மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

ஜோதிட ரகசியம் ....அட்சய திரிதியை

ஜோதிட ரகசியம் ...
...............................அட்சய திரிதியை


சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திதி = இது தான் அட்சய திரிதியை..

ஜோதிட ரீதியாக பாருங்கள்...

சித்திரை மாதம் சூரியன் உச்சம்..

அட்சய திரிதியை அன்று சந்திரனோ சூரியன் நின்ற பாகைக்கு சுமார் 24 degree to 36 degrees. அப்படிஎன்றால் சூரியன் நின்ற ராசிக்கு அடுத்த ராசியில் தான் சந்திரன் நிற்பார். சூரியன் உச்சமாகி மேஷத்தில் நின்றால்...சந்திரனோ ரிஷபத்தில் தான் நிற்பார்...ஆகஅட்சய திரிதியை அன்று சூரியனும் உச்சம்...சந்திரனும் உச்சம்...

இன்றைய நாளில் சூரியனின் வர்க்கமான தந்தையிடத்திலும்சந்திரனின் வர்க்கமான தாயாரிடத்திலும் ஆசி பெற வேண்டும்...அதிலும் "அட்சதை" பெற வேண்டும்...

அட்சதை என்றால்...உங்களுக்கு தெரியும் திருமண வீட்டிற்கு சென்றால்தாலி கட்டுவதற்கு முன்பு தட்டில் மஞ்சள்அரிசிபூ போன்ற இத்தியாதிகளுடன் தாலியையும் சேர்த்து ஒருவர் ஒவ்வொருவரிடமும் காட்டி அந்த அட்சதையை எடுத்து அந்த தாலி மீதோ அல்லது மணமக்கள் மீதோ தூவி ஆசிர்வதிக்க வேண்டும். அவ்வளவு தான்...

நமது அப்பா அம்மாவிடம் தந்து அவர்கள் காலடியில் விழுந்து அவர்களிடம் இருந்து நாம் இது போன்ற அட்சதையை ஆசிர்வாதமாக பெற்று விட்டால்உலகத்தில் சூரியனால் ஆத்மசக்தியையும்சந்திரனால் பொன் பொருள் செல்வத்தையும் ஒருங்கே பெறமுடியும்.
தாய் தகப்பன் இல்லாதவர்கள் அவரவர்கள் குருவை வணங்கி அட்சதை பெறலாம்.




சனி, 4 ஏப்ரல், 2015

கிரகணதோஷம் உண்மையில் பாதிக்குமா...?

கிரகணதோஷம் உண்மையில் பாதிக்குமா...?

      ஜாதக கட்டத்தில் ராகு கேதுவை சூரிய சந்திரர்கள் கடக்கும் போது தோஷம் ஏற்படுகின்றது. சூரியனுடன்  ராகு அல்லது கேது சேர்ந்தால் பிதூர் தோஷம். ஆத்மகாரகன் அடிபட்டு போய் விட்டான்.  தந்தை மகன் உறவு தடம் புரண்டது...இப்படி எல்லாம் பெசபடுகிறதே இது உண்மையா..?
இதே போல சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால் மாதூர் தோஷம், மனநிலை பாதிக்கபட்டவன், அம்மாவின் அரவணைப்பு அம்பேல்..இது போன்றவைகள் உண்மையா...?

         
       இது உண்மை என்றால் சந்திரன் 27 நாட்களில் ஒரு முறை ராகுவையும், ஒரு முறை கேதுவையும் கடந்து தானே செல்கின்றான்...?
சூரியனை எடுத்து கொண்டால் வருடத்தில் இரண்டு மாதங்கள் ஏறக்குறைய 60  நாட்களுக்கும் மேல் ராகு மற்றும் கேதுக்களுடன் தானே வாசம் பண்னுகின்றான்...?
    
        இவைகளை நாம் அப்படியே தோஷம் என எடுத்து கொள்வது தவறாக முடியும். இவைகளை ஸ்புடம் போட்டு ஆராய்ந்து அறிய வேண்டும். ஆனால், வருடத்தில் ஒரு முறை நடக்கும் சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் ஆக இரண்டு முறை சூரிய சந்திரர்களுக்கு மாபெரும் தோஷம் தாக்கு கின்றது.

     பதினைந்து நாட்களுக்கு முன் நடந்த சூரிய கிரகணம் கூட ஓரளவு தோஷம் என்றாலும் கடகத்தில் உள்ள குருவின் பார்வையில் மீன ராசியில் சூரிய கிரகணம் நடந்தமையால் மேற்படி பாதிப்புகள் வெகுவாக குறைந்து விடும்.  









       இந்த வருடத்தின் உண்மையான கிரகண தோஷம் என்றால் இன்று (4-4-2015) நடந்ததே அது தான் அதிக தாக்கம் உள்ள தோஷகாலம். இன்று கன்னி ராசியில் ராகுவுடன் சேர்ந்த சந்திரனை சுப கிரகங்கள் யாரும் பார்வை இடவில்லை, குறிப்பாக குருவின் பார்வை கன்னி ராசியின் மீது படவேயில்லை. அதிலும் இன்று சந்திரனுடைய நட்சத்திர சாரத்திலேயே கிரகணம் நடந்தமையால், இன்று தோஷ நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு மேற்கூறிய பாதிப்புகள் கூடி இருக்கும்.

என்னதான் தோஷங்கள் நம்மை தாக்க நினைத்தாலும், சாஸ்திரங்களை சமைத்த சர்வேஸ்வரனை சாந்தபடுத்தினால் தோஷம் சந்தோஷமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. à Bala Jothidar

**************************************************************************************************

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002



புதன், 1 ஏப்ரல், 2015

சூலம் திசை நோக்கி பயணம்

சூலம் திசை நோக்கி பயணம் 




    யோகினியை போன்று சூலமும் நமது ஜோதிடத்தில் பார்க்கபடுகிறது. 
சூலம் இருக்கும் திசையை நோக்கி பயணிப்பது ஆபத்தை தரும் அல்லது பயணத்தின் குறிக்கோள் வீணாகும் என்பது ஜோதிடவிதி. இதற்கு, வாரசூலை என்றும் கூறுவர். உதாரணம், ஞாயிற்றுக்கிழமை மேற்கு திசை நோக்கி பயணித்தால் நமது பயணத்தில் இடையூறுகள் ஏற்படும், அல்லது விபத்துக்களை சந்திக்க நேரிடலாம். அல்லது நாம் எதற்காக பயணம் செய்ய நினைத்தோமோ அந்த காரியம் கைகூடாமல் போகும். எனவே தான் நமது முன்னோர்கள் சூலம் உள்ள திசை நோக்கி செல்வது ஆபத்து என்றும், சில நேரங்களில் மரணத்தை கூட சந்திக்க நேரலாம் என்றும் கூறியுள்ளனர்.


ஞாயிற்று கிழமை சூலம் இருக்கும் திசை மேற்கு

திங்கட்கிழமை சூலம் இருக்கும் திசை கிழக்கு

செவ்வாய் கிழமை சூலம் இருக்கும் திசை வடக்கு

புதன் கிழமை சூலம் இருக்கும் திசை மேற்கு

வியாழன் கிழமை சூலம் இருக்கும் திசை தெற்கு

வெள்ளிக்கிழமை சூலம் இருக்கும் திசை மேற்கு

சனிகிழமை சூலம் இருக்கும் திசை கிழக்கு



சூலம் இருக்கும் திசைகள் எப்படி நிர்ணயிக்க படுகின்றது என்றால் அந்தந்த கிழமைகளின் அதிபதி கிரகங்களின் பார்வைகள் சூலம் இருக்கும் திசையில் படுவதில்லை. இதை எளிதில் அறியவே, நமது முன்னோர்களும் ஜோதிட வல்லுனர்களும் ஒரு சூட்சுமத்தை நமது கோவில்களில் வைத்துள்ளனர். நாம் வடகிழக்கு மூலையில் உள்ள நவகிரகங்களின் சன்னதிக்கு சென்றால் புரிந்துவிடும். 

       நவகிரகங்களின் உருவங்களையும் அவைகள் பார்க்கும் திசைகளையும் நன்கு பாருங்கள். சூரியன் கிழக்கை நோக்கி பார்த்து கொண்டு இருப்பார். அப்படி என்றால் அவரின் பார்வை அவரது பின்பக்கத்திற்கு படுவதில்லை. பின்பக்கம் என்பது கிழக்கு திசையை பார்க்கும் சூரியனுக்கு மேற்கு ஆகும். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று சூலம் இருக்கும் திசை மேற்காக வருகிறது. இது போல நீங்கள் மற்ற கிரகங்களை பார்த்தால் உண்மை புரிந்துவிடும். நவகிரகங்களில் ராகு கேதுவிற்கு கிழமைகள் கொடுக்க படவில்லை என்பதால் அவைகள் எடுத்து கொள்ளப்படவில்லை.

===========================================================================

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002


 ======================================================================