மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 நவம்பர், 2014

அவசரபுத்திகாரன்.

அவசரபுத்திகாரன்.

      லக்னத்தில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகனை எல்லோரும் அவசரபுத்தி காரன் என்பார்கள். அதுவும் லக்னம் அக்னி ராசியாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் அதிவேக அவசரக்காரன் என்ற பெயரை எடுத்துவிடுவான். ஒரு சிலர் இவர்களை அவசரகுடுக்கை என்று கூட கூறுவார்கள். 




    செவ்வாய் இயற்கையாகவே நெருப்பு கிரகம் என்பதால் நெருப்பில் பட்ட அனைத்தும் நல்லது கெட்டது பாராமல் உடனே (பொறுமையாக இல்லாமல்) கருகி விடுவதால் லக்னத்தில் செவ்வாய் உள்ளவர்கள் நாம் நல்ல செயல் செய்கிறோமா அல்லது மற்றவர்களுக்கு தீமை செய்கிறோமா என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் தடாலென்று ஒரு காரியத்தை செய்துவிடுவதால் இவர்கள் அவசரபுத்தியும் அதே நேரத்தில் செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் இவர்களுக்கு ரத்தம் உடனே சூடேறி கோபக்கனல் வீசும். 

    உண்மையில் இவர்கள் மனதில் பட்டவைகளை ஒளிவு மறைவு இன்றி வெளியில் கொட்டுபவர்கள். இதனால் இவர்களை மற்றவர்கள் அணுகும்போது உஷாராக அணுகுவார்கள் மேலும் ஒரு சிலர்கள்  இவர்களை கொஞ்சம் ஒதுக்கி கூட வைத்துவிடவும் கூடும். 

****************************************************************


சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக