மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 15 ஜூன், 2013

புத்திர பாக்கியமும் கர்ப்பமும். - Preganent


புத்திர பாக்கியமும் கர்ப்பமும்.

 


                    கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம்தரித்த உடன் ஒரு நல்ல நாளில் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு கணவனுடன் சென்று (கணவர் வீட்டு குலதெய்வம்) மனதார பிரார்த்தனை செய்து தூப தீப நெய்வேத்தியங்கள் செய்வித்து வரவேண்டும்.

                    சில குடும்பங்களில் குல தெய்வம் யார் எனபது தெரியாமல் இருக்கும். ஒரு சிலருக்கு இவரா அல்லது அவரா என குழப்பம் வேறு இருக்கும். இவைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு:

                    அவரவர் ஜென்ம ஜாதகம் கொண்டு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி என்கின்ற புத்திர ஸ்தானாதிபதியின் அதிதேவதையை பூஜிக்க வேண்டும். இதிலும் கணவரின் ஜாதகத்தையே பார்க்கவேண்டும்.

                       ஜாதகமும் இல்லை, குல தெய்வமும் இல்லை என்று இருப்பவர்கள் அவரவர் வாழ்விடங்களில் அருகில் இருக்கும் அம்மன் கோயிலில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக கருதி அங்கு மேற்கூறிய பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும். குழந்தை பிறந்த வுடன் கர்ணபூஷனம் செய்வதற்கு முன்பு குழந்தையுடன் தம்பதியர் சமேதமாக சென்று அதி விமரிசையாக பிரார்த்தனை பண்ணிய தெய்வத்தை வணங்கவேண்டும்.

 

                        கிழ்கண்ட ஸ்லோகம் முருகபெருமனை கர்ப்பிணி பெண்கள் வேண்டிக்கொள்ளும் மந்திரம். இதை அனுஷ்டிப்பவர்களுக்கு  அந்த முருகனே மகனாக வந்து பிறப்பான்.

 

Skanda Shanmukha Devesa,

 Puthra preethi vivardhana,

 Pragrahneeshwa Balim cha imam,

 Sapathyaam raksha Garbhineem.

 

 Oh Skanda, Oh God with six heads,

 Oh God who is the chief of devas,

 Oh God who increases the love for our sons,

 Please accept this sacred offering,

 And be pleased to protect,

 This lady who is in the family way,

 From all dangers.
 
 
 
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
 
 

====================================================================================================
 

1 கருத்து: