மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 18 அக்டோபர், 2017

ராசிப்படி பட்டாசு வெடிப்பது Rasi - crackers at Diwali

எந்த ராசி காரர்கள் எது மாதிரி பட்டாசு வாங்கி வெடித்தால் மகிழ்ச்சி.

உங்கள் ராசிப்படி தீபாவளி கொண்டாட  வேண்டிய பட்டாஸு.. 💥💥⚡🎆⚡💥
👇🏼
👇🏼
  மேன்மை பொருந்திய மேஷ 🐐 ராசிகாரர்களே...  நெருப்பும் 💥வீரமும் 👍🏼 கொண்ட தாங்கள் ஆட்டம் பாம் atom bomb 💣வெடித்து அடுத்தவர்கள் மீது படாமல் தீபாவளி 🎇கொண்டாடுங்கள்...💥  ~ Vellore Bala 9443540743


  பூமியின் பொருமையுள்ள  🌍 ரிஷபராசி அன்பர்களே...  🐂 லக்ஷ்மி கடாட்சம் உள்ள நீங்கள் சிவகாசி லட்சுமி வெடிவெடித்து 🔋  முதுகில் நெருப்போ மற்றவர்களோ முட்டி விடாமல்  பார்த்து தீபாவளி 🎇கொண்டாடுங்கள்..💃🏻   


  மிதுனராசி நண்பர்களே.. , நீங்கள் உங்களுடன் ஒரு துணையை வைத்து கொண்டு இருவராக 👫 சேர்ந்து பச்சை கலரு  🔋 பட்டாசை, காற்று பலமாக வீசாத போது வெடித்து 🔫 தீபாவளி 🎇கொண்டாடுங்கள்  💥 ~  


  கடக ராசிகாரர்களே, 🦀 நண்டு வெடியோ சங்கு  🌞 சக்கர வெடியோ, பக்கத்தில் பாதுகாப்புக்கு பக்கெட்டில் தண்ணீர் வைத்து கொண்டு வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள். 💫💫💥    


  சிம்மராசி சிங்கங்களே.. மிளகாய் பட்டாசை மிஞ்சும், சிவகாசி சிங்கம் மார்க் சிங்கவெடி வெடித்து, நெருப்பு குச்சியை உடலில் படாமல் உஷாராக பிடித்து, தீபாவளி 🎇 கொண்டாடுங்கள் 🦁💥  ~ Vellore Bala 9443540743


  அமைதியான முறையில் அத்தனையும் உள்ளுக்குள் விரும்பும் கன்னிராசி 🙎🏻  காரர்களே, உங்களுக்கு ஏற்றது கேப்பு  என்றாலும், நீங்கள் ஊசி வெடி 💉💉  வெடித்து, பயந்து கீழே வீழ்ந்து விடாமல்  தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்.. 🎉


  துறுதுறுப்பாக இருக்கும் 🔺 துலா ராசியில் பிறந்தவர்களே... காற்றிலே பறந்து கலர்களை 💙💚💜💛💕 கானவிரும்பும் உங்களுக்கு ஏற்ற கம்பி கலர் மத்தாப்பு 🎆 வெடித்துதுணிமணிகளில் 👚👗 படாமல் பார்த்து  தீபாவளி 🎇  கொண்டாடுங்கள்.. 🌈🎆   


  விருப்பமுடன்  💚 பேசும் விருட்சிகராசி 🦂அன்பர்களே, உங்கள் விறுவிறுப்புக்கு ஏற்ற 🐍 பாம்பு பட்டாஸூ🌴ஓலைப் பட்டாஸூகளை  பக்கத்து குடிசைகளின் 🏡 மீது படாமல்  வெடித்து தீபாவளி 🎇  கொண்டாடுங்கள். 🎀🐍💥~ Vellore Bala 9443540743


  தடாலடி தனுசு 🏹  ராசிகாரர்களேஸர் ஸர்னு உங்கள் உத்வேகத்துக்கு ஏற்ற ராக்கெட் 🚀 வெடியை கை சுட்டுக்காமல் உஷாராக வானத்தில் வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள் 🚀💥   


  புது மாப்பிள்ளை போல மெர்சலாகும்  மகர ராசி 🐊 அன்பர்களே, மனசுக்குள்  சர சரமாக  💥  வெடிக்க வேண்டும் என நினைத்து இருப்பதால், நீங்கள் 10,000 ten thousand  டென் தவுஸன்ட் வாலாவை கால்களில் பட்டுவிடாமல் வெடித்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்..⚡⚡💥

  
  குதுகலமுள்ள 😋 கும்ப 🏮ராசிகாரர்களேஉங்களுக்கென்றே செய்த கும்பகோண வெடி...  பானைவெடி... தொட்டி... 🔋 பூத்தொட்டி... பூஸ்வானம் 🗼வெடித்து உங்கள் மேலே விழாமல் பார்த்து தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்... 💥💥


  மத்தாப்பூ பார்வையுள்ள 🐠 🐬 மீனராசி நண்பர்களே, உங்கள் வேகத்திற்கு ஏற்ற வெடி   சீரியல் வானவெடியை 💥வெடித்து கண்களில் 👀 படாமல் இருக்க கண்ணாடி 😎 அணிந்து  தீபாவளி 🎇 கொண்டாடுங்கள்.. 🎏🌟💥~ Vellore Bala 9443540743.



 அகத்தில் ஞானொளியும், புறத்தில்
தீப ஒளியும் பெருகிட 
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீபாவளி 🎆 வாழ்த்துக்கள்..

அன்புடன்,


Vellore Bala Jothidar 9443540743

திங்கள், 2 அக்டோபர், 2017

ஜாதக வெற்றி Success time

ஜாதக வெற்றி



ஒரு ஜாதகனின் வெற்றிஅவனது மூன்றாம் பாவத்தின் மூலம் அறியலாம் என்பது யாவருக்கும் தெரியும். இதே போல ஒவ்வொரு பாவத்தின் வெற்றி அதனுடைய மூன்றாம் பாவத்தால் அறியப்படும். உதாரணமாக இரண்டாம் வீட்டின் (தன ஸ்தானம்) வெற்றி காண நான்காம் பாவத்தை பார்த்தால் புரியும். நான்காம் பாவப்படி லவ்கீக சுகம் கூடினால் கையில் தனம் உண்டு என எளிதாக அறியலாம். அதே போல ஒவ்வொரு பாவத்தின் வெற்றியை காணலாம்.

ஒரு பாவத்தின் தோல்வியை காண வேண்டுமானால் அந்தந்த பாவத்தின் பனிரெண்டாம் பாவத்தால் அறியலாம். மேலே கூறிய உதாரணப்படி பார்த்தால் இரண்டாம் பாவத்தின் தோல்வி லக்ன பாவத்தையே சார்கிறது. (உழைப்பும், உறுதியும் இல்லா விட்டால் லக்னம் பாதிக்கபட்டால் )

உப ஜெய ஸ்தானங்களான 3-6-10-11 இடங்கள் பலமுள்ளவன் எளிதில் வெற்றியை அடைகிறான். எப்படி என்றால் மூன்றாமிடம் வெற்றியை தந்தாலும், அதற்கு உறுதுணையாக உள்ள ஆறாமிடமூலம் நோய், நோடி, கடன் வம்பு வழக்கு இல்லாதவனாக இருப்பதும்,

பத்தாமிடம் மூலம் தொடர்ந்து வருமானம் வந்து கொண்டு இருப்பதும்,
பதினோறாமிடம் மூலம் சம்பாதிக்கும் சம்பாதனை தனது உழைப்பை விட அதிக ஊதியம் பெறும்போது லாபத்தை பெற்றிருப்பதும், 
ஒருவனின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது.

வெற்றியை முத்தமிடும் நேரம்:

மூன்றாமாதி தசா புக்தி அந்தர காலங்களில்.

கோட்சார செவ்வாய் சுபர்களின் மேல் வலம் வருவதும் மற்றும் மூன்றாமாதி சுபராகி கோட்சாரத்தில் செவ்வாய் மீது வருவதும் வெற்றி தரும் நேரங்களாகும்.

லக்னாதிபதி மற்றும் விரயாதிபதி சம்பந்தம் பெறுபவர்கள் வெளியூரில் வெற்றி.

ஒரு காரியத்தில் வெற்றி அடைய, அந்த காரிய மூகூர்த்த லக்னம் மேஷ மானாலும் அல்லது அம்சத்தில் மேஷ அம்சா லக்னமானாலும் வெற்றியை பெற்று விடலாம்.

கோட்சாரத்தில் செவ்வாய் & சனி சேர்க்கை/பரஸ்பர பார்வை இல்லாத நேரம் பார்த்து செய்யப்படும் காரியம் வெற்றியை தந்துவிடும்.

லக்னம் சரத்திலும் சந்திரனை ஸ்திரத்திலும் வைத்து செய்யப்படும் வேலை வெற்றியுடன் முடியும்.

துரித வெற்றியை பெற மூன்றாமாதி ஹோரை கைகொடுக்கும்.

பலமுறை முயன்று தோல்வியுற்ற காரியத்தை, எமகண்டத்தில் மறுபடியும் முயன்றால் வெற்றி உங்கள் பக்கம். திருமணமான தம்பதிகள் ஜாதகத்தில் ஐந்தாமிடம் பலம் இருந்தும் குழந்தை தாமதிக்கும் தம்பதிகள் இந்த உபாயத்தை அறிந்து குழந்தைச் செல்வத்தை பெறலாம்.

பெரிய மறைவு ஸ்தானங்களான 6-8 இல் நான்கு கிரகங்களுக்கு மேல் இருப்பவர்களை வெற்றி தன் பக்கத்தில் வைத்து கொள்வதில்லை. இவர்களும் வெற்றி பெறவேண்டுமானால் அவர்கள் அவர்களின் குருவை ஆலோசித்து செய்தால் வெற்றி.

கோச்சாரத்தில் தினச்சந்திரன் பாவகத்திரியில் கட்டுண்டால் வெற்றியும் கழன்றுவிடும்.

தன ஜாதகத்தில் வெற்றி வாய்ப்பு குறைவு என்று நீங்களே முடிவு செய்துவிட்டால், உங்கள் ரத்த சம்பந்தத்தில் உள்ள உங்கள் மகன், மகள், தந்தை, தாய், சகோதரர்கள் ஜாதகப்படி வெற்றி ஜோராக இருப்பின், அவர்களை நீங்கள் எதிலும் இணைத்துக்கொண்டு செயல் பட்டால் வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்.

வெற்றி நமதே.
~ Vellore Bala Jothidar.  M. BALASUBRAMANIAN - 9443540743
(வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் & வேலூர் ஜோதிடம் வாட்ஸ்அப் கிளப் மூலம் 1-10-2017  சென்னை, மடிபக்கம், கார்திகேயாபுரம், கூட்டுறவு கல்யாண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் நிகழ்த்திய ஜாதக வெற்றி உரையின் சுருக்கம்.)



ஜாதக ஜலம் மோட்சம் - Moksha

ஜாதக ஜலம் மோட்சம்.



முக்தி, மோட்சம் போன்றவைகளை அடைய பலவகை இருப்பினும், நமது ஜாதகத்தில் அதை மூன்று வகையாக பிரிக்கலாம்.

மோட்ச ஸ்தானம் என்றால் பன்னிரெண்டாம் பாவத்தை பார்ப்போம். இது பரமுக்தி என்பர். தற்போது நாம் வாழ்கின்ற நிலையில் பெறப்படும் முக்தி இகமுக்தி. இகமுக்தி என்பது இந்த உடல் மற்றும் மனம் அடைகின்ற சந்தோசமே.

மனமும் உடலும் அடைகிற சந்தோசங்கள் என்று பொதுவாக கூறினாலும் இதில் உடல் பெறும் இன்பங்களான பொருளாதாரமே பெரும்பங்கு வகிகின்றது. இதற்கு காரணமாக இருப்பது பணம், காசு, வீடு, கிணறு, வாகன வசதி வாய்ப்பு. இதை தரக்கூடிய இடமாக நாம் எடுத்து கொள்வது நாலாமிடம்.

மனம் பெரும்பங்கு நாடுகின்ற விசயங்களில் முக்கியமாக கருதபடுவது எதிர்பாலின சேர்க்கை. இதை நாம் அறிய பல பாவங்கள் இருப்பினும் அதனுடைய செயலாக்கத்தின் மூலம் தன்னை மறக்கும் இடமாக, இந்த சிற்றின்ப கடலிலே முழ்கி இரவில் சிறிது நேரமாவது உயிரை மறந்து சமாதி போல இருப்பதை காட்டும் மறைப்பு பகுதிக்குரிய பாவம் மறைவு ஸ்தானம் என்கிற எட்டாமிடம்.

மேலே கூறிய நாலும் எட்டும் தருகின்ற சுகம் தொடர் சுகமல்ல என புரிந்துகொண்ட பேரின்பத்தை நினைத்து இரவுபகலாக தன்னையே மறந்து இருக்கும் பாவமாக இருப்பது பனிரெண்டாமிடம். இந்த பாவத்தில் தன்னிலை மறந்து சமாதி நிலை பெற்று பௌதிக உடலுடன் இருந்தாலும் இல்லை பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்கள் ஒன்றில் இந்த உடலை கரைத்து கொண்டாலும் பெறக்கூடிய இன்பம் தரும் இடமே பனிரெண்டாமிடம்.

ஆக, நாம் இந்த உலகில் இருக்கும்போதே இம்மூன்று சுகங்களையும் சுகமாக அனுபவிக்கவேண்டும். காலபுருஷனுக்கு 4-8-12 இடங்கள் மோட்ச ஸ்தானங்கள் என்கிறோம். மேலும் இவைகளே ஜலராசிகள்.

நாலாம் வீட்டில் நாம் பெரும் ஜலம் நமது வீட்டில் உள்ள கிணறு, முனிசிபல் தண்ணீர் தங்கு தடையில்லாமல் இருப்பது.
எட்டாம்வீட்டில் நாம் பார்க்கும் ஜலம் என்பது கலவியில் காணும் சுக்ல சுரோணித ஜலமாகும்.

பனிரெண்டாம் வீட்டில் நாம் பெறும் ஜலம் என்பது ஜீவன்முக்தர்கள் பெறக்கூடிய அமுததாரை என்கிற ஜலம்.

ஆக, நாலில் உள்ள கிணற்று ஜலம் நமது சாதாரண சௌகரியம் மூலம் தன்னை (உடலை) மறந்து சந்தோசத்தில் தூங்கிபோவது,

எட்டில் கலக்கும் ஜலம் சிற்றின்ப கடலில் முழ்கி சற்று நேரம் தன்னை (உடலை) மறந்து தூங்கிபோவது,

பனிரெண்டில் பெற்ற ஜலத்தால் தன்னை (உடலை) முழுவதும் மறந்து போவது.

ஆக, இந்த 4-8-12 இடங்கள் அவரவர்களுக்கு ஜலராசியாகவோ அல்லது மேற்கூறிய இடங்களில் ஜலகிரகங்களின் சம்பந்தமோ ஏற்படும்போது, மேலே கூறிய இந்த மூன்று மோட்சத்தையும் எளிதில் அடைய முடியும்.

-M.Balasubramanian  (Vellore Bala Jothidar) 9443540743


(வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் & வேலூர் ஜோதிடம் வாட்ஸ்அப் கிளப் மூலம் 1-10-2017  சென்னை, மடிபக்கம், கார்திகேயாபுரம், கூட்டுறவு கல்யாண மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் நிகழ்த்திய ஜாதக ஜலம் மோட்சம் உரையின் சுருக்கம்.)

வியாழன், 4 மே, 2017

பாக்கியவானே பலவான் - 9th Bhava of Each Bhava

பாக்கியவானே பலவான்.



     லக்ன பாவம் ஜாதகர் யார் என்பதை கூறும் பாவம். இது சிறக்க வேண்டுமானால் இதனுடைய ஒன்பதாம் பாவமான பாக்கியம் சிறக்க வேண்டும். ஒருவருக்கு அனைத்து பாக்கியங்களும் தர்மெண்ணங்களும் வந்துவிட்டால் அவன் தான் அதாவது ஜாதகர் சிறந்து உள்ளார் எனலாம்.

        இரண்டாம் பாவம் குடும்பம் பணம் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாவது பாவமான ஜீவனம் நல்ல தொழில் இருக்க வேண்டும்.

           மூன்றாம் பாவம் சிறக்க வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாவது பாவமான எதிலும் வெற்றி லாபம் அதிர்ஷ்டம் ஆசைகள் இருக்க வேண்டும்.

    நான்காம் பாவம் வசதி வாய்ப்புகள் வளம்பெற வேண்டுமானால் அயனசயனம் அழகாக அமைய வேண்டும். அப்பொழுது தான் வீடுவாசலுடன் செளகரியமாக உண்மையில்உள்ளார் எனலாம்.

        ஐந்தாம்பி பாவமான பிள்ளைகள் ஸ்தானம் பலப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒன்பதாம் இடமான ஜாதகர் லக்ன பாவம் பலம் பெற வேண்டும். அதாவது நாம் நல்ல முறையில் வாழ்ந்து காட்டினால் நமது குழந்தைகள் ஒழுக்கமாக பெயர் சொல்லும் அளவிற்கு வாழ்வார்கள்.

     ஆறாம் பாவம் சிறப்புற வேண்டும் என்றால், இந்த இடம். சிறப்புற வேண்டும் என்றால் நோய் கடன் வம்பு தும்பு இல்லாமல் இருப்பது. இதனுடைய ஒன்பதாம் பாவமான ஜாதகரின் குடும்பம் கட்டு கோப்புடன் இருப்பின் வம்பு வழக்குகளில் சிக்க மாட்டார்கள். பணவசதி இருப்பின் கடன் வராது. குடும்ப ஒற்றுமை இருந்து விட்டால் மகிழ்ச்சி வந்து விடும். மகிழ்ச்சி வந்துவிட்டால் நோய்கள் ஓடிவிடும்.

        ஏழாம் பாவம் சிறப்பு பெற வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாம் பாவம் அதாவது மூன்றாவது பாவமான வீரியம் விருத்தி அடையவேண்டும். கணவன் மனைவி சண்டைக்கு 95% காரணம் இதில் உள்ள குறைபாடே.

          எட்டாம் பாவமான ஆயுள் சிறந்து தீர்காயுள் அடைய வேண்டுமானால்  அதனுடைய ஒன்பதாவது பாவமான ஜாதகரின் சுக ஸ்தானம் சுகபட வேண்டும். சுகம் அதாவது பூரணசுகம் கிடைத்து விட்டால் ஜாதகர் எப்போதும் அக்டிவ் மோட்டிலேயே இருப்பார.. எனவே மரணம் கிட்டவர கூட பயப்படும்.

           ஒன்பதாம் பாவமான பாக்கியம் தர்ம்ம் செய்தல் போன்றவை தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றால் இதனுடைய ஒன்பதாம் பாவமான புத்திர ஸ்தானம் பலம் பெற வேண்டும். சத்புத்திர்ர்கள் பிறந்துவிட்டால் பெற்றோர்களுக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்.

        உத்தியோக ஜீவனபாவம் சிறக்க வேண்டும் என்றால் அதனுடைய ஒன்பதாவது பாவமான ஜாதகரின் ஆறாம் பாவம் நன்கு அமைய வேண்டும். நோய் இல்லாது இருந்தால் தானே தொடர்ந்து உத்தியோகம் செய்ய இயலும். பணம் சம்பாதிக்க இயலும்.

          பதினோராம் பாவம் ஆசைகள் அனுபவித்து ஆனந்தபடுவது. இது பலப்பட வேண்டும் என்றால் இதற்கு ஒன்பதாம் பாவமான களத்திர பாவம் சிறக்க வேண்டும். களத்திரம் கட்டிலில் காமுகியாக இருந்து விட்டால் இந்த பதினோராம் பாவம் மூலம் வரும் பரத்தையர் பழக்கம் இல்லாமலேயே பத்தினியிடமே பதினோராம் பாவ ஆபிலாஷைகளை அனுபவித்து விடலாம்.

               பன்னிரண்டாம் பாவம் பலப்பட வேண்டும் என்றால் , அதாவது எதிரும் பரமசுகம் பெற அதற்கு ஒன்பதாவது பாவமான எட்டாம் பாவம் பலப்படவேண்டும். அற்பாயுள் அமைந்து அனைத்தும் இருந்து என்ன பலன். ஆக, இன்பத்தை நிறுத்தி நிதானமாக அனுபவுத்தால் தானே பேரின்பம். இதற்கு தீர்காயுள் தேவை.

                ஆக, எந்த ஒரு பாவம் பலப்பட வேண்டும் என்றால் அதனுடைய பாக்கிய பாவம் பலப்பட வேண்டும்.  இப்படி ஆராயும் போது, ஜாதக கட்டத்தில் நாம் பார்க்கும் பன்னிரண்டு பாவங்களும் ஒன்றையொன்று தொடர்பு கொண்டு பின்னி பிணைந்து உள்ளது. ஆக எந்த பாவம் பலம் குறைகிறதோ, அதற்கு ஒன்பதாம் பாவம் அடிபடுகிறது என அறிகிறோம்.

*by..Vellore Bala Jothidar 9443540743



சித்தாந்த ரத்னம்பஞ்சங்க கணிதர்ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

புதன், 22 மார்ச், 2017

யோனி தரும் அன்யோன்யம் Yoni in Marital Pleasures

யோனி தரும் அன்யோன்யம்







சைவ சித்தாந்த ரத்னா, பஞ்சாங்க கணிதர், ஜோதிடமாமணி
M.பாலசுப்ரமணியன், M.A.,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம், 189, 9-வது தெரு, சாமி நகர், பாகாயம், வேலூர்-632002
செல்: 9443540743 email: jothidananban@gmail.com. www.balajothidar.blogspot.com