ணுறு சதவிகித காரணங்களுக்கு இந்த பொருத்தம் இல்லாததே காரணம்.

 
 
 


திருமணம் என்று சொன்ன உடனே மாப்பிள்ளை என்ன ராசி, பெண் என்ன ராசி என்று கேட்கிறார்கள். இருப்பது மொத்தம் பன்னிரண்டு ராசிகள். இதில் ஆண் ராசிக்கு பெண் ராசி ஆறு அல்லது ஏட்டில் மறைந்து இருந்தால் இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசவே இயலாது. எப்பொழுதும் பிஸி பிஸி என்று இருவரும் இருப்பார்கள்.  இருவரும் அன்னியோனியமாக பேசுவதற்க்கே டைம் டேபிள் போட்ட பிறகு தான் பேச முடியும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. இவர்கள் எப்படி இல்லறத்தை நல்லறமாக செயாமுடியும் என்று. இருந்தாலும், இருவர் ஜாதகத்திலும்  இந்த விதிக்கு மாற்று விதி இருந்தால் தாரளமாக திருமணம் செய்யலாம்.

 


திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் மனதிற்குள் எந்தெந்த ஆசைகள் உள்ளது எனபது தெரிந்தால், இவரது ஆசையை அவர் கேட்காமலே செய்வார். இப்படி செய்யும் போது இவர் மனம் நாம் நினைத்ததை செய்துவிட்டாரே என்று நினைக்கும் போதே இன்பம் மேலோங்கும். இப்படி இல்லாமல், இவர் சினிமாவிற்கு போலாம் என்றால், இல்லை இல்லை கடைக்கு போக வேண்டும் என்று சொல்லுவார்கள். ஒருவர் சொல்லுக்கு மாற்று கருத்து சொல்லுவார்கள். இப்படியே தினம் தினம் மாற்று கருத்து இருந்தால், என்ன நடக்கும்...? ஒன்று சண்டை நடக்கும் இல்லாவிட்டால் இவர் வழியில் இவர் போவார், அவர் வழியில் அவர் போவார்....தாம்பத்யம் தடம் புரளும்.

கல்யாணம் ஆனவுடன் பெண்டாட்டி காலில் விழ்ந்துவிட்டான் என்று பரவலான பேச்சினை கேட்டு இருப்பிர்கள். இப்படி இருந்து விட்டால் நிச்சயம் அவர்கள் இன்ப உலகத்திற்கு சென்று விட்டார்கள் என்று அர்த்தம். ஆணுக்கு பெண் வசியமாதல், பெண்ணுக்கு ஆண் வசியமாதல், இருவரும் ஒருவருக்கு ஒருவர் வசியமாகி விட்டால் பக்கத்தில் வெடியே வெடித்தாலும் அவர்களுக்கு தெரியாது. " நீ என்னென்ன செய்தாலும் இனிமை, நீ என்னென்ன சொனாலும் புதுமை.." என்ற பழைய எம்ஜிஆர் பாடல் போன்று அவர்கள் வாழ்க்கை அமைந்து விடும். இந்த பொருத்தம் இல்லாவிட்டால், "இத கட்டி என்னத்த சுகம் பெற்றேன்.." என்று அங்காளாயித்து கொள்வார்கள்.

 


திருமண போருத்தன்களிலே மிக மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜு பொருத்தம். ரஜ்ஜு தட்டுகிறது என்று ஜோதிடர்கள் சொல்ல கேட்டிருப்பிர்கள். ரஜ்ஜு தட்டுகிறது என்றால் இருவரும் ஒரே ரஜ்ஜு குருப்பில் உள்ள நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என்று அர்த்தம். நட்சத்திரங்களை ஐந்து குருப்பாகபிரித்துள்ளனர். முதல் குருப்பு தலை குருப்பு. இரண்டாவது கழுத்து குருப்பு. முன்றாவது வயிற்று குருப்பு. நான்காவது தொடை என்கின்ற மர்மஸ்தான குருப்பு. ஐந்தாவதாக கால் பாதம் குருப்பு. ஒரு குருப்பில் உள்ளவர்கள் அதே குருப்பில் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ள கூடாது. அப்படி செய்து கொண்டால் தெய்வ அனுகிரகம் இல்லாதவர்களுக்கு அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கருதபடுகிறது. முக்கியமாக சிரசு மற்றும் கண்டம் ரஜ்ஜு குருப்பு வேதனையை அளித்து விடும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. பத்து பொருத்தங்களில் இந்த பொருத்தம் இல்லாவிட்டால், ஜாதக பொருத்தம் இருந்தாலும் திருமணம் செய்யகூடாது என்று ஜோதிட நூல்கள் சொல்கிறது. மிகவும் ஆழமாக ஆராய்ந்தால் பல விதமான ரகசியங்கள் இந்த பொறுத்தத்தில் மறைந்துள்ளது மேலும் இதை வெளிப்படையாக மக்களிடம் கூறுவதும் முறையற்றது.
 
 

 

திருமண பத்து பொருத்தத்தில் கடைசி பொருத்தமாக இந்த வேதை பொருத்தம் உள்ளது. வேதை என்பது எதிர் மறையானது என்று பொருள். சிலர் இதை வேதிக்கின்றது...அதாவது ரசாயன மாற்றம் அடைகின்றது. வேதித்தல் என்பதால் ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாறுவது உதரணமாக.. சாணிஎடுத்து பிள்ளையார் பிடிக்கலாம் என்று பார்த்தால் அது குரங்காக வந்துவிட்டது என்று சொல்ல கேட்டிருப்பிர்கள். அது போல் தான் இது.  வேதை என்பதை வேதனை செய்யும் என்பதாகவும் பொருள் கொள்ளல்லாம்.

திருமணத்திற்கு பத்து பொருத்தம் மட்டும் போதாது என்றும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேல் பொறுத்த விதிகள் உள்ளதாக பலவித ஜோதிட சுவடிகள் நமக்கு சொல்கிறது. இருந்தாலும், இன்று நாம் பரவலாக இந்த பத்துடன், நாடி பொருத்தம் மற்றும் விருக்ஷ பொருத்தத்தையும் சேர்த்து பார்க்கின்றோம்.

இறைவனின் அனுகிரகம் மணமக்களுக்கு இருந்தால் சில பொருத்தங்கள் இல்லாவிட்டாலும் இன்பத்திற்கு எல்லையில்லாமல் வாழ்வார்கள்.----- M.பாலசுப்ரமணியன், நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
 
 
==========================================================================================
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================
 
 

புதன், 19 ஜூன், 2013

பின்னாஷ்டவர்கத்தில் மதிப்பெண் குறைந்தால்.... Pinnastavargam


உச்சம் பெற்ற கிரகம் பின்னாஷ்ட வர்கத்தில்
 
மதிப்பெண் குறைந்தால்....
 
 

·         ஐயா நீசமடைந்த கிரகம் சுயவர்க்க தில் 7 மதிப்பெண்கள் பெற்றால்

அல்லது உச்சம் அடைந்த கிரகம் சுயவர்க்க தில் 3 மதிப்பெண்கள் பெற்றால்

அந்த கிரகம் தின் வலிமை எவ்வாறு எவ்வாறு எடுத்துகொள்வது ........??

நன்றி

 

அனந்த குமார்



ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதமான விதிகள் உள்ளது. அதில் ஒன்று உச்சம், நீச்சம். இதே போல் மற்றொன்று தான் அஷ்ட வர்க்க கணக்கு. நீங்கள் இப்படி டைரக்ட் ஆக பலன் சொல்ல போனால் பலன்கள் பிசகும். எல்லா விதிகளையும், கூட்டி, கழித்து பார்த்த பின்னர் ஷட்பல நிர்ணய விதிப்படியும் ஆராய்ந்த பிறகே ஒரு கிரகம் வலிமை பெற்றுள்ளதா இல்லையா என்பதை கூறமுடியும்.
ஜோதிடமாமணி M பாலசுப்ரமணியன். நிறுவனர், VARA 

சனி, 15 ஜூன், 2013

புத்திர பாக்கியமும் கர்ப்பமும். - Preganent


புத்திர பாக்கியமும் கர்ப்பமும்.

 


                    கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம்தரித்த உடன் ஒரு நல்ல நாளில் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு கணவனுடன் சென்று (கணவர் வீட்டு குலதெய்வம்) மனதார பிரார்த்தனை செய்து தூப தீப நெய்வேத்தியங்கள் செய்வித்து வரவேண்டும்.

                    சில குடும்பங்களில் குல தெய்வம் யார் எனபது தெரியாமல் இருக்கும். ஒரு சிலருக்கு இவரா அல்லது அவரா என குழப்பம் வேறு இருக்கும். இவைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு:

                    அவரவர் ஜென்ம ஜாதகம் கொண்டு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி என்கின்ற புத்திர ஸ்தானாதிபதியின் அதிதேவதையை பூஜிக்க வேண்டும். இதிலும் கணவரின் ஜாதகத்தையே பார்க்கவேண்டும்.

                       ஜாதகமும் இல்லை, குல தெய்வமும் இல்லை என்று இருப்பவர்கள் அவரவர் வாழ்விடங்களில் அருகில் இருக்கும் அம்மன் கோயிலில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக கருதி அங்கு மேற்கூறிய பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். குழந்தை பிறந்த வுடன் கர்ணபூஷனம் செய்வதற்கு முன்பு குழந்தையுடன் தம்பதியர் சமேதமாக சென்று அதி விமரிசையாக பிரார்த்தனை பண்ணிய தெய்வத்தை வணங்கவேண்டும்.

 

                        கிழ்கண்ட ஸ்லோகம் முருகபெருமனை கர்ப்பிணி பெண்கள் வேண்டிக்கொள்ளும் மந்திரம். இதை அனுஷ்டிப்பவர்களுக்கு  அந்த முருகனே மகனாக வந்து பிறப்பான்.

 

Skanda Shanmukha Devesa,

 Puthra preethi vivardhana,

 Pragrahneeshwa Balim cha imam,

 Sapathyaam raksha Garbhineem.

 

 Oh Skanda, Oh God with six heads,

 Oh God who is the chief of devas,

 Oh God who increases the love for our sons,

 Please accept this sacred offering,

 And be pleased to protect,

 This lady who is in the family way,

 From all dangers.
 
 
 
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
 
 

====================================================================================================
 

வியாழன், 13 ஜூன், 2013

மனைவியை காதலிப்பது எப்படி..? love with wife


மனைவியை காதலிப்பது எப்படி..?

 

              ராதா கிருஷ்ணா...என்ற உடன் இவர்கள் மிக்க அன்யோன்யமான காதலர்கள்...காதல் தம்பதிகள்...இவர்களுக்கு முழுநேரமும் காதல் செய்வதே...இது போன்று நாம் காதலிலே முழு நேரமும் இருக்க முடியுமா..? முடியும் ..எப்படி ? ஜோதிட சாஸ்திரப்படி அவரவர் ஜென்ம ஜாதகத்தின் அடிப்படையில் இது அமையும். கிருஷ்ணர் ரோகினி நட்சத்திரம். ராதா (பெயர்படி) சித்திரை நட்சத்திரம். இவை இரண்டுக்கும் பார்த்தால் சந்திர நட்சத்திரங்களும் செவ்வாய் நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று காதல் வயப்படும் என அறிகிறோம்.
          சரி நீங்கள் சந்திரனின் நட்ச்சத்திரங்களான ரோகினி, அஸ்தம், திருவோணம்  இந்த முன்றில் ஒன்றாக இருப்பின் உங்கள் மனைவி செவ்வாயின்  நட்ச்சத்திரங்களான மிருகசிரிசம், சித்திரை, அவிட்டம் இருப்பின், அதாவது குருப் மாறி இருப்பின் நீங்களும் வாழ்வின் முழுநேரமும் காதல் செய்துகொண்டே இருப்பீர்கள்.
              சரி ஏதோ ஒரு துணை மாட்டிவிட்டது, அது காதல் என்றால் காததூரம் ஓடிவிடுகிறது என நீங்கள் அலுத்துக்கொண்டால் கவலை படாதீர்கள் வந்துவிட்ட மனைவியிடம் தொடர்ந்து காதல் செய்வது எப்படி என ஜோதிடப்படி கூறுகிறேன்.---M.பாலசுப்ரமணியன், நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம். வேலூர்-2.
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
 

====================================================================================================