மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மகாளயம் பட்சம் – Mahalya Patcham.

 
மகாளயம் பட்சம் ஓர் ஜோதிட ஆய்வு.

            இந்துவாக பிறந்தவன் சில கர்மாக்களை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்று வேதசாஸ்திரங்கள் சொல்கின்றது. மனிதர்களுக்கு அனுகிரகம் செய்பவர்கள் தேவர்கள் மற்றும் பித்ருக்கள். தேவர்களை பண்டிகை காலங்களில் வழிபட்டு ஆசிகளை பெறுகிறோம். இதே போல் பித்ருக்களாகிய நம் முன்னோர்களின் ஆசிகளை பெற தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற கர்மாக்களை அமாவாசை, மாத பிறப்பு, சிரார்த்த தினம் மற்றும் மகாளயம் பட்சம் நாட்களில் செய்கிறோம்.
                  மகாளயம் என்பது ஆத்மகாரகன் சூரியன், புதன் வீடாகிய கன்னிராசியில் இருக்கும் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச காலமாகும். இந்த 15 நாட்களில் இறந்தவர்கள் அவரவர் சந்ததிகளை பார்க்க பூலோகம் வந்து நமது வீடுகளில் தங்குவதாக ஐதீகம். இந்த மகாளயபட்ச காலங்களில் அவரவர் முன்னோர்கள், தாய், தந்தை இறந்த திதியிலோ அல்லது பரணி நட்சத்திரத்திலோ அல்லது அஷ்டமி திதியிலோ முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவரவர் குடும்பம் மிகவும் சௌகரியமாக இருக்கும். இது போல் செய்பவர்களுக்கு, பித்ருதோஷங்கள் நீங்கி, குடும்பத்தில் பிள்ளை பிறப்பது, குழந்தைகளுக்கு களத்திர தோஷங்கள் இருந்தாலும் நீங்கி நேரத்தில் திருமணம் முடிவது போன்ற உன்னதமான நல்ல பலன்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
                      ஜாதகத்தில் ஐந்தாம் இடம் பாதிப்பு அடைந்தால் இதற்கு காரணமாக பித்ரு தோஷம், பித்ருசாபம் என நமது தர்மசாஸ்திரங்களும், ஜோதிட நூல்களும் கூறுகின்றது. ஜென்ம ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் ராகு கேது போன்ற சர்ப்பகிரகங்கள் நின்றால் இது போன்ற தோஷங்கள் மிக கடுமையாகின்றது. இதனால் என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், காலாகாலத்தில் அதாவது அந்தந்த வயதுகளில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளான படிப்பு, திருமணம், குழந்தை பிறப்பு, வீடு வாசல் அமைவது போன்ற நிகழ்வுகள் காலம் தாழ்த்தி நடக்கும், சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். மாறாக குடும்பத்தில் துர்மரணம், வறுமை, அரசதண்டனை, பெண்கள் சோரம் போகுதல் போன்ற வேதனைதரும் நிகழ்வுகள் சில குடும்பங்களில் நடந்து விடுகின்றது. இப்படிப்பட்ட ஜாதகர்கள் புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச காலங்களில் சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற கர்மாக்களை அனுஷ்டித்தால் திருப்தியான வாழ்க்கைக்கு வேண்டிய ஆசிர்வாதங்களை நமது முன்னோர்கள் நமக்கு அளிப்பார்கள்.
 
 
 
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 

 

திங்கள், 9 செப்டம்பர், 2013

கேது தசை வந்துவிட்டதா. . . ? Kethu dasa


 கேது தசை வந்துவிட்டதா. . . ?

                         ஒருவருடைய வாழ்வில் கேது தசை எப்படியும் ஒரு ஆட்டு ஆட்டிவிடும். கேது தனது தீய பலன்களான விரக்தி, வெறுப்பு, கணவன் மனைவி சண்டை, பைத்தியம் பிடித்தல், சித்தபிரமை நிலை வருதல், தன்னிலை மறத்தல், நல்லவர்களுடன் சண்டை போடுதல், தான்தோன்றி தனமாக நடத்தல், வெளிநாடுகளை வேதனை படுதல், ஜெயில் தண்டனை அனுபவித்தல், தற்கொலை எண்ணங்கள் கூட தோன்றுதல் போன்றவைகளை தர முற்படும்.
                         இது போன்ற பலன்கள் கோச்சாரத்தில் கேது ஜென்ம ராசியில் இருந்தாலும், திரிகோண ராசிகளில் உட்கார்ந்தாலும், இது போன்ற பிரச்சனைகள் சந்திப்பது உறுதி. இரண்டில் கேது தங்கும் போது குடும்பத்தில் வெளியாட்களின் மூலம் குழப்பம் ஏற்பட்டு வீபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஏழில் கேது தங்கும் போது மனைவிக்கு தனது செய்கை பிடிக்காமல் நம்மையே கொலை செய்வதற்கும் துணிவாள். பத்தில் கேது வரும் போது தொழில் நாட்டம் குறைந்து பரதேசி போல் அங்குமிங்கும் அலைவான்.  
                         சூரிய தசையில் கேது புக்தி புகழுக்கு பங்கம் வந்துவிடும். சந்திர தசையில் கேது புக்தி புத்தி சுவாதீனம் இல்லாமல் வைத்து விடும். செவ்வாய் தசையில் கேது புக்தி மனதில் கொலை வெறி தோன்றும். குரு தசையில் கேது புக்தி நல்லவர்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகுவார்கள். சுகர தசையில் கேது புக்தி இழிகுல பெண்களின் சிநேகம் கிடைத்து, பெயர் கெட்டு, வீட்டில் இருக்கும் மனைவியும் பிரிந்து போக வாய்ப்பு. சனிதசையில் கேது புக்தி திருடன் என்ற பெயரை கொடுத்து விடும். ராகு தசையில் கேது புக்தி சமூகத்தில் கெட்ட காரியங்களில் தொடர்பை ஏற்படுத்தி விடும். 
                       இந்த தருணங்களில் கேதுவின் அதிதேவதையாக வரும் விநாயக பெருமாளை வழிபட்டால், கேதுவின் தீய பலன்கள் மாறி நல்ல பலன்களான பெரியவர்கள், சாதுக்கள், குருமார்களின் தொடர்பு ஏற்படும். ஆன்மிக கருத்துக்களில் மனம் ஈடுபடும். யாத்திரைகள் போக வைக்கும். கேதுவிற்கு குரு பார்வை ஏற்பட்டு விட்டால் ராஜகுரு பதவி தேடிவரும். சில நேரங்களில் கோடீஸ்வர யோகம் கூட வந்துவிடும். இந்த தருணங்களில் உடல் லௌகிக இன்பத்தில் முழுகும், ஆனால் அதே நேரத்தில் உயிர் இகத்தில் இருந்த்கொண்டே பரத்தை நினைக்கும்.
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

செய்திமலர் செப்டம்பர் 2013 Seithimalar

செப்டம்பர் 2013     செய்திமலர் 
September- 2013   Seithimalar






 

 

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 

by

 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore - 632002.

 

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in

 




====================================================================================================