மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 27 நவம்பர், 2014

மேஷலக்னமும் துரியோதனனும் Thuriyothana Lagna

மேஷலக்னமும் துரியோதனனும்




      இதிகாசங்களில் வரும் பாத்திரங்களிலே முதல் இடத்தை பிடிப்பவர் துரியோதனன் என்றால் மிகையாகாது. காலபுருஷ ராசியின் முதல் ராசியான மேஷமே இவனது லக்னம். துரியனின் வாழ்க்கையின் பெரும்பங்கு மேஷலக்ன காரனுக்கு ஒத்துவரும். அதில் சில. . .

செவ்வாய் யுத்தகாரகன் என்பதால் யுத்தம் என்றால் இனிப்பாக மாறியது துரியோதனனுக்கு.

ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக இருந்தான்.

செவ்வாயின் ரத்தபாசமான சகோதர பாசம் அதிகம் உள்ளவன் ஆனாலும் இதே சகோதரர்களே மாபெரும் எதிரிகள். ரத்தம் சூடேறுவதால் கோபம் இவனது பலவீனம்.

திரிகோனாதிபதி சூரியன் என்பதால் இவனது புகழ் பரவாத இடமே இல்லை. ஒன்பதாமாதி குரு என்பதால் இவனுக்காக குருவே ஓடிவந்து காப்பது. குரு துரோனச்சாரி கூடவே இருந்தது.

மேஷலக்னகாரனுக்கு 4 & 9 யோகாதிபதிகள் என்பதால், இவன் உயிர் இருக்கும் வரை அம்மா காந்தாரியும், அப்பா திருடரஷ்ட்ரனும் கூடவே இருந்து பாசமழை பொழிந்தது.

செவ்வாய்க்கு புதன் எதிரி என்பதால், நயவஞ்சக மாமன் சகுனியின் நஞ்சு, பிற்காலத்தில் அவன் நெஞ்சை உடைத்தது. சனி பாதகாதி என்பதால் சகுனி வடிவில் சனி.

நண்பனுக்காக உயிரை தருபவன் மேஷலக்னகாரன், கர்ணனை நண்பனாக்கினான் அவன் என்ன செய்தாலும் கண்மூடித்தனமாக நம்பியது.

வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் கொண்டவர்  மேஷ லக்னகாரர். இவரை ஏமாற்றுவது மிக எளிது என்பதால் இவனுக்கு கெட்டபெயரை தந்து மற்றவர்கள் நல்லவர்களாக தோன்றினர். நம்பி மோசம் போவது.
சூழ்ச்சி என்றால் தெரியாத இவன் சுழ்ச்சியாலே வஞ்சிக்கபடுகிறான்.

குடும்பாதிபதி சுக்ரன் என்பதால் பணிவிடையில் குறைவைக்காத பானுமதி மனைவியாக வாய்த்தது. மாரகாதிபதி சுக்ரன் என்பதால், பெண்ணின் காரணமாக மரணத்தை தழுவுகிறான்.

மரணமே வரும் என்று தெரிந்தாலும் முன் வைத்த காலை பின்வைக்காமல் இருப்பது.

இப்படி பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்......

 ====================================================



    
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002


 =====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக