மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 27 அக்டோபர், 2014

வெற்றி தரும் நாள் victory days

வெற்றி தரும் நாள் 

" நாள் செய்வதை நல்லோரும் செய்யார் " என்பது முதுமொழி.

       வெற்றி மீது வெற்றி வந்து அது என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் ஜோதிடரை சேரும் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமா...?

         ஜோதிடனாகிய நாம் நம்மை  நம்பி வருபவர்களுக்கு வெற்றியை  தேடி தருவதில் தான் நமது வெற்றி உள்ளது.

        (அவன் உண்மையில் நம்மை நம்பி வருகிறானா என்று தெரிந்துகொள்ள வேண்டும்)

          வருகின்ற ஜாதகனின் நட்சத்திரத்திற்கு எட்டாவது தாரை மற்றும் ஒன்பதாவது தாரை உள்ள நட்சத்திரங்களை தேர்வு செய்துகொள்ளவேண்டும். 8- வது தாரை மைத்திர தாரை. 9-வது தாரை பரமமைத்திரம்.

       மைத்திரம் என்றால் மைதுனத்தில் பெறக்கூடிய இன்பம் போன்றது. சொல்ல போனால் அதிக இன்பம்.

         பரமமைத்திரம் என்றால் பரமனுடன் இரண்டற கலப்பது. இறைவனுடன் நமது மனம இணைவது. சொல்ல போனால் இது பேரின்பம்.

       நாம் இதை பற்றி விரிவாக பிறகு பேசலாம். நம்முடைய கருத்து என்னவென்றால் இன்பமான நாட்கள் என எடுத்துகொள்வோம். நமக்கு வெற்றி வந்தால் இன்பம் தானே.

        உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 8-வது & 9-வது நட்சத்திரத்தின் அதிபதியின் ஆளுமைக்குள் உள்ள நட்சத்திரங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

உதாரணம்: உங்கள் நட்சத்திரம் பரணி என்போம்.

பரணி 
கிருத்திகை 
ரோகினி 
மிருகசிரிஷம் 
திருவாதிரை 
புனர்பூசம் 
பூசம் 
ஆயில்யம் 
மகம்.

இதில் பாருங்கள் ஆயில்யம் & மகம் உங்களுக்கு 8-வது & 9-வது நட்சத்திரமாக வருகிறது.

ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம்,

புதனுடைய  ஆளுமையில் உள்ள நட்சத்திரங்கள்:

ஆயில்யம், கேட்டை, ரேவதி.

இதேபோல, மகம் கேதுவுடைய நட்சத்திரம்.

கேதுவின் ஆளுமையில் உள்ள நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மகம், மூலம்.

ஆக, இந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு வெற்றி தேடி தரும் நட்சத்திரங்கள்:

ஆயில்யம், கேட்டை, ரேவதி, அஸ்வினி, மகம், மூலம். போன்றவை.


இதில், பரணி நட்சத்திரத்தின் ராசி மேஷம் என்பதால் இந்த ராசிக்கு எட்டாவது ராசியில் உள்ள நட்சத்திரங்கள் , மேற்கூறியவையாக இருந்தாலும் வெற்றி தருவது கொஞ்சம் சந்தேகம் என்பதால்,   அதை ஒதுக்கிவிடுவது மிக நல்லது.

இந்த பரணி நட்சத்திரம்  இருக்கும் மேஷ ராசியின் எட்டாவது ராசியில் உள்ள வெற்றி தரும் நட்சத்திரம் கேட்டை என தெரியவருகிறது. எனவே இவர் கேட்டை நட்சத்திரத்தை விட்டுவிடுவது நல்லது.

ஆக, மற்ற ஐந்து நட்சத்திரங்கள் இவருக்கு நிச்சயம் வெற்றியை தேடி தரும் என்பதால் இவர்  ஆயில்யம்,  ரேவதி, அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரம் உள்ள நாட்களை தேர்ந்தெடுத்தால் வெற்றி வாகை சூடுவார்.

வெற்றி மீது வெற்றி வர.

மேற்கூறிய இந்த ஐந்து நாட்களில், சுப ஓரையான குரு, சுக்ரன், புதன் ஒரைகளை தேர்ந்தெடுத்து கொண்டால் வெற்றி கனி நேரடியாக இவரது வாயில் வந்து விழும்.

(இதே போல செல்வம் வரக்கூடிய நாள்,  மனைவியுடன் இன்பம் பெறக்கூடிய நாள் இவைகளை கூட கூறலாம்.)

(இதே போல தோல்வியை மட்டுமே தழுவக்கூடிய நாளை பிறகு பார்ப்போம்)

==================================================================

 ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்
தொடர்பு க்குjothidananban@gmail.com


==================================================================


அன்புடன்,






சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

ஜோதிட செய்திமலர் Oct-2014

ஜோதிட செய்திமலர் 

அக்டோபர்-2014












அன்புடன்,


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002

புதன், 22 அக்டோபர், 2014

கந்தசஷ்டி விரதம் - கர்ப்பம் தரிக்கும். Sasti viratham

கந்தசஷ்டி விரதம் - கர்ப்பம் தரிக்கும்.

      
      ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் பூர்வபுண்ணிய ஸ்தானம் இவை இரண்டும் நம் ஆத்மசந்தோஷத்திற்கு மிக முக்கிய காரணமாகும். ஒருவனுக்கு எவ்வளவு தான் சொத்து சுகம் இருந்தாலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லாவிட்டால் வாழ்க்கை வாடிப்போகும். திருமணம் முடித்து மூன்று வருடங்களுக்குள் குழந்தை பிறந்து விட்டால் பேரின்பமே. இல்லாவிட்டால் அப்பப்பா, படும் வேதனையை சொல்லவே வேண்டாம். சமூதாயத்தில் அதுவும் நமது தமிழ்நாடு போன்ற ஊரில் குழந்தை இல்லாத தம்பதியர்களின் தவிப்பு சொல்லில் அடங்காது.



      கணவனின் ஜென்ம ஜாதகத்தில் லக்னத்தில் விஷமுள்ள பாம்புகளான ராகு அல்லது கேது இருந்துவிட்டால் கணவனின் விந்துக்களில் உள்ள உயிரணுக்கள் மிக குறைவாக இருக்கும். இப்பேற்பட்ட ஜாதகத்தில் சனி லக்னத்திற்கு 4, 7, 11 இடங்களில் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் எவ்வளவு தான் உயிரணுக்கள் உற்பத்தியானவுடன் அழிந்துவிடும். செவ்வாய் 6, 7, 10 இடங்களில் இருந்து லக்னத்தில் இருந்த ராகு கேதுவை பார்த்து விட்டால் உயிரணுக்கள் உற்பத்திக்கே மருந்து சாப்பிட வேண்டிவரும். ஜனன லக்னாதிபதி நீச்சம் பெற்று பாவிகளின் பார்வை பெற்று இருந்தால் இதே போன்ற நிலை அமைந்துவிடுகிறது.

       இதே போல கணவனின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் சனியுடன் கூடிய புதன் இருந்தாலோ அல்லது மூன்றாம் இடத்தின் அதிபதி நீச்சமோ அஸ்தங்க தோஷமோ அடைந்துவிட்டால், உயிரணுக்கள் தேவைக்கு அதிகமாகவே இருந்தாலும் அதனுடைய நீச்சல் வேகம் (மொபிலிட்டி) இல்லாமல் போய்விடும். இதனால் கணவன் கட்டிலில் கூட சாந்தமாகவே இருப்பார்.

         பெண்களுக்கோ கர்பஸ்தானமான ஆறாமிடம் அடிபட்டு போனாலும், பெண்களின் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் கெட்டு போய் சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் தீயகிரகங்களின் பார்வை பெற்று விட்டு இருந்தால் கர்ப்பம் தரிப்பதே கேள்விக்குறியாகி விடுகின்றது.  



         
        பெண்களின் ஜாதக கட்டத்தில் ராகு லக்ன திரிகோணங்களில் இருந்தால் அதிகபடியான உதிரபோக்கும் கர்பம் கலங்கிபோகுதல் போன்ற நிலையும் ஒரு சில பெண்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. இதே போல லக்ன திரிகோணங்களில் கேது இருந்து பாவிகளின் பார்வையும் பட்டுவிட்டால் மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட உதிரபோக்கு உண்டாகும். இதனால் சுழற்சி முறை மிகவும் பாதிப்படைந்து விடும், மேலும் இது போன்றவர்களுக்கு தாம்பத்தியம் மற்றும் குழந்தைபேறு போன்ற வார்த்தைகளை கேள்விபட்டாலே தலைவலி பிய்க்கும்.

            தம்பதியர்களின் ஐந்தாம் அதிபதி மற்றும் குரு இருவரும் ஜாதகத்தில் கெட்டு இருந்தால் இறைவனின் கருணை மட்டுமே பலன்தரும்.
  
        மேற்படி கிரக அமைப்பு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிகம் கலந்த எளிய பரிகாரம்;



சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.


        ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தீபாவளி வருகிறது. மறுநாள் அமாவாசையன்று கெளரிநோன்பு கடைபிடிக்கபடுகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறை பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  சஷ்டி திதியில் முருகன் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்கிறார். இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் உள்ளது. இந்த ஆறு நாட்களிலும் தம்பதியர்கள் இருவரும் கடுமையான விரதம் இருந்தால் குழந்தை பேறு பாக்கியம் கணவன் ஜாதகத்திலோ அல்லது மனைவி ஜாதகத்திலோ இல்லாவிட்டாலும், முருகன் அருளால் குழந்தை பிறப்பது கண்கூடு. இதை தான் ஷஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையான கருப்பையில் முருகனே குழந்தையாக வந்து பிறப்பான்.

       பெண்களுக்கு இந்த விரதம் முறைப்படி அனுஷ்டிப்பதால் டி & சி செய்யாமலேயே கர்ப்பப்பை மற்றும் பெலோபியன் டியுபில் உள்ள கசடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். மாதந்திர மாதவிடாய் முறைபடுத்தபடும். இதனால் தாம்பத்தியத்திலும் நாட்டம் கூடும்.

முறைப்படி இந்த விரதத்தை மேற்கொள்ளும் ஆண்களுக்கு விந்து கெட்டி படும். விந்துவில் உயிரணுக்கள் உற்பத்தி பெருமளவு கூடும். ஆண்தன்மை வீரியம் வேகமாக அதிகரிப்பதை உள்ளப்பூர்வமாக உணரலாம். நரம்பு மண்டலமே ஓவராயிலிங் செய்த தெம்பு கிடைக்கும். 

விரதமுறை:


        வளர்பிறை பிரதமை முதல் கொண்டு சஷ்டி திதி வரையில் உள்ள இந்த ஆறு நாட்களிலும் முருகனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு உபவாசம் இருத்தல் அவசியம். ஆறு நாளும் தொடர்ந்து இருந்தால் பலன் கூடும். பொதுவாக அனைவரும் ஆறாம் நாள் மட்டும் உபவாசம் இருந்து வழிபடுவார்கள். சூரசம்ஹாரம் பார்த்த பின்னர் உணவு உண்பர். ஏழாம் நாள் வீட்டில் முருகனுக்கு அதிவிமரிசையாக விருந்து படைத்து குறைந்தது ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து முருகனை பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.


         
       இதில் அதிக முக்கியத்துவம் விரதத்தின் மகிமையே. விரதம் முறைப்படி இருக்க வேண்டும். உபவாசம் என்ற பெயரில் உப்பு இல்லாத உணவு என்று உப்புமா, பொங்கல், வடை, பாயசம், காபி என்று உட்கொள்ள கூடாது. தீபாவளி அடுத்த நாளான கௌரி நோன்பு அன்று வடை பாயசம் சாப்பிட்ட பின்னர் அன்று இரவே விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்று இரவு பழங்களை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

         மறுநாள் முதல் சஷ்டி திதி வரை பழங்கள், பழரசம் மட்டும் உட்கொள்ள வேண்டும். சிலர் தேனுடன் எழுமிச்சை தண்ணீர் மட்டும் கூட குடித்து விரதம் மேற்கொள்ளுவார்கள். இதனால் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சரிபடுத்த படும். ஞானமார்கத்தை மேற்கொள்ளுபவர்களும் இந்த எளிய முறையை பின்பற்றி நினைத்ததை சாதிப்பார்கள். இந்த விரதம் கடுமையானது என்பதால் இந்த நேரத்தில் ஒரு சிலருக்கு இரத்தஅழுத்தம்  (blood pressure) அதிகமாகிவிடும். ஒரு சிலருக்கு குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மயக்கம் வந்து நாடி குறைந்து விடும். எனவே இந்த விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு மருத்துவரின் ஆலோசனை பேரிலே அனுஷ்டிக்க வேண்டும்.

       இந்த காலங்களில் தினமும் குளித்து முருகனை வழிபட வேண்டும். வெளிவேலைகளை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும். அலுவலகத்திற்கோ வேறு வேலைக்கோ செல்ல கூடாது. இந்த ஆறுநாளும் விடுமுறை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் உஷ்ணத்தை தவிர்க்க வேண்டும். வெளியில் சென்றால் இந்த நேரங்களில் உடனடியாக உடல் உஷ்ணம் ஏற்படும், அதுமட்டுமல்லாமல் மனநிலையும் மாறும். ஒரு சிலருக்கு இந்த நேரத்தில் எல்லா உணர்வுகளும் மேலோங்கி நிற்கும். இதில் காம உணர்வும் கூடி இருக்கும். இருந்தாலும் நாம் அதை புறக்கணித்து முருகனை மனமார உருகி முருகனின் பாடல்களை கேட்கவேண்டும்.

      இந்த நாட்களில் போதை வஸ்துக்கள், டீ, காபி, சாப்பாடு, டிபன் நொறுக்கு தினி இப்படி ஏதாவது வாயில் போட்டுவிட்டால் அவ்வளவு தான் விரதம் அதோகதிதான். இது கடுமையான விரதம். இந்த விரதத்தின் மகிமையை முசுகுந்த சக்ரவர்த்திக்கு வசிஷ்ட மாமுனிவர் கூறியதாக கருதபடுகிறது.

             அவரவர்கள் குலதெய்வத்தை வணங்கிய பின்னர் சஷ்டி விரதத்தை அனுஷ்டித்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள் முருகனின் அருளினால் பலன் கிடைக்கும்.

(இந்த கடுமையான விரதம் மேற்கொள்ளுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே செய்யவேண்டும். இல்லாவிட்டால் விபரித விளைவுகளும் வரலாம்.)



========================================================================


ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி ஆன்லைன் ஜோதிட வகுப்புகள் சேர   தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில்: jothidananban@gmail.com

அன்புடன்,




சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002


======================================================================

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மூலம் மாமனாருக்கு ஆகாதா...! moolam

மூலம் மாமனாருக்கு ஆகாதா...!   

       
         மூலம் நட்சத்திரம் உள்ள பெண்ணை தன் மகனுக்கு மணம் முடித்தால், மாமனார் உயிருக்கு ஆபத்து.. இது போன்று  பலதரப்பட்ட பேச்சுக்களை நாம் கேள்விப்பட்டு உள்ளோம். இது அனைத்தும் உண்மையா..? மூலம் பெண் தன மாமனாரின் உயிரை எடுக்கும் எமனாக மாறுவாளா...? 



         மூலம் நட்சத்திரம் என்றால், குழந்தை பிறக்கும் நேரத்தில், பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரன் மூலம் நட்சத்திர கூட்டத்தின் திசையில் உலா வந்து கொண்டு இருப்பார். எனவே குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்று கூறுவோம்.

        மூலம் நட்சத்திரத்தின் அதிபதி யார் என்றால் ஞானத்திற்கு காரகம் வகிக்கும் கிரகமான கேது பகவான். இந்த நட்சத்திரம் இருந்த ராசியோ தனுசு. புத்திக்கு காரகமான குருவின் சொந்த வீடு இந்த தனுசு. ஆக, ஞானமும் புத்தியும் சேர்ந்தால் என்ன ஆகும்..? பெரிய தத்துவஞானியாக மாறுவார்.

         இப்படிபட்ட அதிபுத்திசாலியான  தத்துவஞானி உலக வாழ்க்கையில் நிச்சயம் பற்று சற்று குறைந்தே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எள்ளு என்றால் எண்ணையாக மாறுவார்கள். சொல்லபோனால் கற்பூர புத்தி. எதையும் டக்கென்று புரிந்து கொண்டு நடக்கும் ஆற்றல் உள்ளவர்கள்.

     இது போன்ற மூலம் நட்சத்திர பெண் உண்மையே பேசுவாள். மூடிமறைக்கும் குணம் இவளுக்கு இருக்காது. இவளுக்கு வரும் கணவன் அறிவாளியாக இருப்பனே தவிர எந்நேரமும் உண்மையை பேசுபவன் என்று அடித்து கூறமுடியாது. இவள் கணவன் ஆளுக்கு ஏற்றாற்போல் பேசுவதில் கெட்டிகாரன், எனவே இவன் இவனது பெற்றோர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பான். ஆனால் இந்த பெண்ணோ அந்த சிறு தவறை கூட தட்டலென்று எல்லோர் மத்தியிலும் போட்டு உடைப்பவள். காரணம் இவள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவள் கிடையாது.

       உதாரணம் வீட்டிற்கு ஒருவர் வந்து உங்கள் சம்பளம் என்னவென்று கேட்டால் இது போன்ற பெண்கள் பைசா வரை விபரமாக கூறுவார்கள். இது அந்த வீட்டின் கணவனுக்கும் பிடிக்காது, அவனது அப்பாவிற்கும் பிடிக்காது. இது போன்ற பிரச்சனைகள் மனதிற்குள் வளர்ந்து கொண்டே சென்று ஒரு நாள் பூதாகாரமாக வெடிக்கும். அப்படி வெடிக்கும்போது, உங்களுக்கே தெரியும், இந்த மூலம் நட்சத்திர பெண் நியாயத்திற்கு மதிப்பு கொடுப்பாள் ஆனால் தவறு செய்து விட்டால் வயதானவர்கள் என்றாலும் தெருவில் நிக்கவைத்து மனபங்கத்தை எடுத்துவிடுவாள். இவள் குடும்பத்தையே பிரிந்தாலும் தனது வாதத்தை முன்னிறுத்தி ஜெயித்து விடுவாள். இதனால் கணவன் மனைவிக்குள் கசப்பு ஏற்பட்டு குடும்பம் பிரியும். இதனால் மாமனார் மருமகள் மீது வேறுவிதமான பழி போடவும் முயல்வார். இதனால் விரோதம் மேலும் வளரும். 

        இதனால் தான் மூலம் பெண் மாமனாருக்கு ஆகாது என்கிறார்கள். மாமனார், மாமியார் இருவரும் மிக நியாயமானவர்களாக இருந்தால் நிச்சயம் இந்த பெண்ணை புகழ்வார்கள். எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் சில நியாயங்களை மறப்பதால் இதன் பிரச்சனை உறுதியாகின்றது.

             இது போன்ற பெண்கள் ஆரம்பத்தில் இருந்தே வெளியூரில் கணவனுடன் வசித்தால் பிரச்சனைகளை விலக்கி விடலாம்.


========================================================================


ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி ஆன்லைன் ஜோதிட வகுப்புகள் சேர   தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில்: jothidananban@gmail.com

அன்புடன்,

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002


======================================================================

வெள்ளி, 17 அக்டோபர், 2014

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதா...? ayilyam bride


ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதா...?

       ஒரு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தால், குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோசமாக எங்க மாட்டுபொண்ணு வந்துட்டா..என்று குதிப்பார்கள். இதில் அதிகமாக எகிறி எகிறி குதிப்பவள் மாமியார் என்ற பதவி உயர்வு பெற்றவள் தான். ஏன் என்றால் சொல்லும் வேலையை மாடு மாதிரி வாய் திறக்காமல் செய்பவள் என்பதால் தான்.





       மருமகள் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம் என்றால் ஐயோ வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஏன்...? ஆயில்யம் என்பது மாமியாருக்கு ஆகாதாம். என்ன விஷயம் என்று பார்த்தால் ஆயில்யம் பெண் வந்தால் மாமியார் டிக்கட் வாங்கி விடுவார்களாம். எந்த ஊருக்கு டிக்கெட் என்றால் எமலோகம் என்று நிறைய பேர் வேதனையுடன் கூறுகிறார்கள்.

      யார் சொன்னது இப்படி என்றால் எங்க ஊரு ஜோதிடர் சொன்னார் என்று பெரும்பான்மையானவர்கள் சொல்க்கிறார்கள். உண்மையில் ஜோதிடர் சொன்னாரா என்றால்.. கொஞ்சம் ஆ...ஊ...என்று மழுப்புவார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம் கொண்ட மருமகள் மாமியாருக்கு மரண டிக்கெட் வாங்குவாள் என்று எந்த ஜோதிட சாஸ்திரத்திலும் சொல்லவே இல்லை. அப்படி இருக்க ஏன் இப்படி பட்ட கதைகள்.

      ஆயில்யம் என்பது மாமியாருக்கு ஆகாது என்பது இடைச்சருகல்.  உண்மை என்னவென்றால் ஆயில்ய நட்சத்திர காரர்கள் சுயநலவாதி, தான் உண்டு தனது குடும்பம் உண்டு என இருப்பர். குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்ப்பார், மேலும் முதல் முக்கியம் கணவன், பிறகு தான் உறவினர், உறவினர் வரிசையில் கணவனை தவிர மற்றவர்கள் இருப்பார்கள். இங்கு கணவனின் அப்பா, அம்மா கூட இந்த பெண் உறவினராக தான் பார்க்க நேரிடும். ஏன் என்றால் இவள் கணவனே கண்கண்ட தெய்வமாக நினைப்பவள். இவள் திருமணத்திற்கு பிறகு மாமியாரை மட்டுமல்ல அவளுடைய சொந்த அம்மாவை கூட உறவினராக தான் இவள் பார்ப்பாள். அப்படி இருக்க மாமியாரை மயானத்திற்கு இவள் எப்படி அனுப்புவாள்...? 



          அந்த காலத்தில் இது போன்ற ஆயில்யம் நட்சத்திர கொண்ட மருமகள் வீட்டில் எது செய்தாலும் முதலில் கணவனுக்கு கொடுப்பாள், பிறகு பிள்ளைகளுக்கு கொடுப்பாள், அடுத்து இருந்தால் தான் மற்றவர்களுக்கு கொடுப்பாள். இந்த இடத்தில் மாமியாரை 3-வது வரிசைக்கு தள்ளி விடுவதால் மாமியாருக்கு எதுவும் கிடைப்பதில்லை. குறிப்பாக ஒரு குழோம்பு வைத்தால் கூட குழம்பில் இருக்கும் நிறைய காய்கறிகளை தன் கணவனுக்கே கொடுத்துவிடுவாள். கடைசியில் குழம்பில் காய் இல்லாமல் மாமியாருக்கு போகும். சில நேரங்களில் குழம்பே கூட இல்லாமல் மாமியார் வெறும் தன்னிசோறு சாப்பிட நேரமாம். இதனால் மாமியாரின் உடல் நிலை குறைந்து மரணத்தை தொடும் அளவிற்கு கூட போகலாம் என்ற கதையினாலே ஆயில்யம் என்பது மாமியாருக்கு ஆகவே ஆகாது என்ற முடிவோடு மாமியார் உயிருடன் இருக்கும் வரை தன் ஆயில்யம் மருமகளை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது என அவர்களாகவே முடிவு செய்து கொள்கின்றனர்.
ஆயில்யம் கொஞ்சம் சுயநலம் உள்ளதாலும், முக்கியமாக கணவனுக்கு முதல் மரியாதை என்று தருவதாலுமே இந்த பிரச்சனை. எனவே ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் முற்றிலும் ஆகாததே.

===================================================================
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002
======================================================================