மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 10 மே, 2014

ஜாதகத்தில் பேய் பற்றி அறிய முடியுமா? Devil -Satan-Ghost

ஜாதகத்தில் பேய் பற்றி அறிய முடியுமா?

                       நமது நாட்டில் பேய், பிசாசு, பூதம், உள்ளதாக நடைமுறையில் பேசுகிறோம். அதிலும் நமது தமிழ் நாட்டில் கேட்கவே வேண்டாம், பேய்களில் கொள்ளிவாய் பேய், இரத்த காட்டேரி, ரண காட்டேரி, ஆண்களையே பிடிக்கும் மோகினி, காத்து, கருப்பு, இப்படி பலவாறாக பேசப்படுகிறது. நம் நாட்டில் மட்டும் இல்லை, அமெரிக்காவில் கோஸ்ட், சாத்தான், டெவில் பேய்களும், ஐரோப்பாவில் லூசிபர் பேய்களும், அரேபியா போன்ற முஸ்லீம் நாடுகளில் சைத்தான், ஜின்னு போன்ற பேய்களும், சீனா போன்ற புத்தமதம் உள்ள நாடுகளில் மாரா என்ற பேய்களும் அலைந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
                    மரணத்திற்கு முந்தைய அனுபவங்கள், இறப்பிற்கு பின் ஏற்படும் வாழ்வு பற்றிய கேள்விகள், குறி சொல்பவர்களின் ஆவிஉலக தொடர்பு, போன்ற பல காரணங்களால் பேய், பிசாசு, பூதம் இருக்குமா என்ற ஆழ்ந்த கருத்தை அவ்வப்பொழுது நம் மனதினுள் எழுந்துகொண்டு தான் உள்ளது. பேய் பிசாசுகளை சிலர் பார்த்துள்ளனர் என்கின்றனர், ஆனால் அவர்களை நேரிடையாக சென்று கேட்டால் ஏதோ அவர்கள் மனம் போன போக்கில முன்னுக்கு பின் முரணான செய்திகளை சொல்கிறார்கள். சொல்லப்போனால் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதே கண்கூடு.
ஜோதிட ரீதியாக பேய்களை உணர்வது எப்படி?

                 ஒரு மனிதனுக்கு அவனுடைய குணத்தையும், அவனது உள்மனத்தின் மாண்பை அறிய ஐந்தாமிடத்தையும், அவனுடைய சிந்தனை மற்றும் செயலை அறிய ஒன்பதாமிடத்தையும் ஆராயவேண்டும் என எல்லோருக்கும் தெரியும். திரிகோண இடமான 1-5-9 இடங்களில் ஒரு கிரகம் நின்றால் கண்டிப்பாக அந்த ஜாதகன் நின்ற கிரகத்தின் காரகத்துவம் எதுவோ அந்த காரகதுவத்தை நிச்சயம் அடைவான் என்பது ஜோதிட சாஸ்திர விதி. 
                          உதாரணமாக ஒருவர் ஜாதகத்தின்  செவ்வாய் திரிகோணத்தில் உள்ளது என்றால், செவ்வாயின் பொது காரகமான வீரம், வேகம், கோபம், பூமியோகமான வீடு, வீட்டுமனை சம்பந்தமான சொத்து போன்ற காரகத்துவங்களில் பெரும்பான்மை கண்டிப்பாக அவர் தமது வாழ்நாளில் பெறுவார். இதே நபரின் லக்னத்திற்கு இதே செவ்வாய் திரிகோணாதிபதி அந்தஸ்து அதவாது ஆட்சி அல்லது நட்பு அந்தஸ்து பெற்று இருந்தால் மேற்படி காரகத்துவங்களை சிறப்பாக பெறுவார். இதே செவ்வாய் இதே நபரின் லக்ன கோணத்தை விட பஞ்சமகோணத்தில் இருப்பின்  மேலும் சிறப்பை தரும். பஞ்சமகோணத்தை விட ஒன்பதாவது திரிகோணத்தில் இருப்பின் மிக அதிக சிறப்பையும் தரும் என்பது ஜோதிடர்களுக்கு நன்கு தெரியும்.
                 அடுத்து, இதே செவ்வாய் குருவின் பார்வை பெற்று இருந்தால், செவ்வாயால் பெற்ற யோகங்கள் நியாயமாகவும், தர்மத்தின்படி சொத்துக்களை சம்பதித்ததகவும், இந்த யோகங்களை ஜாதகர் தனது வாழ்நாளில் முழு அனுபவபாத்தியத்துடன் பெற்று சந்தோசமாக இருப்பார் என்றும், இவர் பெற்ற இந்த யோகங்களை பார்த்து மற்றவர்களும் பொறாமை அடையமாட்டார். இவரும் மேற்படி யோகங்களை பெறுவதற்கு அலைந்தும் இருக்கமாட்டார். இந்த யோகங்கள் தானாகவே இவருக்கு தகுந்த சந்தர்ப்ப காலங்களில் வந்து சேரும் என்றும் உணரலாம்.
 பேய் பிடிக்கும் நிலை:

            மேற்படி உதாரணபடியே, திரிகோணத்தில் நின்ற செவ்வாய் லக்னத்திற்கு சுபராக இல்லாமல் இருப்பின், மேற்படி யோகங்கள் ஓரளவு கிடைக்கும், இருந்தாலும் அதில் சில வெறுப்புகள் சேர்ந்து இருக்கும்.
         திரிகோணத்தில் நின்ற செவ்வாய் லக்னத்திற்கு பகையாக அமைந்துவிட்டால் செவ்வாயின் மூலமாக பெற்ற சொத்துக்களினால் இவருக்கும் மற்றவர்களுக்கும் நிச்சயம் இதே சொத்தினால் வாழ்நாள் முழுவதும் பகை சேரும்.
              திரிகோணத்தில் நின்ற செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதியாக அமைந்துவிட்டால், இந்த சொத்தினால் இவருக்கு பாதகமான சூழ்நிலையே கண்டிப்பாக வரும்.
                  இதே செவ்வாய் லக்னத்திற்கு மாரகாதிபதியாக வந்தால், சொத்துக்களை தாரை வார்த்து கொடுத்து, இந்த சொத்துக்காகவே ஏதோ ஒரு காரணம் மூலமாக உயிரை விடுவதற்கு ஏற்பாடுகள் செய்துவிடும்.
இனிபார்க்க போவது, இதுவரை பார்த்த கருத்துக்கள்படி இல்லை. சற்று இதற்கும் மேலாக ஒருபடி சென்று பார்ப்போம்.

                 ஜாதகனுக்கு திரிகோணத்தில் நின்ற இந்த செவ்வாயை பாவிகிரகங்கள் பார்க்க நேர்ந்தால், அல்லது பாவிகளுடன் சேர்ந்து இருந்தால், அல்லது பாவிகளின் நட்சத்திர கால்களில் இருந்தால், இதன் விளைவு எப்படி இருக்கும். இங்கு தான் ஜாதகனை பேய் பிடிக்கின்றது. பேய் என்பது அளவுக்குமீறிய ஆசைகள், அடாவடி, எளியோர்களை எய்த்து பெற்ற சொத்துக்கள், பங்காளிகளை ஏமாற்றி பெற்ற சொத்துக்கள், சேர்த்த சொத்துக்கள் மட்டுமல்லாது, ஜாதகரின் ஆழ்மனத்தில் இன்னும் சொத்து சேர்க்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்று சதா அதே நினைவில் அலைந்து கொண்டு இருப்பான். மேலும், இந்த சொத்துகளை நிச்சயம் அவன் அனுபவிக்க முடியாது, அதாவது, அவன் வாழ்நாளிலே இந்த சொத்து இவன் கைவிட்டு போகும், அல்லது சொத்து போவதற்கு முன்பே இவன் போய்விடுவான்.
             மேற்படிசொத்துக்கள் எப்படி பெறுவான் என்பதையும், அதே சொத்துக்கள் எந்தெந்த காரணங்களால் இவன் இழக்க நேரிடும் என்பதையும் அவரவர் ஜென்ம ஜாதகம் நமக்கு பளிங்குகண்ணாடி போல் காட்டிவிடும்.
உலகத்தவருக்கு பேய் பிடித்தது தெரிய வரும் காலம்:

             இதுவரை நாம் பார்த்ததில் ஜாதகனுக்கு பேய் பிடித்து இருக்கும் என்று இவனுடன் பழகியவர்களுக்கு மட்டும் தெரியும். இவன் தனது குறிகோளை விட்டு சற்றும் நழுவாமல் மேலும் சொத்துசேர்ப்பது பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். இது போன்றவர்கள் ஜாதகத்தில், மதிகாரகனாகிய சந்திரனும் பாவிகளின் சம்பந்தம் பெற்று இருப்பானானால், கண்டிப்பாக லக்னாதிபதி, செவ்வாய், சந்திரன் தசாபுக்திகளில் பேய் என்கின்ற ஆசை நிலை உச்சத்திற்கு சென்று தான் வெளியில் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து, ஆழ்மனதில் சொத்தை பற்றி மட்டுமே நினைவுகள் இருக்கும். இந்த நிலை வந்துவிட்டால் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்துவிடும் இவனுக்கு பேய் பிடித்து விட்டது என்று. இதற்கு பிறகு தான் இவனை உலகத்தார் ஒதுக்கி வைத்து இருப்பர், ஒரு சிலரை சங்கிலியால் பூட்டியும் வைப்பார், எப்படியோ இவர் ஆசைப்பட்ட சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையை திரிகோணத்தில் நின்ற செவ்வாய் கொடுத்தும் கெடுத்து விட்டது அப்பொழுது தான் தெரியவரும்.
இதுபோன்ற மற்ற பேய்களை அறிவது எப்படி?

      மேற்கண்ட உவமை ஜாதகத்தில் செவ்வாய் நின்றதை பார்த்தோம். அந்த செவ்வாய்க்கு பதில் சூரியனை வைத்து மேற்கண்டபடியே ஒவ்வொரு பாயிண்ட் ஆக பார்த்தால் கடைசியில் அதிகாரம், புகழுக்கு ஆசைப்பட்டு, இவருக்கு பேய் பிசாசி பிடித்துவிட்டது என்கின்ற முத்திரையை உலகத்தவர்கள் பதிப்பார்.
          சூரியனுக்கு பதில் சந்திரனை வைத்து பார்த்தீர்கள் என்றால் செல்வம், எப்பொழுதும் சட்டைபை நிறைய பணம் என ஆசைபடுவர். புதன் என்றால் மற்றவர்களை கேலியும், கிண்டலும் செய்து நான் தான் அறிவாளி என்று பிதற்றுவார்கள். குருவினை இந்த இடத்தில் வைத்து பார்த்தால் தான் சொன்னது தான் வேதவாக்கு, நான் தான் கடவுளின் மறுஉருவம் என்று பேசுவார்கள். இதே இடத்தில் சுக்ரனை வைத்தால், கண்டவர்கள் மேல் காமவசப்பட்டு காமப்பெய் என்று இவரை உலகம் ஒதுக்கி வைக்கும்.
           சனி இந்த இடத்தில் நின்றால் தான் ஒரு குட்டி ஜமின் என்ற நினைப்புடன், கண்டவர்களை வேலை செய்யசொல்லி முகத்தில் கரிபூசி கொள்வார்கள். இவர்களை மக்கள் பேய் பிடித்தது என்று வீட்டிற்குள் கூட சேர்க்காமல் குட்டிசுவர்களில் இறுதிநாளை கேவலமாக கழிப்பார்கள்.
          ராகு இருந்தால் ஆடம்பரத்தில் அளவுக்கதிகமாக ஈடுபட்டு, வாழ்வின் மத்திம காலத்தில் எல்லாம் கைவிட்டு போனபின் ராகுக்கே உரிய நோய்களும் சேர்ந்து, இவருக்கு பேய் ரொம்பபிடித்து விட்டது என்று ஊரைவிட்டே இவர்களை ஒதுக்கி வைப்பார்கள்.
         கேது திரிகோணத்தில் நின்று, மேற்படி அமைப்பு பெற்று இருந்தால், ஆரம்ப காலங்களில் ஏதோ அபரஞானத்தை பெற்று தான் சொல்வது எல்லாம் நடக்கிறது என்கின்ற மம்மததை உச்சாணிக்கு சென்று, மனம் பேதலித்து, பேய்பிடித்து விட்டது என்று தானேகூட கூறிக்கொண்டு ஒவ்வொரு ஊராக பிச்சை எடுத்து பரதேசி பேய் என்று இவரை பார்த்து முகம் சுளிப்பார்கள் உலகத்தவர்.
 அறிவியலில் பேய் – ஜோதிடத்தில் பேய்:

          பேய் என்பது வெளியில் இல்லை. பேய் என்றால் இருட்டு. அஞ்ஞானம். அகந்தை. அறிவிலித்தனம். வெளிச்சம் இல்லாத இருள்நிலை, மந்தம், பெரியோரை மதியாமை, கருணை என்பதே என்ன என்று தெரியாமை, ஆகும்.  ஆனால், நம் மக்கள் சொல்வார்கள், நல்லா இருந்தான், தீடிர்னு நடந்து வரும் போது பேய் பிடித்து விட்டது என்பார்கள்.  இதை தான் விஞ்ஞாணிகள் ஆரய்ச்சி செய்து, இது போன்ற நிலை தீடிர் என்று வருவது இல்லை என்றும் இது ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள் நடக்கும் மூன்று காரணிகளை பற்றியது என்கின்றனர்.
          அவை: 1. மாயப்புலன் உணர்ச்சி. (Illusion), 2.மயக்கபுலன் உணர்ச்சி (Hallucination) 3. மருட்சி (Delusion).  இது போன்ற காரணங்கள் மனிதனின் இளம்வயதில் இருந்து கூட தோன்றிவிடும் என்றும் கூறுகிறார்கள்.

          இதே காரணங்களை தான் ஜோதிடசாஸ்திரமும் ஜாதகத்தில் உள்ள லக்னகுணம், திரிகோண கிரகங்களின் காரககுணம், இவைகளை பார்த்தவர்கள், சேர்ந்தவர்கள், நட்சத்திர பாத நிலைகள் மற்றும் சந்திரனின் அழ்நிலைகுணம் போன்றவைகள் தான் பேய் பிசாசு பூதம் பிடிப்பதற்கு முழுமுதல் காரணம் என்பதை தெளிவாக சொல்கிறது.


 
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking
=======================================================================================================
ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================






 NOTES:
உலக மதங்களில் பேய் பிசாசு பற்றிய தகவல்கள்:

 வல்ல பூதம் வாலாஷ்டிக பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப் பேய்களும்,

பெண்களைத் தொடரும் ப்ருமராட்சதரும்,
அடியேனைக் கண்டால் அலறிக்கலங்கிட….”    --கந்தசஷ்டி கவசம்.


கடவுளாகிய இயேசு கிறிஸ்த்துவை பிசாசு 40 நாள் சோதித்ததாக பைபிள் கூறுகிறது மத்தேயு -4:1) இயேசு கிறிஸ்து பேயோட்டிய சம்பவத்தையும் பைபிளில் காணலாம். (மத்தேயு-12:24)  http://www.readislam.net/portal/archives/5704

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் ஓடிப்போவான்.’—யாக்கோபு 4:7.  http://wol.jw.org/ta/wol/d/r123/lp-tl/1102008075

 திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது.
உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே
இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு
இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப
முடியும்? பேய்களை நம்புபவன், எப்படி இறைவனையும் இறைத் தூதரையும் நம்பியவனாக
முடியும்? http://tntjily.blogspot.in/2012/03/blog-post_2641.html



பேய்களை பற்றிய இதர தகவல்கள்:

பேய் பிசாசு பிடிக்கும் போது வேறு மொழி பேசுவது எப்படி?

பூனைகள் பேய்களை நன்றாக பார்க்கும்.?

மனிதர்கள் தங்கள் மனதிற்குள் நிறைவடையாத ஆசைகள், வெறிகளை தீர்த்து கொள்வதற்காக பேயாக அலைகிறார்கள்.?

இவைகள் மனிதனை கொலை செய்யாது, ஆனால் மனிதனை அவனே தற்கொலை செய்து கொள்ள தூண்டிவிடும்?

பேய்கள் உறங்குவதில்லை, வெள்ளை நிற புகை மணடலத்தை எழுப்பும்,

மனிதர்களைப்போல் இல்லாமல் பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம், காலம் வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல!

ஏழு வானங்களில் தாழ்வான வானத்தில் நட்சத்திரத்தை படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த தாழ்வான வானம் வரை ஜின்கள் சென்று வர ஆற்றல் பெற்றுள்ளனர் என்பதை அல்குர்ஆன் மூலம் அறியலாம்.

 திடமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கிறோம்.

இன்னும் அவற்றை ஷைத்தான்களை (ஜின்கள்) விரட்டும் எரி கற்களாகவும் நாம் ஆக்கினோம்.  –அல் குர்ஆன். 67:5,41:12.

இன்று பேசப்படும் ஏலியன்கள், என்னும் வேற்று கிரகவாசிகள் இஸ்லாம் கூறும் ஜின்களே! ஜின்கள் நம்மோடு நம் பூமியிலும் வசிக்கின்றன, பிரபஞ்ச பெருவெளியிலும் வாழ்கின்றன. நம் கண்களால் இவைகளைக்  காண முடியாது. ஆனால் அவைகளால் நம்மை பார்க்க முடியும். ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற பொருள்.

உதாரணமாக நமது இதயத்தை நம் கண்ணால் காண முடியாது. உடலின் உள்ளே நெஞ்சில் இதயம் மறைக்கப்பட்டுள்ளது. ஜான் (இதயம்) என்ற சொல் வந்ததின் காரணம் இதுதான். ஜின்கள் வெப்பத்தால் படைக்கப்பட்டதால் நம் கண்களுக்கு தெரிவதில்லை. மின்காந்த வெப்ப அலை வடிவில் உள்ளனர். (Electromagnetic-Plasma Radiant Energy)

மேலும் ஜின்களால் மனிதர் உருவில் வர முடியும். மேலும் கருப்பு நாய்,யானை,பாம்பு போன்ற உருவில் வரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாலை இருள் சூழும் நேரங்களில் குழந்தைகளை வெளியில் விட வேண்டாம், அது ஜின்கள் வெளிவரும் நேரம் என நபி (ஸல்) அவர்கள் கூறியது கவனிக்கத்தக்கது. காத்து,கருப்பு அடித்துவிடும் என நமது  கிராமங்களில் கூறுவது அனைவரும் அறிந்ததே!

இருள் சூழ்ந்த இரவு,கருப்பு நாய்,யானை,பன்றி போன்ற கருப்பு நிற பிராணி உருவங்களை  ஜின்கள் தேர்வு செய்யக்காரணம் என்ன? நெருப்பு வெப்பத்தால் படைக்கப்பட்ட ஜின்கள்  (Thermochromic  aliens change colors at different temperature  in the visible and invisible spectrum.)