மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 29 ஜூன், 2014

திருஷ்டி ஜோதிடத்தில் பார்ப்பது எப்படி..? Dristi dosam

திருஷ்டி ஜோதிடத்தில் பார்ப்பது எப்படி..?

            “கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்கிறார்களே..? அப்படி என்றால் என்ன? கண்ணால் அடிக்க முடியுமா? மேலோட்டமாக பார்த்தால் கதை விடுகிறார்கள். என்று தான் எண்ணத்தோன்றும்.

          இப்படி இருக்க நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை அந்திமாலையில் வீட்டில் அமரவைத்து கையில் ஏதேதோ வைத்து கொண்டு சுற்றி போடுகிறார்கள். கடைகாரர்கள் கடைக்கு திருஷ்டி சுற்றுகிறார்கள். கிரகபிரவேசத்தில் வீட்டிற்கு திருஷ்டி சுற்றுகிறார்கள். சரி நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் போது சுற்றுகிறார்கள். பிரயாணம் ஆரம்பிக்கும் போது வாகனத்திற்கு திருஷ்டி சுற்றுகிறார்கள். திருமண நிகழ்வுகளில் பல தருணங்களில் அடிகடி புதுமண தம்பதியர்களுக்கு சுற்றிபோடுகிறார்கள். இவ்வளவு ஏன், அர்த்தஜாமபூஜை கோவிலில் நடந்த உடன் சாமிக்கே திருஷ்டி சுற்றிபோடுகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன், திருஷ்டியின் திருவிளையாடல்களை.

நல்லவர்கள் திருஷ்டி:

     அப்படி இந்த திருஷ்டியில் என்ன தான் அடங்கி உள்ளது? இதை ஜோதிடத்தில் பார்த்தால் திருஷ்டி தோஷம் என்கிறார்கள். திருஷ்டி யோகம் உள்ளதா? அதுவும் உண்டு என்று தான் ஜோதிடம் கூறுகிறது. தோஷம் எனபது தீமை, யோகம் என்பது நன்மை. ஆக ஒருவர் நன்மை விளைய வேண்டும் என்று பார்த்தால் திருஷ்டி யோகம் ஆகின்றது. பெரிய பற்று இல்லாத சாதுக்களின் முகதரிசனம், பெற்றோர்கள் ஆசிர்வாதம் செய்யும் போதுள்ள அவர்கள் தரிசனம், வெல் விஷ்சர் (Well Wisher) களின் முகதரிசனம், குருவாக வருபவரின் கருணை கடாட்சம் போன்றவை நிச்சயம் திருஷ்டி யோகமாகும். இவைகள் அவர்களை நன்கு வாழ வைக்கும்.

தீயவர்கள் திருஷ்டி:

    பொறாமை படைத்தவர்களின் பார்வை, உள் ஓன்று வைத்து புறமொன்று பேசுபவர்களின் பார்வை, அடுத்தவன் உயர்ந்து விட்டானே என்று பொருமுபவர்களின் விஷப்பார்வை, இவையெல்லாம் திருஷ்டி தோஷத்தை விளைவித்து விடும். மனிதர்களில் எத்தனை குணங்கள். நல்லது, கெட்டது. அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அவர்களே அவருடைய பார்வை கெட்ட பார்வையோ என்று ஓர் இடத்தில் மனம் வருந்துகிறார். இவர் திருத்தணி முருகனை மனமுருகி வேண்டுகிறார், அப்படி இருந்தும் முருகன் அவருக்கு எளிதில் காட்சி தரவில்லை, அதற்கு அவர் “ கண்ணேறு படுமென்று கனவிலேனும் கட்டென்றால் கட்டுகில்லையோ என்று தன் கண் திருஷ்டி முருகனை கெடுத்து விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இதிலிருந்து, என்ன தெரிகிறது, கண் திருஷ்டி உண்டு என்றும், அது மனிதன் இடத்தில் மட்டும் தான் உள்ளது என்றும் தெரிகிறது.

திருஷ்டி யார் மீது விழும்.

   சரி, நாம் ஜோதிடத்தில் கண் திருஷ்டி யார் யார் மீது படும் என்பதை பார்ப்போம். லக்னம் நின்ற ராசி உயிர். சந்தரன் நின்ற இடம் உடல். லக்னமாகிய உயிர் வெளியில் தெரியாது. வெளியில் தெரியும் ஒரு பொருளை தானே நாம் பார்க்க முடியும், அப்படி என்றால் கண் திருஷ்டி  சந்திரன் அம்சமான உடல் மீது தானே படும். ஆக திருஷ்டி பார்க்க சந்திரன் நின்ற ஸ்தானத்தை பிரதானமாக எடுத்து கொண்டால் சரியாக அமையும்.

திருஷ்டி தோஷம் ஏழையை கூட தாக்குமா?
     
       ஜாதகத்தில் ஜென்ம சந்திரனுக்கு கேந்திரங்களில் சுக்ரன், செவ்வாய், சனி, சூரியன், ராகு இருப்பவர்களுக்கு இந்த திருஷ்டி தோஷம் எடுத்தகையாக அமைந்துவிடும். இதே போல் சந்திரனுடன் சுக்ரன் இணைந்து இருந்து மேற்படி கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தாலும் ஜாதகரை திருஷ்டி தோஷம் உண்டு இல்லை என்று பண்ணிவிடும்.  இதில் சில விதி விலக்குகள் உள்ளது. சந்திரன் நின்ற ராசியில் ராகு, கேது, சூரியன் இவர்கள் சேர்ந்து இருந்தால் திருஷ்டி தோஷம் இவர்களை திரும்பி கூட பார்க்காது. செவ்வாய், சனி இவர்கள் இருவரில் ஒருவர் சந்திரனை பார்த்தால் திருஷ்டி தோஷம் அதிகம் இருக்கும், சொல்லப்போனால் இவர்கள் பணக்காரராக இருந்தாலும், இல்லை பரம ஏழையாக இருந்தாலும் இவரை யார் பார்த்தாலும் அவர்கள் இவர் மீது கண் திருஷ்டி போடுவது திண்ணம்.

திருஷ்டி யோகம் யாருக்கு?

      ஜாதகரின் ராசியை சுபராகிய குரு தனது 5-9 பார்வைகளால் மட்டும் பார்த்தால், இவர்களுக்கு திருஷ்டி யோகம் ஏற்பட்டு விடும். குரு தனது சப்தமபார்வையாக பார்த்தால் மற்ற கிரகங்களால் ஏற்பட்ட திருஷ்டி தோஷம் நிவர்த்தி ஆகுமே தவிர இவருக்கு யோகம் ஏற்படுவது சற்று ஆராய வேண்டியதே. அடுத்த சுபரான சுக்ரன் சந்திரனை பார்த்தாலும் மற்ற திருஷ்டி தோஷத்தை குறைக்க முடியுமே தவிர, திருஷ்டி யோகத்தை தர இயலாமல் போகிறார், மாறாக, இவரே கூட திருஷ்டி தோஷத்தை விட மிகப்பெரிய களத்திர தோஷத்தை உருவாக்கி ஜாதகனை கேவலப்படுத்தி விடுவார். இதெற்கெல்லாம் ஜோதிடத்தில் சூட்சும  விதிகள் உள்ளது.

திருஷ்டி தோஷத்திற்கு விமோச்சனம்:

எது எப்படியோ, ஜென்ம சந்திரனை குரு கேந்திரத்தில் இல்லாமல் பார்த்தால் எப்பேற்பட்ட திருஷ்டி தோஷம் இருந்தாலும் அது தெய்வபலத்தால் இல்லாமல் போய் சந்தோஷத்தை ஜாதகன் அடைவான் என்பது உறுதி.  இப்படி கிரக அமைப்பு இல்லாதவர்கள் கவலை படவேண்டாம், உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டுங்கள், அவர் அதை ஆராய்ந்து பார்த்து, உங்கள் ஜாதகத்திற்குரிய விமோசனத்தை தருவார். பிறகு உங்களுக்கே விபரம் தெரிய வரும்.


(யார் யார் கண் திருஷ்டி போடுவார்கள் என்று கூட ஜோதிடத்தில் கூற இயலும், அதை வேறு ஒரு கட்டுரையில் பேசுவோமே..)





by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

செவ்வாய், 24 ஜூன், 2014

இரட்டை வருமானம் வேண்டுமா..? double income

உங்களுக்கு இரட்டை வருமானம் வேண்டுமா..?


          இரட்டை வருமானத்தை சுலபமாக காண, உங்கள் லக்னத்திற்கு பத்தாம் இடத்தை பாருங்கள் அந்த இடம் மிதுன ராசி அல்லது மீன ராசியாக உள்ளதா என்று. அப்படி இருப்பின் உங்களுக்கு இரட்டை யோகமே. இதை வருமானத்திற்கு மட்டும் பார்க்கவும்... இதே ராசிகள் ஐந்தாம் இடமாக வந்தால் இரண்டு குழந்தைகள். . நாலாம் இடத்தில் வந்தால் இரண்டு வீடுகள். . இரண்டு வாகனங்கள். . . ஆறாமிடமாக வந்தால் இரண்டு விதமான வியாதிகள். . எதிரிகள். . ஒன்பதமிடமாக வந்தால் இரட்டை யோகம்..double பாக்கியம். லக்னமாக வந்தால் இரட்டை மனசு. . எழாமிடமாக வந்தால் . . (சட்டப்படி ஒன்றே ஓன்று தான்)  

ஆக , இரட்டை வருமானம் உள்ள ராசிகள்:
கன்னி ராசிக்காரர்கள்: இவர்களுக்கு, ஜீவன ஸ்தானமாக மிதுன ராசி உள்ளதால் ஏதோ ஒரு வகையில் இரண்டு வருமானம் வரும்.
மிதுன ராசி காரர்களுக்கு: இவர்கள் மனமே இரட்டை, இவர்கள் பத்தாமிடமும் இரட்டை ஆக, நிச்சயம் மிதுன ராசியினருக்கு இரட்டை யோக வருமானம்.
இதை ராசிக்கும் பார்க்கலாம், லக்னத்திற்கும் பார்க்கலாம், இதில் எது அதிக பலமோ அதை முதலில் பார்க்க வேண்டும். 
மற்றும் ஜீவன ஸ்தானத்தில் இரண்டு கிரகங்கள் இருந்தாலும் இரட்டை வருமானம் உண்டு, இதில் அங்கு உள்ள கிரகம், கிரக யுத்தம், அஷ்டாங்க தோஷம், பாம்புகளுடன் இணைவு போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும். பாம்புகளுடன் எத்தனை கிரகம் இணைந்தாலும் அத்தனை கிரகங்களின் பலனையும், அதாவது கிரக காரக பலன்களை பாம்பு கிரகமே கொடுக்கும் என்பதையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.  மேலுமஅவரவர் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் பார்த்து முடிவு பண்ணுவதே சிறப்பு.



சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
CELL: 9443540743

Both Online & Direct Astrology Classes are undertaking
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
facebook: Bala Jothidar

வியாழன், 12 ஜூன், 2014

குரு மாற்றம் - மக்களுக்கு (தேதி) தடுமாற்றமா..? Guru Date

குரு மாற்றம் - மக்களுக்கு (தேதி) தடுமாற்றமா..?


                ஒவ்வொரு ஜோதிடரும் குரு பெயர்ச்சியை ஒவ்வொரு தேதி என்கிறார்கள். ஒரே குழப்பமாக உள்ளது என்று மக்கள் நினைக்கிறார்கள். சிலர் ஏது எங்கே மாறினால் எனக்கென்ன என்று கூறுவார்கள், ஆனால் குரு பெயர்ச்சி பலனை மட்டும் ஓரக்கண்ணால் படிப்பார்கள், அப்படியே அவரது சொந்தங்களுக்கும் படிப்பார்கள். ஆக, இன்றைய சுழலில், உலகம் முழுவதும் ஜோதிடத்தை நம்புகின்றது. காரணம் இதில் உண்மை இருப்பதனால் தான்.
               வாக்கிய பஞ்சாங்கத்தில் 13-6-2014 என்றும், திருக்கணித பஞ்சாங்கத்தில் 19-6-2013 தேதியும் மாறுவதாக கணித்துள்ளனர். இதில் ஏது சரி என்று சொன்னால் ஒரு பெரிய சர்ச்சையே வந்து விடும்  (எனது தனிப்பட்ட் கருத்தை இங்கு வெளியிடவில்லை.)
             எது எப்படியோ, குரு தற்போதுள்ள மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்லுவது உண்மை. அதாவது அவர் 120 இருந்து  121 டிகிரிக்கு செல்கிறார். இதனால் நிச்சயம் பூமியில் வசிக்கும் ஜீவன்களுக்கு சாதக பாதகங்கள் நடப்பதும் உறுதி.
           குரு பனிரெண்டு வருடங்களில் பனிரெண்டு ராசிவழியாக சூரியனை ஒரு முறை சுற்றுகிறார். அதாவது ஒரு ராசியை கடக்க தோரயமாக ஒரு வருடம் ஆகின்றது. சரியாக 13-6-2014 தேதி மாலை 5 மணிக்கு டக்கென்று கடகத்திற்குள் துள்ளி குதிப்பதில்லை குரு. மிக மிக மெல்லமாக நுழைகிறார்.
           ஆக, மக்கள் இதே தேதி, இதே நேரத்தில் போய் குருவை கும்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த நேரத்தில் தான் கோவிலிலும் பூஜை செய்வார்கள். வருட கிரகம் ஒரு ராசிக்குள் நுழைவதற்கு முன்னாலே ஒரு மாதத்திற்கு முன்பே அந்த ராசியின் தன்மை வந்து விடும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அப்படி என்றால் குரு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் முன்பே கடக ராசியில் நுழைந்த பலனை தர ஆரம்பித்து விட்டார்.

             அப்படி இருக்க, ஏன், முட்டி, மோதி கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு குருவை வழிபடுவது. ஆற, அமர குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு ஓய்வு நேரத்தை குறித்து கொண்டு, பொறுமையாக கோவிலுக்கு சென்று, நவகிரகம் இருக்கும் சன்னதிக்கு சென்று, நவகிரகங்களில் வடக்கு முகமாக யானை வாகனத்தில் இருக்கும் பிரஹஸ்பதி என்கின்ற குருவை வழிபடவும். நிச்சயம் குருவின் பார்வை உங்கள் மீது பட்டு மங்களகரமான வாழ்வு வரும்.>>Bala Jothidar



சித்தாந்த ரத்னம்பஞ்சங்க கணிதர்ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
ஈமெயில்: jothidananban@gmail.com


ஞாயிறு, 8 ஜூன், 2014

குரு என்பவர் யார்? Who is Guru?

குரு என்பவர் யார்?

குரு வியாழனா..?   குரு தட்சிணாமூர்த்தியா…?




            குரு பெயர்ச்சி என்று அவ்வப்பொழுது ஜோதிடர்கள் சொல்லுகிறார்களே...இதன் பொருள் என்ன என்று நிறைய பேருக்கு இன்னும் தெரியவே இல்லை. ஏன், சில ஜோதிடர்களுக்கு கூட இதன் பொருள் தெரியவில்லை என்றே கூறலாம். 
            காரணம், ஜாதகத்தில் குரு நீச்சமாகியோ, 6-8-12 –இல் மறைந்து இருந்தாலோ, அல்லது சூரியனுடன் சேர்ந்து அஸ்தமன தோஷம் பெற்று இருந்தாலோ, அல்லது கோச்சார குரு ஜென்மராசிக்கு 1-3-4-6-8-10-12–இல் இடம் பெயர்ந்தாலோ உங்களுக்கு குரு தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி நீங்கள் ஒவ்வொரு வியாழன் கிழமையும் குரு தக்ஷினாமூர்த்திக்கு சென்று கடலை மாலை போட்டு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முடிந்தால் அந்தணனுக்கு தானம் கொஞ்சம் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.
          ஆனால் உண்மையில் கிரக மாற்றம் நவகிரகங்களில் உள்ள குரு என்கின்ற வியாழனுக்கு தானே தவிர சிவனின் மறுஅம்சமான தக்ஷினாமூர்த்தி அல்ல. கிழ்கண்ட வித்தியாசங்களை நீங்கள் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.


குரு என்கின்ற வியாழன்
குரு என்கின்ற தட்சிணாமூர்த்தி
சூரியனை சுற்றுகின்ற நவகிரகங்களில் ஒருவர் தான் குரு என்கின்ற வியாழன்.
அண்டச்சாராச்சரங்களின் அதிகாரி. சிவமூர்த்தங்களான நடராஜர், பிட்சாண்டவர், போல் தக்ஷினாமூர்த்தி. அதாவது சிவரூபம். பரமேஸ்வரனின் அம்சம்.
சிவன் இவருக்கு இந்த நவகிரகத்தில் குரு பதவியை தந்தார்.
இவரே சிவனாக உள்ளார்.
சூரியனை சுற்றும் கிரக வரிசையில் இவர் ஐந்தாவது வட்டத்த்தில் சுற்றுகிறார்.
இவர் யாரையும் சுற்றுவது இல்லை. கோடிகணக்கான சூரியர்கள் இவரை சுற்றுவதாக சாஸ்திரம் சொல்லுகிறது.
பூமியில் உள்ள ஜீவன்களை தமது 5-7-9 வது பார்வைகளால் பார்த்து லவ்கிக சுகங்களை தருகிறார்.
அண்டத்தில் உள்ள ஜீவராசிகளின் தன்மைக்கேற்ப ஞானதீட்சை அளிப்பவர்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்ற ஐந்தொழில் ஆற்றுபவர்.
கடலை சுண்டல். மஞ்சள் வஸ்திரம். கனக புஷ்பராகம் இப்படி பல பரிகாரகங்களை செய்தால் மனம் மகிழ்பவர்.
உயர்ந்தஅறிவும் தூயஅன்பும் தான் இவருக்கு தேவை.
நல்ல புத்தி, சத்புத்திரன், தனம் தருபவன், குடும்ப சந்தோஷத்தை தருபவன். பணப்பெட்டிக்கு அதிகாரி.
குடும்பம், மனைவி, சொத்து, சுகம் இவைகளை விட்டவர்களுக்கு மோட்சம்   அருளுகிறார்.
இவர் தேவ குரு என்றும்  பிரஹகஸ்பதி என்றும் அழைக்கபடுகிறார். இவருக்கு எதிரியாக அசுர குருவான சுக்ரன் உள்ளார்.  யானை வாகனம் உள்ளவர். சூரிய மண்டலத்தில் வடக்கு இவரது பகுதி.
இவர் கல்லாலமரத்தின் கிழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கும், நந்தி தேவருக்கும் ஆதி குருவாக உள்ளவர். பயில்பவர்கள் வடக்குமுகமாக இருப்பதால் இவர் தெற்கு முகமாக அமர்ந்துள்ளார். அண்டச்சாராசரத்தின் ஆதிக்கும் அந்தத்திற்க்கும்  இவரே அதிபதி. அறியாமை என்கின்ற இருளை போக்குபவர். ஆணவ மலமான முயலகனை காலடியில் வைத்துள்ளார்.
இவர் அந்தணன் ஜாதி.
ஜாதி, மதம், குலம் இவற்றிற்கு அப்பாற்பட்டவன்.
சத்துவ குணம் உள்ளவர்.
சத்துவ, ரஜோ, தம்ஸ என்கின்ற முக்குனத்தையும் கடந்தவர். ஜாக்ருதி, ஸ்வப்னா, சுஷுக்தி, நிலைகளை கடந்தவர்.
ஆங்கிரச முனிவரின் மகனாக பிறந்த இவருக்கு இறப்பும் உண்டு, மறுபடியும் பிறப்பும் உண்டு.
இவருக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை. பிறப்பு இறப்புவிற்கு அப்பாற்பட்டவன். காலகாலன் இவரே.
இவருக்கு மூன்று மனைவிகள் சுபா, தாரா, மம்மதா. எட்டு பெண் குழந்தைகளும் ஒன்பது ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இவரே பதியாக உள்ளதால், பசு பாசம் கடந்தவர்.
ஜோதிடசாஸ்திரப்படி இவருக்கு தனுசு, மீனம் ராசிகள் ஆட்சி, கடகத்தில் உச்சம், மகரத்தில் நீச்சம். மேலும் இவர் பூனர்பூசம், விசாகம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிகாரி.
அண்டத்தில் உள்ள அத்தனை சாஸ்திரமே இவர்தான்.
இவர் ஆகாஷ் தத்துவத்தில் இருப்பவர்.
இவர் பஞ்சபூத தத்துவம் அனைத்தும் கடந்தவர்.
இவருக்கு மேல் அதிதேவதை ஒருவர் உள்ளார்.
இவருக்கு மேல் ஒருவரும் இல்லை.

>>>>>

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
ஈமெயில்: jothidananban@gmail.com