மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கிரகங்கள் அவரவர் ஜாதகப்படி நல்லவரா? கெட்டவரா?

கிரகங்கள் அவரவர் ஜாதகப்படி நல்லவரா? கெட்டவரா?

கிரகங்கள் ஜோதிட அடிப்படையில் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் என இரு பிரிவாக நமது ஜோதிட வல்லுனர்கள் பிரித்துள்ளனர். ஒருவருக்கு ஒரு கிரகம் நல்லவராக இருக்கும், அதே கிரகம் மற்றொருவருக்கு தீயவராக இருப்பார்கள். உதரணமாக, ஒரு கொலைகாரனை பார்த்தால் அவன் ஒரு தீயவன் என்று தீர்மானித்து அவனை பார்த்த உடன் என்ன செய்வானோ என்று மக்கள் பயந்து இருப்பார்கள். ஆனால் அவனது குடும்பத்தை அவன் காப்பாத்துவதால், அந்த குடும்பத்திற்கு அவன் நிச்சயம் நல்லவன். அதே போல் தான் சிலர் பொது வேலையில் முழு நேரத்தையும் செலவழிப்பார்கள், விட்டிற்கு எதையும் செய்யாமல் விட்டு விடுவார்கள். இப்படி பார்த்தால் இவர் மற்றவர்களுக்கு நல்லவர், ஆனால் அவர் குடும்பத்தினற்கு கெட்டவராக தெரிகிறார்.
இதே போல் ஒரு ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகம் மற்றொரு ஜாதகத்திற்கு தீமையை செய்கிறது. கிரகங்கள் இந்த முடிவை அவரவர் லக்னத்தை வைத்து செயல்படுகிறது.
இனி விபரமாக பார்ப்போம்.



மேஷ லக்னம்: இந்த லக்ன காரர்களுக்கு, செவ்வாய் அதிபதியாக வருவதால் அவரின் பலம் இவரிடம் தெரியும். இவருக்கு, சுக்ரன் 2, 7-க்கு அதிபதியாக வருவதால் செல்வத்தையும், மனைவியையும் இவர் தான் தருவார். எனவே இவர் யோகாதிபதி அந்தஸ்து பெற்றுவிடுவார். இருந்தாலும், இவரே மாரகாதிபதியாக வருவதால் இவருடைய உயிரை எடுப்பவரும் இவரே. மேலும், சூரியன், குரு சந்திரன் போன்றவர்கள் முழு சுபர வருகிறார்கள். சனி இவருக்கு அதிகமான பாதகமான செயல்களை செய்வார், இருந்தாலும் உத்தியோகம் தருபவர் இவரே. புதன் இவரது எதிரியாக இருக்கிறார்.

ரிஷப லக்னம்: சுக்ரன் அதிபதியாக வருவதால் இவரிடம் சுகர பலம் இருக்கும். இவருக்கு, 8,11-க்குரிய குரு மாபெரும் எதிரியாக வருகிறார். செவ்வாய் மனைவியை தந்தாலும், இவரின் உறக்கம் செவ்வாயின் கையில். புதன் அருமையான நண்பராக உள்ளத்தால், அதிக நன்மை செய்பவர் இவரே. சந்திரன் ஒருவிதத்தில் இவருக்கு தொந்தரவே செய்வார். சூரியன் எதிரியாக இருந்தாலும் சுகம் தருபவர். சனி நல்லவர் வரிசையில் அமருகிறார்.

மிதுன லக்னம்: புத்திசாலி புதன் இவரது அதிபதி. சந்திரன் எதிரியாக இருந்தாலும் குடும்பத்திற்கு அங்கம் இவரே. சூரியன் இயற்கையில் நண்பர் என்பதால் அதரவு உண்டு. சுக்ரனும் முதல் தர யோகாதிபதி, இருந்தாலும் விரையாதியாக இருப்பதால் அடம்பர செலவு செய்ய வைப்பர். அதி பயங்கரமான தீயவர் வரிசையில் முதலில் நிற்ப்பவர் குரு, அவரை தொடர்ந்து செவ்வாய் வருகிறார். சனி இவருக்கு நோய்களை தந்து, காப்பாத்துபவரும் இவரே.

கடக லக்னம்:அமைதியின் இருப்பிடம் சந்திரனே இவரின் அதிபதியாக இருந்தாலும், சில நேரங்களில் கடல் அலைகள் கொந்தளிப்பது போல் ஜாதகரை கொந்தளிக்க வைப்பவரும் இவரே. சூரியன் இவருக்கு சுள் என்ற பேச்சை தந்து குடும்பத்தை தருபவர். குருவும் செவ்வாயும் நிறைய யோகபலன்களை செய்வார்கள். புதனும், சுக்ரனும், சனியும் எதிரிகளின் வரிசையில் இடம் பிடித்து கொண்டனர். சுக்ரன் தசை சூப்பர் என்று இவருக்கு இருந்தாலும், கடைசியில் இவரை கேவலமாக்கும் அல்லது படுக்க வைத்துவிடும்.

சிம்ம லக்னம்: சிங்கத்தின் சிறப்பு இவரிடம் இருக்க இவரின் அதிபதி சூரியனே. புதன் மிக்க நல்ல பலன் தருவர். சந்திரன் சந்தோஷம் கொடுப்பார். சனி மனைவியை தந்து, படாதபாடு படுத்துவார். குரு செவ்வாய் நல்லதே செய்வார். செவ்வாய் முதல் தர யோகாதிபதி. சுக்ரன் எதிரி போர்வையில் இருந்தாலும் தொழில் சிறக்க உதவுவார். இருந்தாலும் சுக்கரனை ஒரு அடி தள்ளியே இவர் வைப்பது இவருக்கு நன்மை தரும்.

கன்னி லக்னம்: லக்னாதிபதி புதன் தொழில் தந்து மேன்மை செய்வார், இவரை விட சுக்ரன் உண்மையில் சூப்பர் இவருக்கு மட்டுமே.சூரியன் ஓரளவு பரவாயில்லை. சந்திரன் இவரை உண்டு இல்லை என செய்வார். செவ்வாய்யோ இவரை கொல்லுவதற்கு கங்கணம் கட்டி கொள்ளுவார். குரு பாதகாதிபதியாக வருவதால் பாதகங்கள் பல செய்து மனைவியை தருவார். சனி யோகாதிபதி என்று கூறினாலும் நோய் மேல் நோய் தருபவரும் இவரே.

துலா லக்னம்: இவர் அதிபதி சுக்ரனே ஆயுளை தருவதால் நல்லவரே. புதன் யோகாதிபதி அந்தஸ்து அடைகிறார். குரு 3.6-க்கு உள்ளதால் தொல்லை தருவதில் முதல் வரிசையில் நிற்பார். செவ்வாய் குடும்ப, மனைவி தந்தாலும், மனைவி அதிகாரம் அதிகரிக்கும். சூரியன் இரண்டாம் தர வரிசையில் தொல்லை தர காத்திருப்பார். சந்திரன் அருமையான தொழிலை தருவார். சனி யோகாதிபதி யாக வந்து நிறைய நிலபுலன்களை கொடுத்து சமுதாயத்தில் தலை நிமிர வைப்பர். சனியின் நன்மை சந்தோஷத்தை எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கும்.

விருச்சிக லக்னம்: செவ்வாய் அதிபதி என்றாலும் 6-ம் வீட்டின் ஆதிபத்யம் உள்ளதால் வெற்றி கொடி கட்டுவார். குரு குடும்பம் & பிள்ளைகளை உயர்த்தும் யோகாதிபதி. சூரியன் ஒரு நல்ல அரசாங்க பலத்தை தருவார். சந்திரன் சராசரி சுபரகிறார். சுக்ரன் மனைவியை தந்து இன்பத்தையும் தருவார், ஆனால் மனைவி வகையில் செலவுகளை ஏற்படுத்துவார்.சனியும் சில நன்மைகளை செய்து விடுவார். ஆனால் புதன் உண்டு இல்லை என்று பாடாய் படுத்தி இவரின் கௌரவத்திற்கு அடிகடி பங்கத்தை உண்டுபண்ணுவர்.

தனுசு லக்னம்: குரு அதிபதி மற்றும் சுகத்தை தருபவர். சனி குடும்பத்தை தந்து பணம் பற்றாக்குறைக்கும் காரணமாக விளங்குவார். செவ்வாய் 5,12-க்கு உரியவர் என்பதால் பிள்ளை பிறப்புக்கு உறுதியாகிறார். சுக்ரன் மாபெரும் விரோதியாக இருப்பார், சுகர தசை சுகம் தருவது போல் தந்து வேதனையை விளைவிப்பார். புதன் மனைவி மூலமாகவும், தொழில் இடங்களிலும் பாதகம் தருவதோடு மரியாதையை சீர்குலைக்க முற்படுவார். சந்திரன் அஷ்டமாதி என்றாலும் கவலை இல்லை. சூரியன் சமுதாயத்தில் புகழ் பெற செய்து விடுவார்.

மகர லக்னம்: சனி அதிபதி & குடும்ப பொறுப்பில் உள்ளதால் இவர் இஷ்டம் போல் குடும்பம் அமையும். சுக்ரன் & புதன் சுப பலம் அதிகம் தந்து செல்வ செழிப்பை தந்துவிடுவார்கள்.சூரியன் தொல்லை மீது தொல்லையாக தந்து கொண்டே இருக்கும். செவ்வாய்யோ பாதகாதி. சந்திரனோ மனைவியை தந்தாலும், உயிரை வாங்க தயாராக இருப்பார்.குருவால் சில ஆத்ம சந்தோஷம் வரலாமே தவிர, மற்றபடி சுகம் இல்லை.

கும்ப லக்னம்: சனி 1,12-க்கு உரியவர், என்பதால் செலவுகளை மனதிற்குள் கணக்கு போடுவார். குரு நல்ல குடும்பம் மற்றும் சந்தோஷம் தரும். செவ்வாய் நல்ல உத்தியோகம் தருவதோடு வெற்றிக்கு வித்திடுவார். சுக்ரன் சுபிட்சத்தை சொந்தமாக்கி தருவார். புதன் சுக்ரனுக்கு அடுத்தபடி நன்மைகளை தருவார், இருந்தாலும் சில வாதசம்பந்த பிரச்சனை கொடுக்க முயலுவார். சந்திரனும் சூரியனும் கஷ்டம் மேல் கஷ்டம் தருவார்கள், சூரியன் மனைவி அமைத்து தந்து அவளிடம் சில நேரங்களில் தோல்வியை பெறவைக்கலாம்.

மீன லக்னம்: அதிபதி குருவே 1, 10-க்கு வந்து அமைதியான தொழில் தருவார். போதுமான பணம் மட்டும் கிடைக்கும். சுக்ரன் மாபெரும் எதிரி இவரது தசை இவரை தலை கிழாக்கும். புதன் பாதகமான காரியங்களை மட்டுமே செய்வார், இருந்தாலும் மனைவி தருவார்.செவ்வாய் அருமையான பலன் செய்வார். சூரியன் நல்லவர் இருந்தாலும், வியாதியை தராமல் விட மாட்டார். சந்திரன் நல்ல குழந்தைகளை கண்டிப்பாக தருவார். சனி சில லாபங்களை தந்து அதை விட்டிற்கு வருவதற்குள் செலவுகளையும் செய்ய வைத்து விடுவார்.

ராகு, கேது கிரகங்கள் குறிப்பாக சிம்ம மற்றும் கடக லக்ன காரர்களை பாதித்து விடும். இருந்தாலும் இவர்கள் உட்கார்ந்த இடங்களை வைத்தே ஒவ்வொரு லக்ன காரர்களுக்கும், இவர்கள் நன்மை செய்வார்களா தீமை பண்ணுவர்களா என கூற முடியும்.

மேல் சொன்ன பலன்கள் பொதுவானவை மற்றும் தனிப்பட்ட ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற ராசிகளை வைத்து பார்த்தே முடிவு பண்ணுவது சிறப்பு. மேல் குறிப்பிட்ட லக்ன காரர்களை கிரகங்கள் மேல் சொன்ன படியே நன்மை செய்யும் அல்லது தீமை செய்யும் என்றும் அறுதியிட்டு கூற முடியாது, காரணம், இவர்களுடன், சேர்ந்த, பார்த்த, இவர்கள் உட்கார்ந்த இடங்கள் மற்றும் கிரகங்களை வைத்தே முழு பலன்களை அறிய முடியும்.

========================================= =========================





வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.




ஆக்கம்:



சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.


================================ =================================

வியாழன், 24 ஜனவரி, 2013

நோய் வரும் காலம். Time of Disease

நோய் வரும் காலம்.

                   ஜோதிட ரீதியாக சில நோய்கள் சில கால கட்டங்களில் தோன்றி சில காலம் உடலில் தங்கி பிறகு மறைகிறது. சில நோய்கள் மட்டும் உயிர் பிரியும் வரை தொடர்ந்து கூடவே வருகிறது. அவரவர் ஜாதகத்தில் ஆறாம் இடம் குறுகிய கால நோய்களையும், எட்டாம் இடம் தொடர் நோய்களையும் நமக்கு அறிவிகின்றது. பொதுவாக ஆறாம் இடத்தில் எந்த விதமான கிரகம் இருக்கிறது, யார் பார்க்கிறார்கள், அந்த வீட்டின் அதிபதி போன்ற காரணங்கள் தான் ஒருவரின் நோயை அறிவிகின்றது.
               
                 "மணி, மந்திர, ஒளஷதம்" என்பது ஒருவருக்கு நோய் வந்த பிறகு நீக்கும் வழிகள். இவை முன்றையும் உபயோகிக்கும் முறையை நமக்கு தெரிவிப்பது அவரவர் ஜாதக கட்டமே. ஜோதிடம் மூலம் ஒருவருக்கு எந்த கிரகத்தினால் நோயில் ஏற்பட்டது என்பதை பல சோதனைகள் மூலம் அறிந்த பின்னர், அந்த கிரகத்திற்குறிய மணி என்கின்ற ரத்தினத்தை உபயோகிப்பதாலும், அந்தந்த கிரகத்தின் அதிதேவதையின் மந்திரத்தை உச்சரிபத்தின் மூலமும், அந்தந்த கிரகத்தின் தன்மையான பித்தம், சிலோத்துமம், வாதம் என அறிந்து அதற்கு ஏற்ற மருந்தை தருவதின் மூலம் ஒருவரின் பிணியை நீக்க முடியும்.
                  ஜோதிட ரீதியாக சில நாளில், சில திதிகளில், சில நட்சத்திரத்தில் உதயமாகும் நோய்கள் சீக்கிரத்தில் முடியும், தொடர் வியாதியாக மாறும் போன்ற தகவல்களை நமது ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் முன்கூட்டியே நமக்கு அறிவித்துள்ளனர். அவைகள் யாதெனில்:
                ஞாயிற்று கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி யுடன் கூடிய திருவாதிரை, ஆயில்யம், மகம் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும்,
                  செவ்வாய் கிழமையில் வரும் நவமி திதியுடன் சுவாதி, கேட்டை, பரணி நட்சத்திரங்கள் சேர்ந்தாலும்,
                  சனிக்கிழமையில் வரும் சதுர்த்தசி திதியுடன் பூரம், பூராடம், பூரட்டாதி நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் இந்த தினங்களில் ஆரம்பித்த நோய் மரண பயத்தை தரும் எனபது விதி.
                   மேலும், கரணங்களில் சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம், சகுனி ஆகிய நான்கு கரணங்களிலும் ஆரம்பித்த நோயும் பிராண பயத்தை உண்டு பண்ணும்.   ஜென்ம நட்சத்ரம்,அதற்கு 3, 5, 7-வது நட்சத்திரங்களில் ஆரம்பித்த நோய் தீராக்கவலையிலேயே முடியும். இதே போன்று, சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி, சஷ்டி, அஷ்டமி, துவாதசி, அமாவாசை போன்ற திதிகளில் ஏற்பட்ட நோய்கள் சில நாட்கள் தொடர்ந்து பிறகு முடியும். வியாதியால் பீடிக்கப்பட்டு இருக்கின்றவர்களுக்கு சந்திராஷ்டம நாட்களிலும், ஜென்ம நட்சத்திரதிற்கு 88-வது பாதமாகிய வைநாசிக பாதத்தில் கெட்ட கிரகங்கள் பிரவேசிக்கும் பொழுது மரண பயம் வந்து வந்து போகும்.
                  மேற்கூறிய மரண பயம் வருமே ஒழிய மரணம் சம்பவிக்காது. மரணம் சம்பவிக்க வேண்டுமானால், அவரவர் ஜென்ம ஜாதகத்தில் மரணம் வருவதற்குறிய கால கட்டம் வந்தால் தான் வரும். மரணம் வராத இது போன்ற காலங்களை தான் கண்டம் என்கின்றோம்.
                   எப்படிப்பட்ட நோய்கள் வந்தாலும், அந்தந்த கிரக ஆதிதேவதையை ஆரதனை செய்வதன் மூலமும், லோகத்திற்கே வைத்தியநாத சுவாமி யாகிய, தன்வந்திரி மந்திரம் மற்றும் ஹோமம் மூலமாகவும் நோய்கள் தீரும். ஒரு சிலருக்கு, அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தனதருமங்களை செய்து கொள்வதன் மூலமாகவும் நோய்கள் தீரும். நோய்கள் வந்த பிறகு வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் முதன் முதலில் வைத்தியம் பார்த்தால் நோய்கள் நீச்சயம் நிவர்த்தி ஆகும்.



=========================================                =========================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
ஆக்கம்:


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
 M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

 

================================                                 =================================

சனி, 19 ஜனவரி, 2013

Secrets of Woman மங்கையின் ஜாதக ரகசியங்கள்


     மங்கையின் ஜாதக ரகசியங்கள்    

      ஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்ல முற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணாக அமையும்.மங்கையர்களின் ஜாதகங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்த பின்னரே பலன்களை முடிவு செய்ய வேண்டும். ஆண்களின் ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுளை குறிக்கும், ஆனால், பெண்களுக்கோ இது மாங்கல்ய ஸ்தானமாக கருதபடுகிறது. பெண்களுக்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடம். இதை விட மிக மிக முக்கியமான இடம் இரண்டாம் இடம், காரணம் இந்த இடம் 7-க்கு எட்டாம் இடமாக வருவதால், கணவனின் ஆயுள் ஸ்தானமாக இந்த இரண்டாம் இடம் வருகிறது. இந்த இரண்டாம் இடம் வலு பெற்று இருந்தாலும், இந்த இரண்டாம் இடத்தை சுப கிரகங்களில் முதல் வரிசையில் உள்ள குரு அல்லது சுக்ரன் பார்த்தால், இந்த பெண் என்றும் சுமங்கலி யோகத்தை பெறுகிறாள்.
                                   ஒரு பெண்ணின் நாலாம் பாவத்தை கொண்டு அவளது கற்பு நெறியை எடை போடலாம் என்று சில ஜோதிட நூல்கள் கூறினாலும், அவளது கற்ப்பை பற்றி முழுவதும் நமக்கு உணர்த்துவது அவளது ஜென்ம சந்திரனே ஆகும். சந்திரன் பெற்ற நட்சத்ர காலை பொருத்து பல உண்மைகளை அறிய முடியும்.
"வைத்தியன் கையை பார்ப்பான்; ஜோதிடன் காலை பார்ப்பான்"
                              இதனால் தான் இந்த ஜோதிட பழமொழி மக்கள் இடையில் புழுக்கத்தில் உள்ளது.


                              பெண்களின் கற்பு நெறியை அறிய இதை விட முக்கியம் நமது இந்திய நாட்டின் பண்பாடு, குறிப்பாக தமிழ் கலாச்சார நிலையை இங்கு உற்று நோக்குதல் மிக மிக அவசியமாகிறது.
                           பெண்களின் ஏழாம் பாவம் மூலம் நாம் அறிவது, அவளது திருமண வாழ்வு இனிக்கும, கசக்குமா? என்றும், அவளது கணவனின் குணங்கள், அவனது, ஆறிவு, ஆற்றல், மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். ஆண்களின் ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்கள் இருந்தால் அவருக்கு ஒன்றுக்கு மேல்பட்ட மனைவிகள் வாய்க்க இடம் உள்ளது என சில ஜோதிடர்கள் பளிச் என்று கூறி விடுகிறார்கள். மக்கள் இதற்கு அதிக முக்கியதுவம் தாராமல் மற்ற ஜோதிட விஷயங்களை விசாரிக்கிறார்கள். ஆனால், இதுவே பெண்களின் ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் பாவகிரகங்களான, செவ்வாய், சூரியன், ராகு, கேது, சனி இவர்கள் இருந்தால் இருதார யோகம் என்று கூறினால் அந்த பலன்கள் மிக தவறாக முடிகிறது. காரணம், தமிழ் நாட்டின் பண்பாடும் கலாச்சார பெருமையுமே காரணம். நம் நாட்டில் பெண்களுக்கு தனி மரியாதையும் மதிப்பும் கொடுக்கிறார்கள்.
                             ஆண்களின் ஜாதகத்தில் வரப்போகிற மனைவி எப்படி இருப்பாள் என்பதை அவரது ஜாதகத்தில் சுக்ரனின் நிலைபாட்டை வைத்து கூறி விட முடியும். ஆனால், பெண்களின் ஜாதகத்தில், சுக்ரனின் நிலையை வைத்து, அவளது சௌகரியங்களை எடை போட முடியுமே தவிர, அவளது கணவனின் பராக்கிரமத்தை அறிய அந்த பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலை பாட்டையும், செவ்வாய் பெற்ற நட்சத்ர காலையும், செவ்வாயை பார்த்தவர்களை வைத்தும் தான் சொல்ல முடியும்.
                         எனவே, நமது இந்திய ஜோதிட முறையில், பெண்களை பற்றி அறிய மிக நுணுக்கமாக ஆராய வேண்டும் என்றும் , ஆண்களுக்கு சொல்வது போல் சொன்னால் பிழைகள் வரும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.
==============================================          ===============                                             =====


வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.



(composed by: Jothidamamani M. Balasubramanian, Founder, VARA)


======================================                                                  ===========================

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஜோதிடத்தில் பித்தம், வாதம் & கபம்


ஜோதிடத்தில்
பித்தம், வாதம் & கபம்







ஜோதிடத்தில் பித்தம், வாதம் & கபம்
 
                   ஜாதகத்தில் நோய் ஸ்தானமான ஆறாம் இடம் வலுத்தால் பத்தாம் இடம் மூலம் உழைத்து சம்பாதித்த செல்வத்தை இரண்டாம் இடமான தனஸ்தானத்தில் வைத்திருந்தாலும் காணாமல் போகும். அதாவது 2-6-10 கர்ம ஸ்தானங்கள். ஆறாம் இடத்தின் வலு குறைந்தால் ஜாதகன் உடல் ஆரோக்யமாக இருப்பான். அவன் சம்பாதித்த பணமும் தனஸ்தானமான குடும்பத்தில் இருக்கும். ஆக, "நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்" .

                   சித்தர்களின் கணக்கு படி இந்த உடல் வாதம், பித்தம், கபம் என்கின்ற உயிர் தாதுக்கள் 1:1/2:1/4 என்ற விகிதத்தில், அதாவது 4:2:1 என்ற கணக்கில் இயங்கி கொண்டிருகிறது. எனவே, நம் உடம்பில் உள்ள கபத்தின் அளவில் இரண்டு மடங்கு பித்தம் இருப்பதாகவும், நான்கு மடங்கு வாதம் இருப்பதாகவும் கணக்கிடுகின்றனர். இதில் எது அதிகமானாலும் அல்லது குறைந்தாலும் மனிதனுக்கு நோய் வரும் எனபது அடிப்படை
 
இதையே தான் திருவள்ளுவரும்,

"மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று"


                 நவகிரகங்கள் ஒன்பது பேரும் இந்த மூன்று நாடிகளை ஆக்கிரமிக்கிறார்கள். புதன், குரு, சனி இந்த மூவரும் அதிக பங்கான வாத நாடிக்கு உரியவர்கள். சூரியன், செவ்வாய், ராகு மற்றும் கேது பித்த நாடிக்கு காரணமானவர்கள். சந்திரன் & சுக்ரன் இருவரும் கபம் நாடியை ஆட்சி செய்கிறார்கள். அவரவர்களுக்கு எந்தவிதமான வியாதி வரும் என்று அறிய அவரவர் ஆறாம் அதிபதி, ஆறாம் இடத்தில் அமர்ந்தவர் மற்றும் இந்த இருவருக்கும் லக்னாதிபதியின் தொடர்பு இவைகளை ஆராய்ந்தால் இதுவரை வந்த வியாதி, இனி வரப்போகும் வியாதி இரண்டையும் கூற முடியும். இந்த கூட்டு கிரகங்களுடன் விரையாதிபதியின் தொடர்பும், மாரக தசை புக்தியும் வரும்போது எச்சரிக்கை தேவை என்பதையும் அறிய முடியும்.

           மனிதனுக்கு மூன்று விதமான வியாதிகள் வரும், முறையே, மனோ வியாதி,கிருமிகள் மூலம் ஏற்படும் உடல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் விபத்துகள் ஆகும். இந்த மூன்றும் ஏற்படுவதற்கு காரணம் பூர்வ ஜென்மத்தின் விளைவே. இதை நாம் ஐந்தாம் பாவத்தின் மூலம் ஓரளவு மட்டும் அறிய இயலும். இதை இந்த ஜென்மத்தில் குறைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை எண்ணங்களான காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பை மற்றும் அகங்காரம் போன்ற இவை எட்டு விஷயங்களில் இருந்து விலகி இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.
 

                     உடலில் பன்னிரண்டு ராசிகளுக்கும் இடம் தந்துள்ளது நமது ஜோதிட சாஸ்திரம். மேஷம் தலை, ரிஷபம் முகம், மிதுனம் கழுத்து & மார்பு, கடகம் இதயம், சிம்மம் வயிறு, கன்னி இடுப்பு, துலாம் முதுகு (அல்லது அடிவயிறு), விருச்சிகம் ஆண் / பெண் குறி, தனுசு தொடை, மகரம் கால்கள், கும்பம் கணுக்கால், மீனம் பாதம் என வகை பிரித்துள்ளனர். சிலர் இதையே லக்னத்தில் இருந்தும் முறையே கூறுவதும் உண்டு. இதே போன்று ஒன்பது கிரகங்களுக்கும் உடலில் இடத்தை பிரித்து உள்ளது ஜோதிட கலை. எந்த கிரகம் எந்த இடத்தில் அமர்ந்தால் எந்த விதமான உடலில் உள்ள இடம் பாதிக்கும் என எளிதில் காணமுடியும்.

==================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

(composed by:   Jothidamamani M. Balasubramanian, Founder, VARA)


=================================================================